<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-743742264340340758</id><updated>2012-01-17T23:15:20.918-08:00</updated><category term='இசை'/><category term='எழுத்தாளர்'/><category term='ஹரன் பிரசன்னா'/><category term='தூர்தர்ஷன்'/><category term='இலக்கியம'/><category term='புத்தகம்'/><category term='சிறுகதை'/><category term='பெரியார்'/><category term='டி.வி.'/><category term='நரேன்'/><category term='நடிகர்'/><category term='தி.மு.க. அண்ணா'/><category term='நேர்காணல்'/><category term='நிழல்கள்'/><category term='திராவிடர் கழகம்'/><category term='கவிதை'/><category term='புத்தகம'/><category term='ஆனைமுத்து'/><category term='இலக்கியம்'/><category term='பெண்'/><category term='குறும்படம்'/><category term='கதை'/><category term='மால்கம் எக்ஸ்'/><category term='நூல்'/><category term='அறிமுகம்'/><category term='கட்டுரை'/><category term='சினிமா'/><category term='நூல் விமர்சனம்'/><category term='தேவர்'/><category term='பசும்பொன் முத்துராமலிங்க தேவர்'/><title type='text'>பாலு சத்யா</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>29</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-3415014975582177535</id><published>2012-01-17T23:10:00.000-08:00</published><updated>2012-01-17T23:15:20.980-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>எழுத்துக் கிறுக்கு!</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;கா&lt;/span&gt;லம் தவறித்தான் இப்போதெல்லாம் மழை பெய்கிறது. மார்கழி, தை மாதங்களில், குளிர்காலத்தில். வீட்டில் இருந்து கிளம்பும்போதே ஆரம்பித்திருந்தது. வேறு வழியில்லை. நான் ரமேஷ் குமார் சாரைப் பார்த்துத்தான் ஆகவேண்டும். சுசீலா கொடுத்த குடையில் இரண்டு கம்பிகள் ஒடிந்திருந்தன. ஆனாலும், அதை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தேன். குளிரக் குளிர அடித்த சாரல் என் தோளில் விழுந்தாலும் எனக்கு உறைக்கவேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;விடிந்தால் பொங்கல் பண்டிகை. சார், கணிசமான தொகை ஒன்றை இன்றைக்குத் தருவதாகச் சொல்லியிருந்தார். அதைக்கொண்டுதான் வினோதினிக்கும் சுசீலாவுக்கும் எனக்கும் புத்தம்புது உடைகள் வாங்கவேண்டும். கரும்பையும் பொங்கலையும் இனிக்க இனிக்கச் சுவைக்கவேண்டும். ‘காணும் பொங்கல்’ தினத்தில் முடிந்தால் குடும்பத்தோடு எங்காவது வெளியே சென்று வரவேண்டும். குறைந்தபட்சம் உயிரியல் பூங்காவுக்காவது போய்வரலாம். வினோதினி, கரடியைப் பார்த்ததே இல்லை. தாம்பரம் சானடோரியத்திலிருந்து, வடபழனி பஸ்ஸில் ஏறினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அ&lt;/span&gt;து நடந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும்கூட என்னால் மறக்க முடியாத சம்பவம் அது. என்னத்தையாவது எழுதி, எதையாவது சாதித்துவிட மாட்டோமா என்கிற உத்வேகம் எனக்குள் கனன்றுகொண்டிருந்த காலம் அது. &lt;br /&gt;&lt;br /&gt;மதுரைக்குப் பக்கத்தில் அரைமணி நேரம் பயணம் செய்தால் வரக்கூடிய ஊரைச் சேர்ந்தவன் நான். கால் மணி நேரத்தில் மொத்த ஊரையும் சுற்றி வந்துவிடலாம். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற மனிதர்கள் மொத்தபேரும் எனக்கு அத்துப்படி. அவர்களுக்கு மிக நெருங்கிய, வெளியூரில் வசிக்கும் உறவினர்களின் முகங்கள்கூட எனக்குப் பரிச்சயம். அப்படிப்பட்ட ஊரைவிட்டுவிட்டு, சென்னையில் தஞ்சம் புகுந்த ஒருவன்! &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஆசை. எழுதுகிற ஆசை. மூன்றாம் வகுப்புப் படிக்கும்போதே, விக்கிரமாதித்யன் கதைகள் முழுத் தொகுப்பும் படித்தவன். கல்கி, சாண்டில்யன், சுஜாதா, பாலகுமாரன்... வளர வளர சா. கந்தசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன்... என்று பட்டியல் நீண்டு, பெயர் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய அத்தனை புத்தகங்களையும் லைப்ரரியில் தேடித் தேடி வாசித்தவன். என்னமோ எழுதுகிறவனுக்குத்தான் இரண்டு கொம்புகள் முளைத்து இருக்கிற மாதிரியான பிரமை என்னைப் பீடித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் பேச்சைக் கேட்காமல் சென்னை வந்தேன். லோல்பட்டேன். இரண்டு பத்திரிகைகளில் ஃப்ரீலேன்ஸ் நிருபர். அதில் கிடைக்கிற காசைக்கொண்டு முழுதாக ஒரு நாள்கூட சாப்பிட முடியாது. ஆனாலும், எனக்கு எழுத்துப் பிடித்திருந்தது. ஒரு கட்டுரைக்குக் கீழே, அல்லது ஒரு பேட்டிக்குக்கீழே என் பெயர் சிறியதாக வெளி வரும் பக்கங்கள் எனக்கு உற்சாகம் அளிப்பவையாக இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;ஏச்சு, பேச்சுகளுக்கிடையில் சொந்த அக்கா வீட்டைவிடுத்து, பெரும்பாலும் நண்பரின் வீட்டில் தங்குவதே வழக்கமாகிப் போனது. நண்பர் ரவி பெருங்களத்தூரில் இருந்தார். அவர் வீடு என்று சொல்வது தவறு. அது என் வீடு. ரவியின் அம்மா, என்னை அவருடைய மூன்றாவது பிள்ளையாகவே பார்த்துக்கொண்டார். ரவிக்கு ஒரு அண்ணன். கிருஷ்ணன். இப்படியெல்லாம்கூட உதாரணமாக ஒருவரால் வாழ முடியுமா என்பதைப் போல அத்தனை அன்பு, வாஞ்சை கிருஷ்ணனுக்கு என் மீது. அந்த வீட்டில், ஒரு மனிதன் சோம்பேறி ஆகக்கூடிய அளவுக்கு உபசரிப்பு, கவனிப்பு. ஆனாலும், நான் பத்திரிகை அலுவலகத்துக்கு ஓடினேன். ஏதேதோ பேட்டிகள் எடுத்தேன், கட்டுரைகள் கொடுத்தேன், சமயங்களில் என் கவிதைகளையும் சிறுகதைகளையும்கூடக் கொடுத்தேன். வேறு வழியில்லாமல், அவை பிரசுரமாயின. &lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு ஓடினாலும், வாழ்க்கை என்று ஒன்றிருக்கிறதல்லவா! பாரதி அண்ணன் என்னை ஒருநாள் அழைத்தார். அன்போடு விசாரித்தார். ‘இப்பிடி இருந்தீங்கன்னா செத்துப் போயிடுவீங்க முரளி! பேசாம வேற வேலையப் பாருங்க! நாளைக்கு நான் ஒரு அட்ரஸ் குடுக்குறேன். உங்க படிப்பறிவுக்கு அங்க வேலை கிடைக்கும். நான் சொன்னேன்னு சொல்லுங்க!’ &lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்ன முகவரி, ஒரு பிரபல இயக்குநருடையது. முதலில் நான் மிரண்டுபோனேன். சினிமாவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? அல்லது ஒரு தீவிர வாசகனுக்கும் இயக்குநருக்கும்தான் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ‘முடியும்’ என்று அழுத்தம் திருத்தமாக நிரூபித்தார் அந்த இயக்குநர். அவர், என்னை பாரதி அண்ணன் அனுப்பிய ஆளாகப் பார்க்கவில்லை. ‘வாசிப்பு அனுபவம் ஏதாவது இருக்கா?’ என்று கேட்டார். சொன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;‘சமீபத்துல என்ன படிச்சே?’&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னேன். அன்றைக்கே அந்த இயக்குநர் என்னை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். அவருக்கு ஏற்கெனவே இருக்கும் செல்லப் பிள்ளைகளில் நானும் ஒருவனாகிப் போனேன். எவ்வளவு இன்னலிலும் மாதா மாதம் சம்பளம் கொடுக்க மட்டும் தயங்க மாட்டார். வேலை இல்லையென்றாலும், மதிய ஒரு நேர சாப்பாடாவது உறுதி அவர் அலுவலகத்தில். ஐம்பத்தாறு எபிசோடுகளைக்கொண்ட ஒரு டெலி சீரியல், ஒரு இந்தி டெலி ஃபிலிம், ஒரு முழு நேரத் தமிழ்ப்படம். அவரிடம் வேலை பார்த்தேன். அதற்கு மேல் என்னால் அங்கே தாக்குப் பிடிக்க முடியவில்லை. இடையில், சுசீலாவை காதல் திருமணம் செய்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஓ&lt;/span&gt;ர் இயக்குநரைவிட்டு வெளியே வருகிற உதவியாளர், தனியாக படம் செய்ய முயற்சிப்பதுதான் தமிழ் சினிமா உலகின் இயல்பு, மரபு. நான் அந்த வழக்கத்துக்கு மாறாக ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன். அது மாதப் பத்திரிகை. சொற்ப சம்பளம். மாதா மாதம் வாடகை கொடுக்கவேண்டும், மளிகைச் சாமான் வாங்கவேண்டும், கூடவே மருத்துவம், போக்குவரத்து, இன்னபிற... ஒரு மனிதனால் வேறு என்னதான் செய்ய முடியும்? வாழ்க்கை என்னை பயமுறுத்தியபடியே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது வந்ததுதான் அந்த வாய்ப்பு. ரமேஷ் குமார் சாரைப் போய்ப் பார்க்கும்படி, பாலு அண்ணன் சொன்னார். அண்ணன் என் ஊர்க்காரர். என்மீது பிரியம் கொண்டவர். சமயங்களில், கடன் கொடுத்து உதவுபவர். பாலு அண்ணன், இரண்டு டி.வி. மெகா சீரியல்களுக்கு வசனம் வேறு எழுதிக்கொண்டிருந்தார். எனக்கு வானத்தில் மிதப்பது போல இருந்தது. ஒரு சீரியலுக்கு, ஒரு எபிசோடுக்குக் கிடைக்கும் வருமானம் என்னையும் என் குடும்பத்தையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுபோய்விடுமே என்கிற நப்பாசை, ஒரு நாக்குப் பூச்சி போல அடி மனசில் ஊற ஆரம்பித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ரமேஷ் குமார் சார், அன்றைய தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு புள்ளி. கிட்டத்தட்ட நான்கு தினசரி சீரியல்களுக்கும், ஒரு வார சீரியலுக்கும் திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தார். அவர் கடைக்கண் பார்வை கிடைப்பதே பெரும் பாக்கியம். அவரைப் பார்த்தேன். அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் அன்பாகப் பேசினார். ஞாயிற்றுக் கிழமை புது சீரியலுக்கான டிஸ்கஷன் இருப்பதாகச் சொல்லி வரச் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;டி&lt;/span&gt;ஸ்கஷன். இதைப் போல தமிழ் சினிமாவில் பொய்யான வார்த்தை வேறு ஒன்று இருக்க முடியாது. பேருக்கு ஓர் ஒருவரிக் கதையை மட்டும் வைத்துக்கொண்டு, என்னத்தையோ பேசி, மற்றவர்களின் எண்ணங்களை, கருத்துகளை, கதையைத் திருடிப் போடுகிற லாகவம் அது. இதற்கு டி.வி. சீரியல்களும் விதிவிலக்கல்ல என்பது எனக்கு ரமேஷ் குமார் சார் ஆபீஸுக்குப் போன தினத்தில் புரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய நான்கு நண்பர்கள் ஏற்கெனவே உட்கார்ந்திருந்தார்கள். அவர், என்னை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். எல்லோரும், நான் ஏன் அவ்வளவு பெரிய இயக்குநரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன் என்று ஆச்சரியமாகப் பார்த்தார்கள். டிஸ்கஷன் ஆரம்பித்தது. ரமேஷ் குமார் சார், தன் லைனைச் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;‘கோயம்பத்தூர் பக்கத்துல ரொம்ப பாரம்பரியமான ஒரு குடும்பம். அப்பா ஒரு கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல பெரிய போஸ்டிங்க்ல இருந்தவரு. இப்போ நரம்புக் கோளாறால நடக்க முடியாம வீட்டுல ஈசி சேரே கதின்னு கெடக்குறவரு. மூணு பொண்ணுங்க. ரெண்டு பசங்க. ரெண்டு பொண்ணு காலேஜ் முடிச்சுட்டு வீட்ல இருக்குதுங்க. ஒருத்தி ப்ளஸ்டூ படிக்கிறா. ஒரு பையன் செல்போன் கடை வச்சிருக்கான். இன்னொருத்தன் காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருக்கான். இந்த சூழ்நிலைல அப்பாவோட பங்காளி ஒருத்தன், அவங்க இருக்குற வீட்டுல தனக்கும் பங்கிருக்குன்னு கேஸ் போடுறான். ப்ளஸ்டூ படிக்கிற பொண்ணு, எப்பிடி தன்னோட சித்தப்பாவோட சண்டை போட்டு, வீட்டைக் காப்பாதுறாங்கறது கதை. கூடவே, டிராக்குல மத்தவங்களோட பிரச்னைகள், கதைகள் எல்லாம் வருது... எப்பிடி?’&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் கை தட்டாத குறையாக கதையை சிலாகித்தார்கள். நான் மட்டும் பேசாமல் இருந்தேன். ‘என்ன முரளி! எதுவுமே சொல்லாம இருக்கீங்க?’ என்று தூண்டினார் ரமேஷ் குமார். &lt;br /&gt;&lt;br /&gt;‘சார்... லைன் ஓ.கே.தான் சார். ஆனா, ஸ்கிரீன் ப்ளே பண்றதுக்கு இது பத்தாதே சார்... ஒவ்வொரு கேரக்டரோட டீடெயிலையும் பேசணுமில்ல?’&lt;br /&gt;&lt;br /&gt;‘அதுக்குத்தானே இங்க உக்காந்திருக்கோம்?’ என்று காட்டமாகச் சொன்னார் உட்கார்ந்திருந்த ஒருவர். &lt;br /&gt;&lt;br /&gt;விவாதம் ஆரம்பித்தது. கதா பாத்திரங்களை அலசினார்கள். பேசினார்கள், பேசினார்கள், பேசினார்கள். இடையில் டீ குடித்தார்கள், சிகரெட் புகைத்தார்கள், மதிய உணவு சாப்பிட்டார்கள், ஸ்நாக்ஸ் கொறித்தார்கள், மாலை ஆனவுடன் எல்லோரும் ஒரு பாருக்குப் போய் குடித்தார்கள். எதுவும் ஒரு முடிவுக்கு வரவில்லை. நான் மட்டும் கதையை அசை போட்டபடி, அடுத்த நாள் காலையில் வருவதாக ரமேஷ் குமார் சாரிடம் சொல்லிவிட்டு, வீடு வந்து சேர்ந்தேன். ‘போன காரியம் என்ன ஆச்சு?’ என்கிற சுசீலாவின் கேள்விக்கு என்னால் தீர்க்கமாக பதில் சொல்ல முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இரவில் தூக்கம் பிடிக்கவில்லை. கதையையே அலசினேன். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு, விளக்கைப் போட்டு, ஒரு பேப்பரில் எழுத ஆரம்பித்தேன். கதைப்படி, இளையபெண் எப்படியெல்லாம் பிரச்னைகளை எதிர்கொள்கிறாள், குடும்பத்தாருக்கு வரும் இன்னல்கள் என்னென்ன... எல்லாவற்றையும் குறித்தேன். முதல் பத்து எபிசோடுகளுக்கான திரைக்கதையையும் வடிவமைத்தேன். இரவு மூன்று மணிக்கு நிம்மதியாகப் படுத்து உறங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அ&lt;/span&gt;டுத்த நாள் ரமேஷ் குமார் சாரின் அறைக்கு நான் போனபோது, இரண்டுபேர்தான் உட்கார்ந்திருந்தார்கள். மற்ற இருவரைக் காணவில்லை. எல்லோரும் சோர்வாக இருந்தார்கள். கதையை எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது என்கிற தயக்கத்தில் இருந்தார்கள் என்பது பார்த்தவுடனே புரிந்தது. நான் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். பத்து எபிசோடுகளுக்கான திரைக்கதையையும் சொன்னேன். சார், ரொம்ப உற்சாகமாகிவிட்டார். என்னைத் தோளில் தட்டிக் கொடுத்தார். மதியம் உயர்தர உணவகத்தில் இருந்து எல்லோருக்கும் சாப்பாடு வரவழைத்தார். சாப்பிட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் கிளம்பும்போது, என்னைத் தனியாக அழைத்து இருநூறு ரூபாய் பணத்தை என் பாக்கெட்டில் உரிமையாக வைத்தார். ‘முரளி! நாளான்னிக்கி புரொட்யூஸர்கிட்டயும், சேனல்லயும் கதை சொல்லப் போறேன். எப்பிடியும் ஓ.கே. ஆயிடும். நீங்கதான் உதவித் திரைக்கதை. அவங்களுக்கு ரெகுலரா வசனம் எழுதுறது துரைன்னு ஒரு ஆளு. அவ்வளவு ஈசியா அந்த கம்பெனிலருந்து அவனைத் தூக்க முடியாது. ரெண்டு மாசம் பொறுத்துக்கோங்க. உங்களையே டயலாக் ரைட்டரா போட்டுடுறேன். அப்புறம் எபிசோடுக்கு இவ்வளவுன்னு ரேட் பேசிக்கலாம். அது வரைக்கும் மாசம் பத்தாயிரம் தர்றேன். மத்தபடி, போக்குவரத்து, இதர செலவுகளைப் பாத்துக்கலாம். என்கூட உதவியா இருங்க. என்ன?’ &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சந்தோஷமாக இருந்தது. டிஸ்கஷனில் நான் அடைந்த கடைசி சந்தோஷ தருணம் அதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ரமேஷ் குமார் சாருடைய கதை ஓ.கே. ஆக ஒன்றரை மாதம் பிடித்தது. ஒப்பந்தம் எதுவும் தயாரிப்பு நிறுவனத்துடன் போடாமல், பணம் பெயராது. எனவே, அவரிடம் பணம் கேட்க எனக்கே கூச்சமாக இருந்தது. ஆனாலும் நிலைமை சரியாக இல்லை. இடையில் அவரிடமே ஐநூறு ரூபாய் கடன் வாங்குபடி ஆகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சீரியல் ஒப்பந்தம் ஆன பிறகு, சார் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸாகக் கொடுத்தார். இன்னும் இரண்டு மாதத்தில் சீரியல் ஆரம்பிக்க இருப்பதால், வேகமாக முதல் ஷெட்யூலுக்கான திரைக்கதையை எழுதவேண்டும் என்றார். சீன்களைச் சொன்னார். நான் குறித்துக்கொண்டேன். ‘ஏற்கெனவே ரெண்டு சீரியல் ஓடிக்கிட்டிருக்கு முரளி! அதுனால என்னால இதுல ஃபுல்லா கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. நீங்கதான் எல்லாத்தையும் பாத்துக்கணும். ஓ.கே.?’&lt;br /&gt;&lt;br /&gt;நான் ‘சரி’ என்றேன். பத்து நாளைக்குள், முதல் ஷெட்யூலுக்கான முழுத் திரைக்கதையையும் எழுதிக்கொண்டு போய் அவரிடம் கொடுத்தேன். கையோடு பிரித்துப் படித்த, ரமேஷ் குமார் சார் முகம் மகிழ்ச்சியில் பூரித்துக்கிடந்தது. அவ்வப்போது, ‘பலே’ சொன்னபடி செல்லமாக என் முதுகில் அடித்தார். கடைசியாக, ‘சின்னதா கொஞ்சம் கொஞ்சம் சேஞ்ச் பண்ணணும். நான் பாத்துக்கறேன். அடுத்த மாசம் ரெண்டாம் தேதி, புரொட்யூஸர் காண்ட்ராக்ட் போட்டு, அட்வான்ஸ் குடுத்துடுவாரு. நீங்க போன் பண்ணிட்டு வாங்க!’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் கிளம்பும்போது எனக்கு தற்போது எந்த வேலையும் இல்லாத நிலையைச் சொன்னேன். பொங்கலுக்கு ஏதாவது பணம் வேண்டும் என்பதை நாசூக்காகத் தெரிவித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;‘அவ்வளவுதானே! பொங்கலுக்கு முதல் நாள் ஈவினிங் வந்துடுங்க. நான் இல்லைன்னாலும், ரூம்ல யாராவது இருப்பாங்க. குடுத்துட்டுப் போயிடுறேன். வாங்கிக்கங்க! அப்புறம் கணக்குப் பாத்துக்கலாம்.’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அ&lt;/span&gt;வர் சொன்ன தினத்தில், நான் மழையில் பாதி நனைந்தபடி அவர் ஆபீஸுக்குப் போனபோது, பூட்டியிருந்தது. பதறிப் போனேன். அலுவலக எண்ணுக்கு போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. அவர் செல்போன் ஸ்விட்ச்டு ஆஃப். நான் அவர் இருந்த கட்டடத்துக்கு எதிர்த் திசையில் எப்படியாவது அவர் வந்துவிடமாட்டாரா என்கிற ஆதங்கத்தில், ஒரு டீக்கடை வாசலில் ஆவலோடு காத்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டுக்கு போன் செய்து, சுசீலாவிடம் நான் வர கொஞ்சம் தாமதமாகும் என்று சொன்னேன். இடை இடையில், ரமேஷ் குமார் சாருடைய செல்போனுக்கு போன் செய்யவும் தவறவில்லை. ஒரே பதில். ‘சுவிட்ச்டு ஆஃப்.’ அன்றைக்கு பைத்தியம் பிடித்தது போலப் பெய்துகொண்டிருந்தது மழை. ஆழ்வார் திருநகரில், மழை பெய்தால், சாலைகளில் இவ்வளவு நீர் தேங்கும் என்பதே எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை முழுவதுமாக அற்றுப் போன கணத்தில், இரவு ஒன்பதே கால் மணிக்கு ரமேஷ் குமார் சார் என் லைனுக்கு வந்தார். ‘என்னா முரளி! இப்பதான் பாத்தேன். உங்கட்டருந்து இவ்வளவு மிஸ்டு காலு...’ அவர் குரல் குழறியபடி இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘சார்! உங்கட்ட பணம் கேட்டிருந்தேனே சார்... இன்னிக்கி வரச் சொன்னீங்களே... நாளைக்கு பொங்கல்...’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமா இல்ல. சாரி, சாரி. ஒண்ணு பண்ணுங்க. நம்ம ஆபீஸ் வாசல்லயே நில்லுங்க. இன்னும் டென் மினிட்ஸ்ல நம்ம ஆள் ஒருத்தன் வந்து உங்களுக்கு ஒரு கவர் கொடுப்பான். ஹேப்பி பொங்கல்!’&lt;br /&gt;&lt;br /&gt;அவர் போனை வைத்துவிட்டார். எனக்கு உற்சாகம் பிறந்தது. என்னவெல்லாம் வாங்கலாம், எப்படி பொங்கலைக் கொண்டாடலாம் என்கிற கனவில் மிதந்தபடி இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சரியாக பத்து நிமிடத்தில், சார் சொன்ன ஆள் பைக்கில், மழைக்கோட்டு அணிந்தபடி வந்தார். ஒரு கவரை நீட்டினார். நான் ஆவலோடு பிரித்துப் பார்த்தேன். ஒரே ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு. &lt;br /&gt;&lt;br /&gt;‘இவ்வளவுதான் குடுத்தாரா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏன் பத்தாயிரம் ரூபா கேட்டிருந்தீங்களா? டவுட்டுன்னா நாளைக்கி சார்கிட்ட பேசிக்கங்க!’ அந்த மனிதர் நக்கலாகச் சொல்லிவிட்டு, பைக்கை ‘விருட்’டென்று எடுத்துக்கொண்டு போனார். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. ‘வினோதினியால் காணும் பொங்கலன்று கரடியைப் பார்க்க முடியாது.’&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த மாதம் “தீக்கதிர் பொங்கல் மலரில்” வெளியான சிறுகதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-3415014975582177535?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/3415014975582177535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=3415014975582177535' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/3415014975582177535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/3415014975582177535'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2012/01/blog-post.html' title='எழுத்துக் கிறுக்கு!'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-4763664426129800347</id><published>2011-12-26T02:43:00.000-08:00</published><updated>2011-12-26T03:13:40.897-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடிகர்'/><title type='text'>அறியப்படவேண்டிய நடிகர் - 2</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-Wb7xRSGIEDE/TvhV9Ujs4hI/AAAAAAAAAGI/bClzJ-LTBzM/s1600/18247%2Be%2B%2B6x4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-Wb7xRSGIEDE/TvhV9Ujs4hI/AAAAAAAAAGI/bClzJ-LTBzM/s320/18247%2Be%2B%2B6x4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690392641161454098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘சினிமாவை முழுக்க தெரிஞ்சவங்க யாரும் இல்ல!’&lt;br /&gt;- நடிகர் மூணார் ரமேஷ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்தபோது, யார் இந்த வில்லன் என்று அத்தனைபேரின் புருவத்தையும் உயர வைத்தவர் மூணார் ரமேஷ். இயற்பெயர் ரமேஷ் பாபு. சொந்த ஊரின் பெயரைச் சேர்த்து ‘மூணார் ரமேஷ்.’ சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்து, கிட்டத்தட்ட நாற்பது படங்களில் நடித்துவிட்டார். ‘தோழா!’ படத்தில் பிரதான வில்லன். தற்போது, ‘வேட்டைக்காரன்’, ‘ஆடுகளம்’, இயக்குநர் செல்வராகவன், விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் முக்கிய பாத்திரம் என்று மனிதர் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நீங்க நடிச்ச முதல் படம் எது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஏ.பி. முகன் ‘தீண்ட... தீண்ட...’ன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருந்தார். அந்தப் படத்துல புரொடக்ஷன் சைடுல வேலை பார்த்தேன். நாங்க எல்லாருமே ஒரு டீமா அதுல வேலை பார்த்தோம். பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வந்துச்சு. அப்போதான் முகன், ‘நீங்க ஒரு ரோல்ல நடிங்களேன்’னு சொன்னார். என்னோட நண்பர்களும் என்னை நடிக்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. எனக்கு நடிப்புல முன் அனுபவம் எதுவும் இல்ல. இருந்தாலும் நடிச்சு பாப்போமேன்னு தோணிச்சு. அதுல நடிச்சேன். ஆனா, அப்போகூட பெரிய நடிகனாகணும்னு எந்த எண்ணமும் எனக்கு இல்ல. அதுக்கப்புறம் என்னோட இன்னொரு நண்பர் சுரேஷ் ‘அது ஒரு கனா காலம்’ படத்துல ஒரு சின்ன ரோல்ல நடிக்க கூப்பிட்டார். அது பாலுமகேந்திரா சார் படம். சுரேஷ், அதுல அசோசியேட் டைரக்டர். அந்தப் படத்துல ஒரே ஒரு சீன்ல நடிச்சேன். அந்தப் படம்தான் முதல்ல ரிலீஸ் ஆச்சு. என்னோட நண்பர்கள் எல்லாருமே என்னை தொடர்ந்து நடிக்கச் சொல்லி, ஊக்கம் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. ஆனாலும் நான் எந்த ஆர்வமும் இல்லாமதான் இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள், நண்பர்கள் எல்லாரும் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ ஒரு சினிமா கோ ஆர்டினேட்டர் வந்தார். ‘புதுப்பேட்டை’ன்னு ஒரு படத்துல முக்கியமான ஒரு ரோல் இருக்கு. அதுக்கு பொருத்தமான நடிகரைத் தேடிக்கிட்டு இருக்காங்க. எத்தனையோ பேர் வந்துட்டுப் போயிட்டாங்க. இயக்குநர் செல்வராகவன் திருப்தி ஆக மாட்டேங்கறாரு. நீங்க ஒரு ஃபோட்டோ எடுத்துகிட்டு போய் பாத்துட்டு வாங்களேன்’னு சொன்னார். நான் அதுக்கு முன்னாடி, என்னோட ஃபோட்டோவை எடுத்துக்கிட்டு எந்த சினிமா கம்பெனிக்கும் சான்ஸ் கேட்டு போனது கிடையாது. நண்பர்கள் வற்புறுத்தினதால, ரொம்ப கூச்சப்பட்டுக்கிட்டே ஒரு ஃபோட்டோவை எடுத்துட்டு போனேன். பொதுவா, ஒரு நடிகர், ஒரு கம்பெனியில புகைப்படத்தைக் குடுக்குறார்னா, அதுக்குப் பின்னாடி, ஃபோன் நம்பர், அட்ரஸ் எல்லாத்தையும் எழுதிக் குடுப்பார். அந்த அடிப்படைகூட எனக்குத் தெரியாது. ஃபோட்டோவை ஆபீஸ்ல குடுத்தேன். வந்துட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் கழிச்சு, செல்வராகவன் சார் கூப்பிட்டுவிட்டார். எப்பிடியோ, என் அட்ரஸைக் கண்டுபிடிச்சு அவரோட ஆபீஸ்ல இருந்து வந்துட்டாங்க. செல்வராகவன் சார் என்னோட நடிப்பு எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் கேட்டார். நான் ஏதோ பெரிய கேரக்டரா இருக்குமோன்னு பயந்துட்டேன். அதனால பட்டும் படாமலும்தான் பதில் சொன்னேன். நான் நடிச்ச முதல் ரெண்டு படத்துலயும் என்னோட நண்பர்கள் இருந்தாங்க. அதனால பிரச்னை இல்ல. ஆனா, இது அப்பிடி இல்ல. அவர் பெரிய டைரக்டர். அந்த பயம் எனக்குள்ள இருந்துச்சு. எனக்கு காஸ்ட்யூம் போட்டு, செக் பண்ணினாங்க. போகச் சொன்னாங்க. நான் குழப்பத்தோடயே வெளியில வந்தேன். ஒரு மாசம் கழிச்சு என்னை கூப்பிட்டு விட்டாங்க. ஹைதராபாத்ல ராமோஜிராவ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல வச்சு அக்ரீமெண்ட் எல்லாம் போட்டாங்க. அப்போதான் எனக்கு நடிப்போட சீரியஸ்னெஸ் உறைச்சுது. அந்தப் படத்துல நடிச்சேன். டைரக்டர் சொன்ன மாதிரியெல்லாம் செஞ்சேன். ஆனா, அந்த கேரக்டர் எந்த மாதிரி வரும்னு எனக்குத் தெரியல. படம் ரிலீஸ் ஆச்சு. செகண்ட் ஷோவுக்கு ஒரு நண்பரோட போயிருந்தேன். இடைவேளை விட்டு வெளியில வந்தா, ஆடியன்ஸ் எல்லாரும் என்னை சுத்தி நின்னுக்கிட்டாங்க. ‘நல்லா நடிச்சிருக்கே’ன்னு பாராட்டி தள்ளிட்டாங்க. அது எனக்கு பெரிய அனுபவமா இருந்துச்சு. அந்த ஒரே படத்துல, எங்க வெளியில போனாலும் என்னை எல்லாருக்கும் அடையாளம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு.  ‘புதுப்பேட்டை’ படத்தோட மேனேஜர் பால கோபி என்னை இயக்குநர் சுராஜ்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். நான் ‘தலைநகரம்’ படத்துல நடிச்சேன். அதுக்கப்புறம் நானா வாய்ப்புத் தேடி போக ஆரம்பிச்சுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-cE25wo0jDDo/TvhVzeSUE4I/AAAAAAAAAF8/MRbUIdBPkq4/s1600/DSC_9168.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-cE25wo0jDDo/TvhVzeSUE4I/AAAAAAAAAF8/MRbUIdBPkq4/s320/DSC_9168.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690392471974187906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சென்னைக்கு எப்போ வந்தீங்க? ஏன் வந்தீங்க?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் மதுரை வக்ஃபோர்டு காலேஜ்ல பி.ஏ. படிச்சிக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி. டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அப்புறம் மூணார்லயே ஒரு டிரான்ஸ்போர்ட் நடத்தினேன். நஷ்டமாயிடுச்சு. அதுக்கப்புறம் உள்ளூர்ல இருக்க முடியல. அப்ப கல்யாணம் வேற ஆயிடுச்சு. லவ் மேரேஜ். கோயம்பத்தூருக்கு வந்தேன். நமக்கு தெரிஞ்ச தொழில் என்னன்னா வண்டி ஓட்டறது. சின்னதா டிராவல்ஸ் நடத்திப் பாத்தேன். அதுலயும் நஷ்டம். சரி. டிரைவரா வேலை பாக்கலாம்னு முடிவு பண்ணி நானும் பல கம்பெனிகளுக்கு ஏறி, இறங்கினேன். என் உருவத்தைப் பாத்து யாருமே வேலை தர மாட்டேன்னுட்டாங்க. ஒரு டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சொன்னார்: ‘உங்களுக்கு வேலை குடுக்குறோம்னு வைங்க. எந்த கஸ்டமராவது பெட்டியை எடுத்து டிக்கில வைங்கன்னு உங்களைப் பாத்து சொல்லுவாங்களா? இவ்வளவு ஏன்? வண்டியில ஏறக்கூட மாட்டங்க.’ அதுக்கப்புறம்தான் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில கலெக்ஷன் ஏஜெண்ட்டா வேலைக்கு சேந்தேன். அதாவது வண்டியை ஃபைனான்ஸுக்கு வாங்கிட்டு தவணை கட்டாம இருப்பாங்கல்ல? அந்த வண்டியை சீஸ் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ற வேலை. கிட்டத்தட்ட கட்டப் பஞ்சாயத்து மாதிரி. அப்புறம் இயக்குநர் முகன் சென்னையில ‘தீண்ட... தீண்ட...’ படம் ஆரம்பிச்சப்போ சென்னைக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வில்லனா நடிக்கறதுல ஒரு சிக்கல் இருக்கு. பொதுவா, ஆடியன்ஸ் யாருக்கும் நல்ல அபிப்ராயமே வராது. உங்க அனுபவம் எப்படி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் அப்படித்தான். முதல்ல கிட்ட வர்றதுக்கே யோசிப்பாங்க. நாமளா போய் என்னன்னு கேட்டதும் பேச ஆரம்பிச்சுடுவாங்க. நெருங்கிட்டா, நாம நடிகன், சினிமா வேற, உண்மையில வேறன்னு புரிய ஆரம்பிச்சுடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வாழ்நாள்ல, தனியா தெரியற மாதிரி ஒரு கதாபாத்திரத்துல நடிக்கணும் அப்படின்னு ஆசை ஏதாவது உங்களுக்கு இருக்கா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அப்படி எல்லாம் இல்ல. நான் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டா வரணும். அவ்வளவுதான். ஒரு நடிகனா என்னிக்கி வாழ்க்கையை ஆரம்பிச்சேனோ, அப்பவே எல்லாத்தையும் நல்லா உள்வாங்க ஆரம்பிச்சுட்டேன். லைட்டிங்லருந்து, புரொடக்ஷன் வேலைலருந்து, இயக்குநர் எப்படி சொல்லித் தர்றாருங்கறது வரைக்கும் அப்சர்வ் பண்றேன். எந்த கேரக்டர்ல நடிச்சாலும் ‘இது நல்ல பேரை வாங்கித் தரும்’னு நினைச்சுத்தான் நடிக்கிறேன். ‘பந்தயக் கோழி’ன்னு ஒரு மலையாளப் படம். மூணே சீன்லதான் நடிச்சேன். ஆனா, முக்கியமான பாத்திரம். என்ன காரணமோ அந்தப் படம் ஹிட் ஆகலை. அதனால, மலையாளத்துல நான் யாருன்னு தெரியாம போச்சு. ‘தோழா!’ன்னு ஒரு படம். அதுல முழுக்க முழுக்க நாந்தான் வில்லன். சில சமயங்கள்ல இந்த மாதிரியும் அமைஞ்சு போயிடுது. அதே மாதிரி கடமைக்கு ஷூட்டிங்குக்குப் போய்ட்டு வர்ற சோலி நம்மகிட்ட கிடையாது. சினிமாவை முழுக்க தெரிஞ்சவங்க யாரும் இல்ல. அதே மாதிரி நமக்கு எதுவுமே தெரியாதுன்னும் சொல்ல முடியாதும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உழைக்கிறேன். அவ்வளவுதான்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சினிமாவுல போராட்டம் ஜாஸ்தி. எத்தனையோ பெரிய நடிகர்கள்கூட காணாமல் போயிருக்காங்க. நடிப்புத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீங்க? உங்களுக்கும் அது மாதிரியான போராட்டம் இருக்கா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழுறதுக்கு ஒரு தொழில் வேணும். வண்டி வச்சிருந்தா வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம். பணம் வச்சிருந்தா வட்டிக்கு விடலாம். கூலி வேலைக்குப் போகலாம். ஆனா, நடிப்பு அப்படி இல்ல. இதுல மூலதனமே நம்மதான். மாசம் 1-ம் தேதி ஆனா வாடகை குடுக்கணும். திடீர்னு ஆஸ்பத்திரி செலவு வரும். பொதுவா, எந்தக் குடும்பத்துலயும் சினிமாவுல நடிக்கிறேன்னா, ஆதரவு குடுக்க மாட்டாங்க. வேணும்னா, கடை வச்சுத் தர்றேன். பொழைச்சுக்கோன்னு சொல்லுவாங்க. என் விஷயத்துலயும் அதுதான் நடந்துச்சு. இப்ப நான் நடிகனா நிக்கறதுக்குக் காரணம், நம்பிக்கை, மனைவி, நண்பர்கள். இவங்க இல்லைன்னா, என்னால வாழ முடியாது. இப்போ நானும் ஃபெப்சியில உறுப்பினர். ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாவும் இருக்கேன். ‘படிக்காதவன்’ படத்துல நடிகர் ஷாயாஜி ஷிண்டேவுக்கு நான் தான் டப்பிங் பேசினேன். தெலுங்குல ஒரு படத்துக்கு டப்பிங் பேசினேன். ஒண்ணுமே இல்லைன்னாலும், டப்பிங் பேசியாவது ஓட்டிடலாம்னு நம்பிக்கை இருக்கு. அதுக்காக எனக்கு குறைஞ்ச பட்ச நம்பிக்கைன்னு நினைச்சிடாதீங்க. பெரிய நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Dcy5cypOaa8/TvhVmuJkmfI/AAAAAAAAAFw/iyGT8zvjBHg/s1600/%252838%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/-Dcy5cypOaa8/TvhVmuJkmfI/AAAAAAAAAFw/iyGT8zvjBHg/s320/%252838%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690392252894190066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நீங்க முன்மாதிரியா யாரையாவது நினைக்கிறீங்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரையுமே நினைக்கலை. எனக்கு கமர்ஷியல் கனவுகள் கிடையாது. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே வாழ்க்கையில எதையெல்லாம் அனுபவிக்கணுமோ, அதையெல்லாம் அனுபவிச்சு வாழ்ந்துட்டேன். நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டுன்னு பேர் வாங்கணும். முடிஞ்ச வரைக்கும் எந்த பாத்திரத்துல நடிச்சாலும் நல்லா பண்ணணும். அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நீங்க நடிச்சதுலயே ரொம்ப கஷ்டமான காட்சின்னு ஏதாவது இருக்கா? அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘புதுப்பேட்டை’ படத்துல என்னை உயிரோட புதைக்கிற மாதிரி ஒரு சீன். நான் கேமராவைப் பாத்து பேசிக்கிட்டு இருப்பேன். பின்னாடி இருந்து என்னை உதைச்சு குழியில தள்ளுவாங்க. எல்லாத்தையும் கவனமா ஃபாலோ பண்ணி நடிக்கணும். அந்தக் காட்சி சரியா வரலை. செல்வராகவன் சார் ரொம்ப அன்பா பேசிப் பார்த்தார்.  அப்புறம் கோபமா பேசினார். மறுபடியும் அன்பா... ஒரு கட்டத்துல, ‘என்னடா பொழப்பு இது! திருப்பிப் பாக்காம ஓடிப் போயிடலாமான்னு கூட நினைச்சேன். ஆனா, அந்த சீனை எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் சரியாயிட்டேன். அந்தப் படம் வெளியில வந்ததுக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிப் போச்சு. என்னைப் பாக்குறவங்க எல்லாருமே நான் தனுஷைக் கூப்பிடுற மாதிரி ‘குமாரு...’ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் “விளம்பரம்” பத்திரிகைக்காக நான் செய்த நேர்காணல்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-4763664426129800347?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/4763664426129800347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=4763664426129800347' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/4763664426129800347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/4763664426129800347'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2011/12/2.html' title='அறியப்படவேண்டிய நடிகர் - 2'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Wb7xRSGIEDE/TvhV9Ujs4hI/AAAAAAAAAGI/bClzJ-LTBzM/s72-c/18247%2Be%2B%2B6x4.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-4679550152901465544</id><published>2011-12-15T00:58:00.000-08:00</published><updated>2011-12-15T01:09:19.879-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டி.வி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தூர்தர்ஷன்'/><title type='text'>தூர்தர்ஷன் நினைவுகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-KOtBeCCg8qM/Tum39DQCkWI/AAAAAAAAAFk/T7e16my_eqc/s1600/images.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://2.bp.blogspot.com/-KOtBeCCg8qM/Tum39DQCkWI/AAAAAAAAAFk/T7e16my_eqc/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686278264004448610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-y8CI6zbMv-I/Tum3tmdA9QI/AAAAAAAAAFY/ZeDnSKDLAnQ/s1600/delhi-doordarshan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-y8CI6zbMv-I/Tum3tmdA9QI/AAAAAAAAAFY/ZeDnSKDLAnQ/s320/delhi-doordarshan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686277998576203010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நாங்கள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இருந்தோம். இன்றைக்கும் நாங்கள் குடியிருந்த வேலாயுத பாண்டியன் தெரு இருக்கிறது, பெயர் மாறாமல், பழைய வாசனை மாறாமல். வட சென்னைக்கே பிடித்த சாபம் போல, எத்தனையோ பகுதிகள் இன்றைக்கும் அச்சு அசலாக அப்படியே இருக்கின்றன. பவழக்காரத் தெருவில் நான் படித்த சாரதா நடுநிலைப் பள்ளியின் பெயர் மட்டும்தான் மாறியிருக்கிறது.  தர்மாம்பாள் நடுநிலைப் பள்ளி என்று. மற்றபடி அதே புழுதி, மாடுகள், சாணி, தெருவை அடைத்த லாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், குப்பை, இத்யாதி.&lt;br /&gt;&lt;br /&gt; நாங்கள் இருந்தது ஒரு காம்பவுண்டு வீட்டில். எதிரெதிராக இருபது குடியிருப்புகள். அத்தனைக் குடியிருப்புகளுக்கும் பொதுவாக, மூன்று பொதுக் கழிப்பறைகளும் மூன்று குளியலறைகளும் இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கார அம்மாளுக்கு நல்ல பாரியான தேகம். வாசலை ஒட்டிய வராந்தாவில் மதியத்துக்குப் பிறகு கால் நீட்டிப் படுத்திருப்பார். விடுமுறை நாள்களில் என் வயதுப் பையன்கள் யாரும் மதியம் அவர் இருக்கும் திசைப் பக்கம்கூட எட்டிப் பார்க்க மாட்டோம். மாட்டினால் அவ்வளவுதான். ‘கொஞ்ச நேரம் காலை மிதிடா கண்ணு’ என்பார். கொஞ்ச நேரம் என்பது அவர் பாஷையில் அரை மணி நேரம். &lt;br /&gt;&lt;br /&gt;‘யக்கா! அம்மா கூப்பிடும். ஹோம் வொர்க் செய்யணும்’ என்று என்ன காரணம் சொன்னாலும் கேட்க மாட்டார். ‘இன்னும் கொஞ்ச நேரம்டா’ என்று கெஞ்சுவார். மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஆளுமை அந்த அம்மாளின் குரலுக்கு இருந்தது. அரை மணி என்பது முக்கால் மணி நேரம், ஒரு மணி நேரம் என்று நீண்ட அனுபவமும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் காம்பவுண்டில் இருபது வீடுகள் இருந்தாலும்,  யார் வீட்டிலும் டி.வி. இல்லை. அந்தக் குடியிருப்பில் இருந்த எல்லோருமே மத்திய தர வர்க்கத்துக்கும் கீழான வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மீன் பிடிப்பவர்கள், கொத்து வேலை பார்ப்பவர்கள், சிறு வியாபாரிகள் (பூ கட்டி விற்பதெல்லாம் சிறு வியாபாரம்தானே!), போஸ்டர் ஒட்டுபவர், எலெக்ட்ரீஷியன்...என பல தரப்பட்ட மக்கள். டி.வி. என்பது அவர்களைப் பொறுத்தவரை ஆடம்பரப் பொருள். அவர்கள் என்றில்லை. அத்தனைபேரிடமும் வாடகை வசூலித்த (கொழுத்த) வீட்டுக்கார அம்மாளின் வீட்டில்கூட டி.வி. இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் வேறு வீடு கிடைக்காமல் (இப்போது என்று இல்லை. 30 வருடங்களுக்கு முன்னால்கூட சென்னையில் வீடு கிடைப்பது கஷ்டம்தான் சார்!), அந்தக் காம்பவுண்டில் பக்கத்துப் பக்கத்தில் இருந்த இரண்டு போர்ஷன்களை வாடகைக்கு எடுத்திருந்தார் அப்பா. நான் சாரதா நடுநிலைப் பள்ளியில் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஞாயிற்றுக் கிழமை, பழனி கூப்பிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘டேய்! இன்னிக்கி டி.வி.யில படம் பாக்கலாம்டா!.’&lt;br /&gt;&lt;br /&gt;‘டி.வி.யா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமாடா.‘&lt;br /&gt;&lt;br /&gt;‘டி.வி. எங்க இருக்கு?’&lt;br /&gt;&lt;br /&gt;‘அடுத்த தெருவுல. நாலணா குடுத்தா படம் பாக்கலாம்.’&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தெருவில் இருந்த ஒரு வீட்டில் டி.வி. இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய  படத்துக்கும், வெள்ளிக் கிழமைகளில் போட்ட ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சிக்கும் காசு வாங்கிக்கொண்டு, பார்க்க அனுமதித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிடம் நாலணா கேட்டதற்கு, ஆயிரம் தடைகள், ஆயிரம் கேள்விகள். ‘டி.வி. எல்லாம் பாக்கக் கூடாது, கெட்டுப் போயிடுவே. கண்ணுக்குக் கெடுதல்டா. என்ன படம்? நல்ல படம்தானே? சின்னப் பசங்க எல்லாம் பாக்கலாமா? எவ்வளவு காசு? நாலணாவா? அதிகமா இருக்கே! இந்தா. சின்னப் பையன்தானே! முதல்ல பதினஞ்சு காசு குடுத்துப் பாரு. கேக்கலைன்னா அப்புறம் இருவத்தஞ்சு காசைக் குடு.’&lt;br /&gt;&lt;br /&gt;நானும் பழனியும் காசை எடுத்துக்கொண்டு ஓடினோம். எங்களுக்கு முன்னாலேயே அங்கே பெரும் கூட்டம் கூடியிருந்தது. சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள். எங்களையும் சேர்த்து மொத்தம் இருபத்தைந்து பேர் இருப்போம். தரையில் உட்கார்ந்தோம். வீட்டுக்காரர் எல்லோரிடமும் காசு வாங்கினார்.  அப்பா சொன்னது போல அவரிடம் பதினைந்து காசு கொடுப்பதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. என் முறை வந்தபோது நான் முழு நாலணாவையும் கொடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு எதிரே ஒரு மர மேசையில் அது இருந்தது. பழைய போர்வையால் மூடியிருந்தார்கள். சலசலவென்று பேசிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து வீட்டுக்காரர் திட்டினார். ‘சத்தம் போட்டா வெளியில அனுப்பிடுவேன்.’&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மனிதர் மணி பார்த்தார். அந்தப் போர்வையை விலக்கினார். பெரிய மரப் பெட்டியின் இரு கதவுகளையும் திறந்தார். சுவிட்சைப் போட்டார். சிறுவர்கள் ‘ஹோ!’ வென்று சத்தம் போட்டார்கள். வீட்டுக்காரர் சிறுவர்களை அதட்டினார். டியூப் லைட்டை அணைக்கச் சொன்னார். மெல்ல டி.வி.யில் இருந்து ஒளி பரவியது. கறுப்பு வெள்ளை டி.வி. அது. புள்ளிகள், அவர் டி.வி.யில் இருந்த குமிழ்களை திருப்பித் திருப்பி ஏதேதோ செய்தார். மெல்ல படம். பிறகு தூர்தர்ஷனுக்கே உண்டான அந்த பிரத்யேக ‘டூ டுடு டூ டுடும்...’ இசை. &lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு சென்னைத் தொலைக் காட்சியில் ‘குழந்தையும் தெய்வமும்’ படம் போட்டார்கள். இருட்டு, புழுக்கம், கொசுக்கடி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு எல்லோரும் டி.வி.யில் தெரிந்த பிம்பங்களுக்குள் ஆழ்ந்துபோனோம். &lt;br /&gt;&lt;br /&gt;செய்தி போட்ட போது, ‘வெளியில போறவங்க போயிட்டு வாங்க’ என்றார் வீட்டுக்காரர். நானும் பழனியும் வெளியே போய், தெருச் சுவற்றில் ஒண்ணுக்கடித்துவிட்டு, மூன்று பைசா கமர்கட்டை வாங்கி வாயில் போட்டுவிட்டு வந்தோம். வீட்டுக்காரர் சேரில் உட்கார்ந்து தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் எங்கள் இடத்தில் உட்கார்ந்துகொண்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் படம் தொடங்கியது. ‘கோழி ஒரு கூட்டிலே...’ பாட்டு பாதி ஓடிக்கொண்டிருந்தபோது, கரண்ட் போய்விட்டது. எல்லோரும் வெளியே வந்து நின்றோம். இனிமேல் கரண்ட் வந்தாலும் படம் முடிந்துவிட்டிருக்கும் என்றபோதுதான் வீட்டுக்குத் திரும்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக டி.வி. எளிதில் பார்க்கவியலாத ஒரு அரிய பொருளாகத்தான் இருந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அதன் வாசனை கொஞ்சம் அதிகமாகப் பட்டது. அப்போது அப்பா தேனிக்கு மாற்றலாகியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தேனிக்காரர்கள் கொஞ்சம் இளகிய மனம் படைத்தவர்கள். டி.வி. பார்க்கக் காசெல்லாம் வாங்க மாட்டார்கள். நாங்கள் இருந்த தெருவில் இரண்டுவீடுகளில் டி.வி. இருந்தது. இரண்டு வீட்டுக்காரர்களும் தூர்தர்ஷனில் ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’ போட்டபோது, டி.வி.யை எடுத்து வெளியே வைத்துவிடுவார்கள். இரு வீடுகளில் ஒரு வீட்டில் கலர் டி.வி. கலர் என்றால் இப்போது இருக்கிற கலர் கிடையாது. டி.வி.யின் திரையில் மட்டும் மூன்று கலர் தெரியும். திரையில் மேலே இடது மேல் மூலையில் பச்சை நிறம், நடுப் பகுதியில் மஞ்சள் நிறம், வலது கீழ் மூலையில் சிகப்பு நிறம். கறுப்பு வெள்ளைப் படம்கூடக் கலராகத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;மொழி புரிகிறதோ, இல்லையோ நாங்கள் ராமாயணம், மகாபாரதம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்தோம். குறிப்பாக சம்பூர்ண ராமாயணத்தில் அஞ்சலிதேவியைப் பார்த்து அலுத்துப் போன எங்களுக்கு, இந்த ராமாயணத்தில் வந்த சீதையை மிகவும் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் படித்த போதுதான் ‘முட்டை பாலு’ அறிமுகமானார். அவர் செய்யாத தொழில் இல்லை. ஆரம்பத்தில் முட்டை வியாபாரம் செய்ததால், அவருக்கு ‘முட்டை பாலு’ என்று பெயர் வந்துவிட்டது. ஓவியம் வரைவார், போர்டுகளில் சித்திரம் போல அழகழகான எழுத்துகளை எழுதுவார். சுவரில் ‘செய்யது பீடி’, ‘ஐந்து பூ மார்க் பீடி’ என்று பெரிய எழுத்துகளை பெயிண்டால் எழுதுவார். இலக்கியம் பேசுவார். அரசியல் சொல்லித் தருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் பெரும்பாலான நேரங்களை அவரோடு செலவழிப்பதில் எனக்கும் என் நண்பர்களுக்கும் அவ்வளவு ஆர்வம் இருந்தது. வேலை பார்த்துக்கொண்டே, உலக நாடுகளைப் பற்றிப் பேசுவார். படித்த கதைகளில் பிடித்ததைச் சொல்லுவார். நாங்கள் டீயும் தம்மும் போட்டபடி அவருக்கு பெயிண்ட் எடுத்துக் கொடுத்து, அவர் சொல்வதை பதில் பேசாமல் கேட்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலு அண்ணன் வீட்டில் ஒரு டி.வி. இருந்தது. அப்போது நான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தேன். சத்யஜித்ரேயின் படங்களை வாரா வாரம் இரவு பதினோரு மணிக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதாக செய்தி வெளியாகியிருந்தது. எல்லாப் படங்களையும் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று எனக்கு வெறி. ஆனால், இரவு பதினோரு மணிக்கு யார் வீட்டில் போய்ப் படம் பார்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;பாலு அண்ணன் அரண்மனைப் புதூரில் இருந்தார். தேனியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அரண்மனைப் புதூர். அன்று மாலை அவரை பங்களா மேட்டில் வைத்துப் பார்த்தபோது கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அண்ணே! சத்யஜித்ரே படம் போடறாங்களாம். உங்க வீட்டுக்கு வரலாமா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘இதென்னப்பா கேள்வி. தாராளமா வா.’&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதுதான் பாலு. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் வீட்டில் அவரும் அவருடைய அம்மாவும்தான். அதுவுமில்லாமல் அன்பான மனிதர். அவர் இருக்கும்போது நமக்கென்ன! சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். வீடு அடைத்துக் கிடந்தது. ரொம்ப நேரம் தட்டியபிறகுதான் கதவு திறந்தது.  அவருடைய அம்மா கதவைத் திறந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;‘நீயா! வா! வா!’ என்றார் சுரத்தில்லாமல். நான் வருவதை ஏற்கெனவே அம்மாவிடம் பாலு சொல்லியிருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;‘அண்ணன் இல்லியாம்மா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘இப்ப வந்துடுவான்.’&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அம்மாள் டி.வி.யைப் போட்டுவிட்டு, உள் அறைக்குள் போய் சுருண்டுகொண்டார். அன்றைக்கு ‘பதேர் பாஞ்சாலி’ போட்டார்கள். என்னால் படத்தில் ஒன்றவே முடியவில்லை. அறிமுகமில்லாத ஒரு வீட்டில் அராஜகம் செய்வதுபோல இருந்தது. படம் முடிகிற வரைக்கும் பாலு அண்ணன் வரவே இல்லை. டி.வி.யை அணைக்கச் சொல்லி அந்த அம்மாளிடம் சொல்லிவிட்டு, வெளியே வந்து, இருட்டில் குரைக்கும் நாய்களுக்கு ‘சூ’ சொல்லியபடி சைக்கிளில் வீடு வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலு, ‘அடுத்த வாரம் ‘அபராஜிதா’. நான் பார்க்காத படம். கண்டிப்பாக வீட்டில் இருப்பேன்’ என்றார். தயக்கமாக இருந்தாலும் சத்யஜித்ரே என்னை இழுத்தார். பாதிப் படம் போய்க் கொண்டிருந்தபோது, அந்த அம்மாள்  பாலுவைக் கூப்பிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;‘என்னடா இது! வாரா வாரம் அவன் வருவானா? நாம எல்லாம் தூங்க வேணாமா?’ என்று அவர் மெதுவான குரலில் சொன்னாலும் எனக்குக் கேட்டுவிட்டது. பாதியில் ‘வயிறு வலிக்குதுண்ணே!’எழுந்து வீடு திரும்பினேன். அதற்குப் பிறகு நான் அவர் வீட்டுக்கு டி.வி. பார்க்கப் போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்கர் சக்தி வடபுதுப் பட்டியில் இருந்தார். தேனியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் வடபுதுபட்டி இருந்தது. நானும் ரமேஷ்வைத்யாவும் ஹரிகுமாரும் அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவோம். சாப்பிடுவோம். அவர் வீட்டில் இருந்த புத்தகங்களை அராஜகமாக அள்ளி வருவோம். &lt;br /&gt;&lt;br /&gt;வடபுதுபட்டி கிராமத்துக்கு சொந்தமான கட்டடத்தில் ஒரு டி.வி. பெட்டி இருந்தது. மாலை வேளைகளில் போடுவார்கள். பத்துப் பதினைந்து பேர், தெரு மண்ணில் அமர்ந்து படம் பார்ப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வருடம் நினைவில் இல்லை. ஆனால், அப்போது ஒரு கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்தது. ஒரு நாள் காலை அவர் வீட்டுக்குப் போனபோது, அந்தக் கட்டடத்தில் கூட்டமான கூட்டம். வயலுக்குப் போகிறவர்களும் கூலித் தொழிலாளர்களும் கூட டி.வி.யைச் சுற்றி கூட்டமாக நின்றிருந்தார்கள். என்னால் ஆச்சரியத்தை அடக்கவே முடியவில்லை. இவரெல்லாம் கிரிக்கெட் பார்ப்பாரா என்று நம்பவே முடியாத ஒரு நாற்பதைக் கடந்த தொழிலாளி ‘பாரு! அடுத்து இவன் ஃபோர் அடிப்பான்’ என்று கத்திக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் டி.வி. வாங்கியபோது ‘கேபிள் டி.வி. காலம்’ வந்துவிட்டது. சொல்லப் போனால், தூர்தர்ஷன் என்கிற சேனல் மீது வெறுப்பு என்றுகூடச் சொல்லலாம். திரும்ப வாழ்க்கை சென்னைக்கே துரத்தியது. ஒரு நாள் தூர்தர்ஷனுக்குக் கூட்டிக் கொண்டுபோனார் நண்பர் சுரேஷ். (இப்போது அவர் பெரிய இயக்குநர். தெலுங்கில் ‘கலவர் கிங்’ என்ற படத்தையும், தமிழில் விமலை வைத்து ‘எத்தன்’ படத்தையும் இயக்கியவர்.)&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளரைப் பார்த்தோம். ஒரு சிறுகதையை ஸ்கிரிப்ட் பண்ணிக் கொடுக்கச் சொன்னார்கள். ஆளுக்கொரு கதை. ஷூட்டிங்போது கூடவே இருக்கவேண்டும் என்றார்கள். இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டுடியோவிலேயே ஷூட்டிங். பிரம்மாண்டமான ஸ்டுடியோ. நிகழ்ச்சித் தயாரிப்பாளர், மேலே ஒரு கண்ணாடி அறைக்குள் இருந்தபடி மைக்கில் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மூன்று கேமராவைக் கொண்டு ஷூட் செய்தார்கள். ஆனால், கதைக்குப் பொருந்தாத சொதப்பலான செட்டிங். சொதப்பலான நடிப்பு. உண்மையில் அந்த ஷூட்டிங் எனக்கு பயத்தை வரவழைத்தது. சிறுகதையை எழுதியவர், இப்படி மட்டமாக எடுத்ததற்காக தெருவில் வைத்து அடிப்பார் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;தூர்தர்ஷனில் எல்லாம் இருக்கிறது. பணம், அசத்தலான உபகரணங்கள், ஆள்பலம்...எல்லாம். ஆனால், அது அரசு நிறுவனம். ஆத்மார்த்தமாக ஒரு படைப்பைக் கொண்டுவரவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. மற்ற அரசு உத்யோகத்தைப் போல, 10 டூ 5 உத்யோகம்தான் அதுவும். அந்த சிறுகதையை (அரை மணிநேரக் குறும்படம்) இரண்டுமணி நேரத்தில் எடுத்துவிட்டார்கள். அது எப்படியோ போகட்டும். வெளியே வரும்போது, ஸ்கிரிப்டுக்காக சொளையாக 6000 ரூபாய் கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமான புதிதில், நானும் என் மனைவியும் எது தவறினாலும் ஞாயிற்றுக் கிழமை நாலு மணிக்கு டிடி பார்ப்போம்.  ஞாயிற்றுக் கிழமை படம் போடுவதற்கு முன்பாக, விதவிதமான, ஒழுங்கான, நல்ல சமையல் வகைகளை செய்து காண்பிப்பார்கள். உண்மையிலேயே உபயோகமான நிகழ்ச்சியாக அது இருந்தது. குழந்தை பிறந்தபிறகு, அந்தப் பழக்கம் எப்படியோ படிப்படியாக நின்று போனது. அந்த நிகழ்ச்சியை வேறு வேறொரு நேரத்துக்கு மாற்றிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் வீட்டில் டி.வி. இருக்கிறது. தூர்தர்ஷன், சென்னைத் தொலைக்காட்சியின் பொதிகை எல்லாம் தெரிகிறது. ஆனால், ஐந்து நிமிடம்கூடப் பொறுமையோடு யாராலும் பார்க்க முடிவதில்லை. அவளுக்கு சன் டி.வி.யில் தொடர்கள், குழந்தைக்கு சுட்டி டி.வி., எனக்கு ஹெச்.பி.ஓ.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;span style="font-weight:bold;"&gt;சில மாதங்களுக்கு முன்னால் ‘அம்ருதா’ கலை இலக்கிய மாத இதழில் வெளியான என் கட்டுரை)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-4679550152901465544?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/4679550152901465544/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=4679550152901465544' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/4679550152901465544'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/4679550152901465544'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2011/12/blog-post.html' title='தூர்தர்ஷன் நினைவுகள்'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-KOtBeCCg8qM/Tum39DQCkWI/AAAAAAAAAFk/T7e16my_eqc/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-7660760537525649078</id><published>2011-10-28T23:18:00.000-07:00</published><updated>2011-10-28T23:20:52.566-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>ஆசுவாசம்!</title><content type='html'>சுசீலாவால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தோடும் கொஞ்சம் பரவசத்தோடும் அவள் குரல் ஒலிப்பதை செல்போனில் பேசும்போதே என்னால் உணர முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘நெஜமாவேதான் சொல்றீங்களா? கௌம்பி ரெடியாயிருக்கட்டுமா? சீக்கிரம் வந்துடுவீங்களா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமா சுசீ! நாலு மணிக்கெல்லாம் வந்துடுறேன். பார்க்குக்குப் போயிட்டு, வெளியில எங்கயாவது ஓட்டல்ல சாப்பிடலாம். நைட்டுக்கு டிபன் எதுவும் செஞ்சுடாதே!’&lt;br /&gt;&lt;br /&gt;இடையில், பேசுவதை நிறுத்திவிட்டு அவள் கிருஷ்ணாவிடம் பேசுவதும், அவன் ஏதோ சொல்வதும் கேட்டது. கிருஷ்ணா அவளிடமிருந்து செல்போனை வாங்கி என்னிடம் பேசினான். &lt;br /&gt;&lt;br /&gt;‘அப்பா!... ம்... அப்பா... பீச்சுக்கு... பீச்சுக்கு போலாம்ப்பா.’&lt;br /&gt;&lt;br /&gt;‘போலாண்டா செல்லம்!’&lt;br /&gt;&lt;br /&gt;‘ம்... ம்... அப்புறம் எனக்கு... எனக்கு... தோசை!’&lt;br /&gt;&lt;br /&gt;‘வாங்கித் தர்றேண்டா கண்ணு!’&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணாவுக்கு இன்னும் பார்க்குக்கும் பீச்சுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. பூங்கா, அவனுக்குக் கடற்கரையாகத் தெரிகிறது. அலைகள் கரையில் மோதாத, ‘ஜிலு ஜிலு’ காற்று வீசாத, கால்களில் மண் ‘நறநற’க்காத கடற்கரை. &lt;br /&gt;&lt;br /&gt;‘அதுக்கு பேரு பீச் இல்லடா, பார்க்கு...’ என்று சொன்னால் அப்போதைக்கு ‘பா...க்கு’ என்பான். ஆனால், திரும்பவும் வெளியே போகவேண்டும் என்று சொல்லும்போது ‘பீச்’ என்கிற சொல்லைத்தான் பயன்படுத்துவான். ஆனால், ப்ரியாவுக்கு நன்கு விவரம் தெரிந்திருந்தது. அவள் கிருஷ்ணாவைவிட நான்கு வயது பெரியவள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் ஆபீஸுக்குக் கிளம்புகிற நேரத்தில், ‘எங்கேயாவது வெளியில கூட்டிட்டுப் போங்கப்பா. நாம எல்லாரும் பார்க்குக்குப் போய்கூட ரொம்ப நாளாச்சுப்பா!’ என்று ப்ரியா சொன்னபோது, அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;‘போலாண்டா பட்டு!’  என்று அவள் கன்னங்களைச் செல்லமாகத் தட்டிவிட்டுக் கிளம்பினேன். ஆபீசுக்குப் போவதற்கே அலுப்பாக இருந்தது. ‘என்னடா வாழ்க்கை!’ என்று வெறுப்பாக வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நகர வாழ்க்கையில் குடும்பத்தோடு கழிப்பதற்கான நேரம் என்பது நம் கையில் இல்லை. அலுவலகமும், அங்கே போய் வருவதற்கான பயண நேரமும், போக்குவரத்து நெரிசலும் தின்று எறிந்த சக்கைதான் மீதம் இருப்பது. அகாலத்தில் வீடு புகுந்ததும் படுக்கையில் விழத்தான் மனம் வேட்கை கொள்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு உதவ, ஓய்வெடுக்க என்று பொழுது ஓடி விடுகிறது. ‘அடடா! குடும்பத்தோட வெளில போய் ரொம்ப நாளாச்சே!’ என்று தோன்றுகிற கணங்களில் குற்ற உணர்ச்சி ஒரு சைத்தானைப் போல மென்னியைப் பிடிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அவகாசம் இருந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு பல விஷயங்கள் கட்டுபடியாவதில்லை. நகருக்கு வெளியே இருக்கும் தீம் பார்க்குகளுக்கு ஒரு முறை குடும்பத்தோடு போய்வரும் செலவு என்பது மாத சம்பளத்தில் பாதியை விழுங்குகிற சமாசாரம். நல்ல தியேட்டரில் சினிமா பார்க்கலாம் என்றால், நான்குபேருக்கு ஆயிரம் ரூபாயையாவது தனியாக எடுத்து வைக்கவேண்டும். ‘நவீனம்’ என்கிற பெயரில் தியேட்டர்களெல்லாம் பெரிய பெரிய ‘மால்’களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. சினிமா பார்த்தோம், வந்தோம் என்பது இயலாத காரியம். ரெஸ்டாரண்ட், விளையாட்டு, வினோத அரங்கங்களையும், பலவிதமான விளையாட்டுப் பொருட்களை விற்கிற கடைகளையும் கடந்துதான் தியேட்டருக்குச் செல்லவேண்டியிருக்கிறது. குழந்தைகளின் கண்களையும் வாயையும் என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;சில காலம் சுசீலாவே வியந்துபோகும்படிக்கு அவளை கோயில் கோயிலாக அழைத்துச் சென்றேன். கோலவிழியம்மன், முப்பாத்தம்மன், துலுக்கானத்தம்மன், முண்டகக்கன்னியம்மன்... என்று சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அத்தனை அம்மன்களுக்கும் சுசீலா நன்கு பரிச்சயம் ஆகிவிட்டாள். மற்ற செலவினங்களோடு ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கவாசிகளுக்கு கோயில்கள் வரப்பிரசாதம். போக்குவரத்து, சாமிக்கு பூ, தட்டில் போட கொஞ்சம் சில்லறை... அவ்வளவுதான். ‘குடும்பத்தோட நாங்களும் வெளிய போய்ட்டு வருவம்ல?’ என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஞாயிற்றுக் கிழமை சட்டை, பேண்ட் போட்டுக்கொண்டு கிளம்பியபோது, சுசீலா தயங்கித் தயங்கி சொன்னாள். ‘ஏங்க! கோயிலுக்கு மட்டும் வேணாங்க... ‘இந்த வாரம் எந்தக் கோயிலு, என்ன பிரசாதம்?’னு பக்கத்து வீட்டு மாலதி கிண்டல் பண்றாங்க...’&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குக் கோபம் வந்தது. நான் பத்திரிகைக்காரன். தமிழின் மிக முன்னணி நாளிதழில் நிருபர். யாருக்காகவும், எதற்காகவும் என்னை மாற்றிக்கொள்ளத் தேவையில்லைதான். ஆனால், சுசீலாவுக்கு இதையெல்லாம் புரிய வைக்க முடியாது. கொஞ்சம் குரல் உயர்த்திப் பேசினால்கூட அழுதுவிடுகிற ரகம். அவளும் என்னதான் செய்வாள்? ஒண்டுக் குடித்தனத்தின் இறுக்கத்தையும் பிசுபிசுப்பையும் தவிர்க்க மாதம் ஒரு முறையாவது எங்கேயாவது வெளியே போகத்தான் வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில்களுக்கு அடுத்தபடியாக நகரத்தில் என் போன்றவர்களுக்கு பூங்காக்களும் கடற்கரையும் கொஞ்சம் ஆசுவாசம் தருபவையாக இருக்கின்றன. குறிப்பாக பூங்காவில் குழந்தைகள் துள்ளிக் குதித்து விளையாட இடம் இருக்கிறது. அந்தக் கணங்களில் அவர்கள் வீடு, பள்ளி சிறைகளை மறந்து போகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின், மாதத்துக்கு ஒரு முறையாவது நாங்கள் பூங்காவுக்குப் போவது வழக்கமானது. குடும்ப விஷயங்களை பேசிக்கொள்ள, குழந்தைகளைக் கொஞ்ச நேரம் உற்சாகமாக வைத்துக்கொள்ள, எதிர்காலம் குறித்துப் பேசிக் கவலைப்பட... அது எங்களுக்கு கற்பக விருட்சமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் வெளியே போக முடியாதபடிக்கு விடுமுறை தினங்கள் அமைந்து போயின. நண்பருடைய தந்தையின் மரணம், சுசீலாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது, அலுவலகத்தில் வேலைப் பளு... என்று என்னென்னவோ காரணங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அன்று சனிக் கிழமை. அலுவலகத்தில் வந்து உட்கார்ந்ததுமே எடிட்டர் அழைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;‘வேணு! அடுத்த வாரம் சப்ளிமெண்ட்டரி ஒண்ணு போடப் போறோம். ‘பெண்கள் சிறப்பிதழ்.’ ஒரு திருநங்கையோட பேட்டி இருந்தா நல்லா இருக்கும்...’ அவரே ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து பேசச் சொன்னார். பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பெயர் சௌமியா. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியபடியே, பிரபல நாடகக் குழு ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தார். அன்று மாலையே பேட்டிதர ஒப்புக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘என் வீட்ல வேணாங்க. ஹவுஸ் ஓனர் என்னை பொண்ணுன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. யாராவது பாக்க வந்தா சந்தேகப்படுவாங்க. உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க. நான் அங்க வந்துர்றேன். இல்லன்னா, பொதுவா ஏதாவது ஒரு இடம் சொல்லுங்க. மீட் பண்ணலாம்.’&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ப்ரியா காலையில் சொன்னது நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘ஏதாவது பார்க்ல மீட் பண்ணலாமா?’ &lt;br /&gt;&lt;br /&gt;சௌமியா ஒப்புக்கொண்டார். இருவரும் கே. கே. நகரில் இருக்கும் ஒரு பூங்காவில் மாலை ஐந்து மணிக்கு சந்திப்பதாக முடிவு. நான் உடனே சுசீலாவுக்கு போன் செய்து நாலரை மணிக்கு பூங்காவுக்குப் போகலாம் என்று தகவல் சொன்னேன். நான்கு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டேன். ப்ரியாவும் கிருஷ்ணாவும் தயாராக இருந்தார்கள். ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள். கிளம்பும்போது, நான் சுசீலாவிடம் ‘வாய்ஸ் ரெக்கார்டரை’ எடுத்து வைக்கச் சொன்னேன். அவள் கேள்விக்குறியுடன் பார்த்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘இல்லம்மா. ஒருத்தங்களை இண்டர்வியூ பண்ண வேண்டியிருக்கு. அரை மணி நேரம்தான். அப்புறம் நாம நம்ம வேலையைப் பாக்கலாம்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘அப்போ ஆபீஸ் வேலைக்காகத்தான் எங்களைக் கூப்பிடுறீங்களா?’ &lt;br /&gt;&lt;br /&gt;நான் சுசீலாவிடம் நிலைமையை விளக்கிச் சொல்லவேண்டியிருந்தது. பைக்கில் வருகிறபோது ப்ரியா, ‘அப்பா! பில்லர்கிட்ட மாடியில ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குல்ல... அங்க போகலாம்ப்பா. எனக்கு சப்பாத்தி...’&lt;br /&gt;&lt;br /&gt;‘எனக்கு தோசை...’ என்றான் கிருஷ்ணா. நடுத்தர வர்க்கத்துக் குழந்தைகளுக்கு தோசையையும் சப்பாத்தியையும் தாண்டி யோசிக்க முடிவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பூங்காவுக்குள் நுழைந்த பத்து நிமிடத்தில் சௌமியா வந்துவிட்டார். அதிகம் போனால் இருபத்தைந்து வயது இருக்கும். படிய வாரிய தலைமுடி. ஜீன்ஸ், டீ சர்ட் போட்டிருந்தார். சிரித்த, குழந்தை போன்ற முகம். நான் சுசீலாவையும் குழந்தைகளையும் அறிமுகப்படுத்தினேன். சுசீலாவை குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு, நானும் சௌமியாவும் புல் தரையில் அமர்ந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் உரையாடலை எங்கிருந்து தொடங்கலாம் என்ற யோசனையோடு, வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்தேன். சற்று தூரத்தில் அமர்ந்தபடி சுசீலா எங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். நான் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘ம்... உங்களைப் பத்தி சொல்லுங்க... உங்க சொந்த ஊரு, உங்க அப்பா அம்மா, உங்க இளமைக் காலம்...’&lt;br /&gt;&lt;br /&gt;சௌமியா பேச ஆரம்பித்து சிறிது நேரம்தான் ஆகியிருக்கும். திடீரென்று ப்ரியா ஓடி வந்து, ‘அப்பா! கிருஷ்ணா சருக்குல ஏறணும்னு அடம் பிடிக்கிறாம்ப்பா...’ என்றாள். அதற்குள் சுசீலா வந்து அவளை இழுத்தாள். ‘அப்பாவை தொல்லை பண்ணக்கூடாது. வா!’ குழந்தைகள் விளையாட, சுசீலா தனியாக அமர்ந்திருக்க நான் அடிக்கடி அவர்களையே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன சார்! ரொம்ப அன் ஈசியா இருக்கா? வேணும்னா அவங்களையும் இங்க வந்து உட்காரச் சொல்லுங்களேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல...’ &lt;br /&gt;&lt;br /&gt;நான் நன்றியோடு சௌமியாவைப் பார்த்துவிட்டு, சுசீலாவை கை காட்டி அழைத்தேன். என் பக்கத்தில் அமரச் சொன்னேன். சங்கடத்தோடுதான் அமர்ந்தாள். ‘அக்கா! இதுல தனியா பேசுறதுக்கு ஒண்ணும் இல்ல. நான் பேசுறதெல்லாம் பத்திரிகையில வரப் போகுது. ஊரே படிக்கப் போகுது. அப்புறம் என்ன...? கூச்சப்படாம உக்காருங்க...’ என்று சௌமியா, சுசீலாவின் கையைப் பிடித்து உரிமையோடு அழுத்தினார். அதற்குப் பிறகு குழந்தைகள் அடிக்கடி எங்களருகே ஓடி வருவதும், கூச்சல் போடுவதும், என்னையும் சுசீலாவையும் பிடித்து இழுப்பதும்கூட அந்த நேர்காணலுக்குப் பெரிய தொந்தரவாக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சௌமியா, கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னார். அவருக்குள் இளமைப் பருவத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், விஷயம் தெரிந்து வெளியே துரத்தப்பட்டு வீடு அன்னியமாகிப் போனது, தெருவில் இளைஞர்கள் கேலி செய்து அடித்து விரட்டியது, மும்பைக்கு ஓடிப் போய் ரயிலில் பிச்சை எடுத்தது, அறுவை சிகிச்சை செய்துகொண்டது, ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் திரிந்தது... என்று அவர் பேசப் பேச கலங்கிப் போய் கேட்டுக்கொண்டிருந்தாள் சுசீலா. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார் சௌமியா.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்காணல் முடிந்ததும் நான் ஒரு ஆட்டோ பிடித்து வந்தேன். சௌமியா ஆட்டோவில் ஏறுவதற்கு முன்னால் சுசீலா, அவர் கையைப் பிடித்துக்கொண்டாள். ‘கண்டிப்பா ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும்...’ சௌமியா சிரித்துத் தலை அசைத்து, கிருஷ்ணாவின் கன்னத்தில் செல்லமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் போனார். &lt;br /&gt;&lt;br /&gt;நானும் சுசீலாவும் பூங்காவில் இருந்த பெஞ்ச் ஒன்றில் பேசுவதற்கு விஷயம் இல்லாதது போல கொஞ்ச நேரம் எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். சுசீலாதான் மௌனத்தை உடைத்தாள். ‘கிளம்பலாமா?’ என்றாள். விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை அழைத்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் பைக்கைக் கிளப்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;‘சாப்பிடுறதுக்கு எங்க போலாம் சுசீ?’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஓட்டலுக்கெல்லாம் வேணாங்க. வீட்டுக்கே போயிடலாம். ஃபிரிட்ஜுல மாவு இருக்கு. தோசை ஊத்திக்கலாம்.’&lt;br /&gt;&lt;br /&gt;(கல்கி 30.10.2011 இதழில் வெளியான சிறுகதை) &lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-7660760537525649078?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/7660760537525649078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=7660760537525649078' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/7660760537525649078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/7660760537525649078'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2011/10/blog-post.html' title='ஆசுவாசம்!'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-3663914351808125358</id><published>2011-09-19T04:36:00.000-07:00</published><updated>2011-12-27T10:11:03.299-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நரேன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடிகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அறியப்படவேண்டிய நடிகர்-1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-3Z2ig0meOoM/TncrvkDA89I/AAAAAAAAAFQ/cQa4jiJqo7g/s1600/Naren%2B2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-3Z2ig0meOoM/TncrvkDA89I/AAAAAAAAAFQ/cQa4jiJqo7g/s320/Naren%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5654035953317114834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘எந்த கேரக்டரா இருந்தாலும் சிறப்பா பண்ணனும்!’&lt;br /&gt;&lt;br /&gt;- நடிகர் நரேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நரேன். இயக்குநர் பாலுமகேந்திரா கண்டுபிடித்த அருமையான நடிகர். ‘பாலுமகேந்திரா கதைநேரம்’, ‘கிருஷ்ணதாசி’, ‘கனாக்காணும் காலங்கள்’ உள்பட நிறைய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர். இயக்குநர் மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே!’ திரைப்படத்தில் மகளைக் கடத்தல்காரர்களிடம் பறிகொடுத்த தந்தையாக நடித்து, ‘அப்புக்குட்டி!’ என்று கதறியழுத காட்சியில், தமிழ் சினிமா ரசிகர்களை ‘இவர் யார்?’ என்று திரும்பிப் பார்க்க வைத்தவர். ‘யுத்தம் செய்’ படத்தில் காவல்துறை அதிகாரி. ‘பொல்லாதவன்’ திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனின் அடுத்த படைப்பான ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் மிக முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். கதையின் திருப்புமுனையே அவருடைய சேவலோடு தனுஷின் சேவல் மோதும் சண்டைக் காட்சிதான்.  அவரை சந்தித்து உரையாடினோம். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நீங்க எப்போ சினிமாவுக்கு வந்தீங்க, ஏன் வந்தீங்க, எத்தனை வருஷமா இந்த ஃபீல்டுல இருக்கீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;நரேன்:   எனக்கு சினிமா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நடிகராகவோ, இயக்குநராகவோ, ஒரு தயாரிப்பாளராகவோ... ஏதோ ஒண்ணு,  சினிமாவுல நாம இருக்கணும்ங்கற எண்ணம் எனக்கு சின்ன வயசுலருந்தே உண்டு. நானும் டிகிரி முடிச்சுட்டு, நிறையா வேலைக்குப் போனேன். பிஸினெஸெல்லாம் பண்ணினேன். ஆனா, எதுலயும் என்னால செட்டில் ஆக முடியல. கடைசியில நமக்கு சினிமாதான் சரின்னு ஒரு நாள் முடிவு பண்ணினேன். பாத்துக்கிட்டு இருந்த எல்லா வேலைகளையும் உதறிட்டு அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆகலாம்னு வந்தேன். அப்பிடி முடிவு செஞ்சுட்டேனே தவிர, அதுக்காக பல போராட்டங்கள் நடத்த வேண்டி இருந்துச்சு. எந்த டைரக்டர்கிட்டயும் அஸிஸ்டெண்ட்டா சேரவே முடியல. அந்தத் தேடல்லயே சில வருஷங்கள் ஓடிப் போயிடுச்சு. அப்பதான் வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்.  எனக்கு நடிக்கணுங்கற ஆசையும் இருந்துச்சு. அப்பதான் ஒரு நண்பர், ‘நடிகர் சங்கத்துல போய் சேருங்க! ஏதாவது தொடர்பு கிடைக்கும்’னு சொன்னார். நானும் நடிகர் சங்கத்துல போய் சேர்ந்தேன். அங்க நடக்குற டான்ஸ் கிளாஸ்ல கலந்துக்கிட்டேன். அங்க, எந்தெந்த இடத்துல படம் எடுக்குறாங்கன்னு தகவல் கிடைக்கும். நானும் எல்லா புது நடிகர்களையும் போல என்னை  ஃபோட்டோ எடுத்து வச்சுக்கிட்டு, டைரக்டர்களைப் பாத்து குடுக்க ஆரம்பிச்சேன்.  அப்பிடிக் குடுக்குறப்போதான் யோசிச்சேன். ‘எனக்கு நடிப்புல என்ன தெரியும்?’ முதல்ல என்னை நான் வளத்துக்கனும்னு முடிவு பண்ணினேன். ஷூட்டிங்ல போய் என்ன செய்யப் போறோம், எப்பிடி நடிக்கப் போறோம்ங்கற பயத்துலயே இருந்துக்கிட்டு, அதே சமயம் நடிக்க வாய்ப்புக் கேக்கறதும் எனக்கு சரியாப் படலை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்துல டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் ஒரு நடிப்புக் கல்லூரி ஆரம்பிச்சிருந்தாங்க. அங்க போய் சேர்ந்தேன். அங்க மதன் கேப்ரியல் அவர்கள்தான் சீஃபா இருந்தார். அவர் அடையாறு திரைப்படக் கல்லூரியில நடிப்புத் துறைத் தலைவரா இருந்தவர்.  அவருக்கு அசிஸ்டெண்ட்டா இருந்தவர் திரு. வேல் முருகதாஸ். இவங்க ரெண்டுபேரும்தான் எனக்கு ஆசிரியர்கள். முதல் நாள் இன்ஸ்டிடியூட்டுக்குப் போனேன். மொத்தம் பதினெட்டு மாணவர்கள் என் வகுப்புல இருந்தாங்க. அதுல நடிப்பே தெரியாத ஒரே மாணவன் நான் தான். ஆனா, கோர்ஸ் முடியும்போது எனக்கு அங்கே நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. எனக்கு நல்ல எக்ஸ்போஷர் கிடைச்சுது. என்னாலயும் நடிக்க முடியும்னு ஒரு நம்பிக்கையும் வந்துச்சு. இந்தப் பெருமையெல்லாம் என் ஆசிரியர்களைத்தான் சேரும். அப்போ டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் எல்லாம் ரொம்ப உதவியா இருந்தாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கோர்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் நான் நடிப்புல எந்த இடத்துல இருக்கேங்கறதே எனக்குத் தெரிஞ்சுது. அந்தப் புரிதல் வந்ததுக்கு அப்புறம்தான் இன்னும் நிறையா கத்துக்கணும், இன்னும் நிறையா பிராக்டீஸ் பண்ணணும்ங்கற எண்ணம் வந்துச்சு. அப்போ எனக்கு நான் படிச்ச நடிப்புக் கல்லூரியிலேயே, மதன் கேப்ரியல் மூலமா ஆசிரியரா சேர்றதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சுது. சில வகுப்புகளை எடுத்தேன். அந்த வகுப்புகள்கூட எனக்கான பயிற்சியாத்தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதான் பாலுமகேந்திரா சாரை வந்து ஒரு தடவை பார்த்தேன். வேற யார்கிட்டயும் போய் வாய்ப்புக் கேக்கலை. எனக்கு என்ன நடிக்கத் தெரியும்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் யார்கிட்டயும் போய் வாய்ப்பே கேக்கலை. பாலுமகேந்திரா சார் அப்போ இந்திப் படம் எடுத்துக்கிட்டு இருந்தார். ‘இந்தி தெரியுமா?’ன்னு கேட்டார். ‘தெரியாது’ன்னு சொன்னேன். ‘நான் தமிழ்ப்படம் எடுக்குறப்போ அறிவிப்பு வரும். அப்போ நேரா என்னை வந்து பாருங்க!’ன்னு சொன்னார் பாலுமகேந்திரா சார். ஆனா, அறிவிப்பு வரலை. அவரே என் ஃபோன் நம்பருக்குப் பேசிக் கூப்பிட்டார். போனேன். ‘ராமன் அப்துல்லா’ங்கற அவரோட படத்துல எனக்கு ஒரு சின்ன கேரக்டர் குடுத்தார். அதுக்கு முன்னாடி நான் நடிப்புக் கல்லூரியில ஆசிரியரா இருந்தப்பவே, ‘ஓம் சரவணபவா!’ன்னு ஒரு படம் எடுத்தாங்க. என். கிருஷ்ணசாமின்னு ஒரு தயாரிப்பாளர். ‘படிக்காத மேதை’ பட்ம் எடுத்தவர். அந்த ‘ஓம் சரவணபவா’வுல நான் சிவனா நடிச்சிருக்கேன். அதுதான் என்னோட முதல் படம். அதுக்கப்புறம்தான் ‘ராமன் அப்துல்லா’வுல சின்ன கேரக்டர்ல நடிக்க வாய்ப்புக் கிடைச்சுது. பாலுமகேந்திரா சார், ‘நல்லா வந்திருக்கு. நல்லா நடிக்கிறீங்க. அடுத்து நான் படம் பண்ணும்போது என்னை வந்து பாருங்க! நடுவுல நடுவுல வந்து என்னைப் பாத்து வாய்ப்புக் கேக்க வேண்டிய அவசியம் இல்லை’ன்னு சொன்னார். அவர் அப்பிடி சொன்னது எனக்கு ரொம்ப உத்வேகம் குடுத்த மாதிரி இருந்தது. இந்த மாதிரி ஒரு பெரிய டைரக்டர், ‘ஓ.கே.’ன்னு சொன்னதைத்தான் நடிப்புல என்னோட முதல் படியா நான் நினைச்சிருக்கேன். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பாலுமகேந்திரா சார் அதுக்கப்புறம் ‘கதை நேரம்’ ஆரம்பிச்சப்போ உங்களைக் கூப்பிட்டு விட்டாரா?&lt;br /&gt;&lt;br /&gt;நரேன்: இல்ல. அது ஒளிபரப்பாகி ஒரு வாரம் கழிச்சுத்தான் எனக்குத் தெரியும். அதுக்கப்புறம்தான் நான் அவரைப் போய்ப் பார்த்தேன். அவர், ‘யோவ்! எங்கய்யா போயிருந்தீங்க? நம்பரெல்லாம் மாறிப் போச்சு. உங்களுக்காக ரெண்டு, மூணு கேரக்டர் எல்லாம் போட்டு வச்சிருந்தேன்’ன்னார். அப்புறம் ‘உங்களுக்காக ரெண்டு, மூணு கதையெல்லாம் வச்சிருக்கேன்’ன்னாரு. அதுக்கப்புறம் ‘கதைநேரம்’ல நடிக்க ஆரம்பிச்சேன். ‘கதைநேரம்’ பண்ணும்போதுதான் நான் நடிப்புல எவ்வளவு பின் தங்கியிருந்தேன்னு எனக்குத் தெரிஞ்சுது. நடிப்புல இன்னும் எவ்வளவு விஷயம் இருக்கு, இன்னும் எவ்வளவு என்னை வளத்துக்கணும் அப்படிங்கறதெல்லாம் தெரிஞ்சுது. ஸ்கூல்ல படிச்சது, பிராக்டீஸ் பண்ணினது இதையெல்லாம் தாண்டி பிராக்டிக்கலா எவ்வளவு விஷயம் இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. நான் பாலுமகேந்திரா சார்கிட்டதான் நடிப்பைக் கத்துக்கிட்டேன். அவர்தான் என்னோட முதல் குரு. அவர்கிட்ட ஒரு வருஷம் தொடர்ந்து நடிச்சேன். வேற எந்த வேலையும் செய்யாம, அவர் எப்போ கூப்பிட்டாலும் நடிக்கறதுக்குத் தயாரா இருந்தேன். பாலுமகேந்திரா சார் யூனிட்ல எனக்கு நிறையா நண்பர்கள் கிடைச்சாங்க. வெற்றிமாறன், விக்ரம் சுகுமாரன், சுரேஷ்... இப்பிடி. அங்க போய்த்தான் நிறையா படிக்க ஆரம்பிச்சேன். நான் வெகுஜனப் பத்திரிகை, எழுத்தைத்தான் அதுவரைக்கும் நிறையா படிச்சுக்கிட்டு இருந்தேன். பாலுமகேந்திரா சார்தான் நிறையா எழுத்தாளர்களையும் நல்ல இலக்கியத்தையும் அறிமுகம் செஞ்சு வச்சார். எனக்கு ரொம்ப இலக்கியம் தெரியாதுன்னாலும், ‘இதைப் படிக்கலாம், இது வேணாம்’னு பிரிச்சுப் பாக்க அதுக்கப்புறம் முடிஞ்சுது. ‘கதைநேரம்’ முடிஞ்சதுக்கு அப்புறம் நிறைய தொலைக்காட்சித் தொடர்கள்ல நடிக்க வாய்புக் கிடைச்சுது.  &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: எத்தனை சீரியல்ல நடிச்சிருப்பீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;நரேன்: எப்பிடியும் இருபதுக்கு மேல இருக்கும். முதல்ல ‘கதைநேரம்’, அப்புறம் ‘கிருஷ்ணதாசி’ல முக்கியமான ரோல். சின்னதும் பெருசுமா நிறையா பண்ணிட்டேன். கடைசியா, நான் விஜய் டி.வி.ல ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ பெரிய ஹிட். அதுக்கப்புறம் விஜய் டி.வி.லயே நிறையா சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: ‘அஞ்சாதே!’ல நடிக்கிற வாய்ப்பு எப்பிடி வந்தது? &lt;br /&gt;&lt;br /&gt;நரேன்: இயக்குநர் மிஷ்கின்கிட்டருந்து அழைப்பு வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ‘அஞ்சாதே!’ வெளியானதுக்கு அப்புறம் எல்லாருமே நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க. அதுக்கான எல்லா பெருமையும் இயக்குநர் மிஷ்கினுக்குத்தான் போய்ச் சேரணும். அதுல என்னோட பங்களிப்பு ரொம்ப கம்மின்னுதான் நான் சொல்ல முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அதுல நடந்த ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்லுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நரேன்: அதுல கதைப்படி என் பொண்ணு ரோட்ல விழுந்து கிடப்பா. நான் அவளைப் பாத்து கதறிக்கிட்டே நடந்து வரணும்னு மிஷ்கின் சொன்னார். எனக்கு என்ன தோணிச்சுன்னா, என் பொண்ணைப் பாத்ததும், எனக்கு என்ன வயசா இருந்தாலும் ஓடிப் போய்ப் பாக்கணும்னுதான் தோணிச்சு.  ஏன்னா, என் மகளை ஒரு லுங்கியோட சுத்தி ரோட்ல போட்டிருக்கான். அவ டிரெஸ் இல்லாம ரோட்ல கிடக்கா. அந்த நிலைமையில என்னால ஓடத்தான் முடியும். நின்னு நிதானமா நடக்க முடியாது. இதை நான் மிஷ்கின்கிட்ட சொன்னேன். அவரு ‘இல்ல, நீங்க நின்னு நிதானமா நடங்க. இதை நான் ஹைஸ்பீட்லதான் எடுக்கப் போறேன்’னு சொன்னார். நான் திரும்பச் சொன்னேன். ‘இல்ல சார், என்னால நடக்க முடியல. அந்த வேகத்துல ஓடத்தான் வருது’ன்னு சொன்னேன். ‘நடக்கணும்னா நடக்கலாம். ஆனா, அது எக்ஸர்சைஸ் மாதிரி இருக்கும். உணர்ச்சி பூர்வமா செய்ய முடியல’ன்னேன். உடனே மிஷ்கின் சூட்டிங்கை நிப்பாட்டிட்டார். நான் நடந்து வர்ற அந்தக் காட்சிக்கு ஏற்கெனவே ஒரு பின்னணி இசையை தயார் பண்ணி வச்சிருந்தார். அதை அசிஸ்டெண்ட் டைரக்டரை தேடி எடுக்கச் சொன்னார். தன்னோட வாக்மேன்ல போட்டுக் காமிச்சார். அது வரைக்கும் ஷூட்டிங் நிக்குது. அதைக் கேட்டப்போதான் எனக்கு அதுக்கான ஃபீலிங் வந்துச்சு. ‘அய்யய்யோ என் பொண்ணு!’ன்னு ஓடுறதைவிட, ‘அய்யய்யோ என் பொண்ணைக் காப்பாத்த கையாலாகாதவனா ஆயிட்டேனே! எப்பிடி என் பொண்ணைப் பாக்கப் போறேன்?’ங்கற உணர்வு வந்துச்சு. அதுக்கு மிஷ்கின் சொன்ன காரணம் என்னன்னா, ‘நீ யாரா வேணா, எப்பிடி வேணா இரு. லாஜிக் எப்பிடி வேணா இருக்கட்டும். எனக்கு நீங்க நடந்து வரும்போது, படம் பாக்குறப்போ, ஒவ்வொரு பெண்ணைப் பெத்த தகப்பனும் அழணும். அப்பிடி அழுதாதான், கடைசியில அப்பிடி செஞ்சவனை ஒரு ஜந்துவை சுடுற மாதிரி சுட முடியும். ஒரு உயிரில்லாத ஜடப் பொருளை சுடப் போற மாதிரிதான் இதுல காட்சி இருக்கு. அதுக்கு நீங்க இந்த இடத்துல நடந்து வர்றதுதான் ரொம்ப முக்கியம். ஒரு தகப்பனோட கையாலாகாத்தனம்தான் எனக்கு வேணும்’ அப்பிடின்னு சொல்லி அவர் எனக்குப் புரிய வச்சார். அதுக்கப்புறம்தான் என்னால பண்ண முடிஞ்சுது. இன்னிக்கும் அந்தக் காட்சியை ரொம்பப் பெருசாத்தான் எல்லாரும் பேசிக்கிட்டு இருக்காங்க. மிஷ்கின் சார் எனக்கு வாய்ப்பும் குடுத்து, நான் கேக்கற கேள்விக்கு பொறுமையா உக்காந்து பதிலும் சொன்னார். பொதுவா எந்த இயக்குநரும் இப்பிடியெல்லாம் சொல்லவே மாட்டாங்க. ‘யோவ்! மெல்லமா நடய்யா!’ன்னுட்டு போயிடுவாங்க. அந்தப் படம் வெளிய வந்ததுக்கப்புறம் என்னைப் பாக்கறவங்கள்லாம் ‘என்னால அதைப் பாக்க முடியல!’ன்னு சொல்லியிருக்காங்க. ஒரு ஆண்பிள்ளையை மட்டும் பெத்த தகப்பன்கூட என்கிட்ட வந்து சொல்லியிருக்கார். அதுக்கு முக்கியக் காரணம் மிஷ்கின் சார்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நடிக்கறதுதான் உங்க கேரியர்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க. அதுக்கப்புறம் ஹீரோவா நடிக்கணும், வில்லனா நடிக்கணும்னு ஏதாவது ஒரு புள்ளியைத் தேடிப் போனீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நரேன்: அப்பிடியெல்லாம் இல்ல. எனக்கு சினிமாவுல ஏதாவது ஒரு பங்களிப்பை செலுத்தணும், அவ்வளவுதான். சினிமாவுல எந்த வேலையா இருந்தாலும் செய்யறதுக்குத் தயாரா இருக்கறவன் நான். நடிக்கணும்னு வரும்போது அந்த கேரக்டராத்தான் நடிக்கணும்னு தோணும். எனக்கு சின்ன வயசுலயே நிறைய கேள்விகள் தோணும். ‘ஏன் இவர் இவ்வளவு ஃபிரெஷ்ஷா இருக்காரு? ஆனா சோகமா இருக்காரு? நடிக்கிறாரா?’ன்னு தோணும். இன்ஸ்டிடியூட்ல போய் படிக்கும்போதுதான் அதுக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சுது. ஒரு குணச்சித்திர நடிகரா வரணுங்கறதுதான் என்னோட விருப்பமா இருந்துச்சு. குறிப்பா சொல்லணும்னா, திரு நாசர் அவர்களைப் போல வரணும்னு. எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும். ஒரு கேரக்டரை உள்வாங்கி, அதாவே மாறுவது எப்பிடின்னு தெரிஞ்சதுக்கப்புறம் நான் அவர் மாதிரி வரணும்னு நினைச்சேன். நான் டைரக்டரோட நடிகனா இருக்கணும்னுதான் விரும்பறேன். எனக்குன்னு ஒரு பாணியோ, ஸ்டைலோ இல்லாம டைரக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை உள்வாங்கி, அதை அப்பிடியே நடிப்பாக்கணுங்கறதுதான் என்னோட பாணியா இருக்க முடியும். அதுதான் ஒரு நடிகனோட கடமையா இருக்க முடியும்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-0QNlcZq9sO8/Tncp6BtTB8I/AAAAAAAAAFI/zHOMWBrLJhE/s1600/Naren%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/-0QNlcZq9sO8/Tncp6BtTB8I/AAAAAAAAAFI/zHOMWBrLJhE/s320/Naren%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5654033934054524866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: சினிமாவையும் நடிப்பையும் நம்பி இந்தக் காலத்துல வாழறது சாத்தியமா?&lt;br /&gt;&lt;br /&gt;நரேன்: ரொம்பக் கஷ்டம். சிலபேருக்கு அது ஈசியா அமைஞ்சிடுது. சிலபேர் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு, கடைசிவரைக்கும் அப்பிடியே இருந்துடுறாங்க. நானே ‘நான் இது இதுலதான் நடிப்பேன், எனக்கு இவ்வளவு சம்பளம் குடுத்தாத்தான் நடிப்பேன்’னு நிறைய வாய்ப்புகளை மறுத்துடுறேன். காரணம் என்னான்னா, என்னோட மனைவியும், குடும்பமும் எனக்கு சப்போர்ட் பண்றாங்க. அதனால பொருளாதாரரீதியா என்னால சமாளிக்க முடியுது. இது நிறையாபேருக்கு நடக்காது. நான் பதினஞ்சு வருஷமா போராடிக்கிட்டு இருக்கேன். என் மனைவி குடும்பத்தையும் எல்லா பொறுப்புகளையும் எடுத்துக்கிட்டு செய்யறதால, என்னால என் லட்சியத்தை நோக்கிப் போக முடியுது. ‘அஞ்சாதே!’ வந்ததுக்கு அப்புறமும் எனக்கு பெரிய கேரக்டர் வரலை. அதுக்காக காத்திருந்து நான் முயற்சி பண்றேன்னா அதுக்குக் காரணம் என்னோட குடும்பப் பின்னணிதான். இது எல்லாருக்கும் சாத்தியமில்ல. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு மாதிரியா வாழ்க்கை அமையுது. அதை பொதுப்படையா சொல்ல முடியல. சொல்றது கஷ்டம். சினிமாவைப் பொறுத்தவரை அவங்கவங்களா அமைச்சுக்கறது, அமையறது... இப்பிடித்தான். ஒரு ஐ.டி. கம்பெனியில வேலை பாக்கணும்னா இஞ்ஜினியரிங் முடிச்சிருக்கணும், ஒரு டிகிரி முடிச்சிருக்கணும்னு என்னென்னவோ அளவுகோல்கள் இருக்கு. வழிமுறைகள் இருக்கு. சினிமாவுல இல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: ஒரு படத்தைப் பாக்கும்போது ‘இந்த ரோல்ல நாம பண்ணியிருக்கலாமே’ன்னு ஏதாவது ஒரு நடிகரோ, ஒரு பாத்திரமோ உங்களை பாதிச்சிருக்கா?   &lt;br /&gt;&lt;br /&gt;நரேன்: இல்ல. பொதுவா சினிமாவுல வர்ற எல்லா பாத்திரங்களையும் பண்ணணும்னு ஆசை இருக்கத்தான் செய்யும். நடைமுறையில சாத்தியம் இல்லல்ல? அந்த மாதிரி எதுவும் இல்ல. பாக்கும்போது பிரமிப்புத்தான் கூடுதே தவிர, நாம பண்ணியிருப்போமான்னு ஒரு சந்தேகம்கூட அடிப்படையிலகூட வருது. (சிரிப்பு).&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: ‘ஆடுகளம்’ படத்தில் நடிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நரேன்: இயக்குநர் வெற்றிமாறனோட ஒர்க் பண்றதுங்கறது ரொம்ப இண்டரெஸ்டிங்கான விஷயம். டென்ஷனே இல்லாம எல்லாத்தையும் சொல்லிக் குடுப்பார். இந்தப் படத்துல மதுரை பாஷைல பேசணும். நாம டயலாக் பேசறப்போ, அந்த மொழி சரியா வரலைன்னா, பதட்டமே படமாட்டாரு. ‘சரி. பரவால்ல இன்னொருதடவை எடுத்துக்கலாம்’னு சொல்லுவாரு. அந்த அளவுக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருப்பாரு. அவரை எனக்கு பத்தாண்டுகளாத் தெரியும். அவரோட என்னால ரொம்ப சுலபமா ஒன்றி வேலை பார்க்க முடியுது. ரொம்ப ஃபிரீயா இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘ஆடுகளம்’ பட அனுபவத்துல ஒண்ணே ஒண்ணை நான் சொல்லணும். வெற்றிமாறன் ‘நீங்க மதுரை மொழிதான் பேசணும்’னு எங்களுக்கு சொல்லிக் குடுத்தாருன்னா, அதுக்குக் காரணம் இருக்கு. அவரு அதுக்கு முன்னாடி மதுரைக்குப்  போய்த் தங்கி, கிட்டத்தட்ட ஒருவருஷம் மதுரைத் தமிழைக் கத்துக்கிட்டாரு. இது எனக்கு ரொம்பப் புதுசா இருந்தது, ஆச்சரியமா இருந்தது. அவரு கத்துக்கிட்டு எங்களுக்குக் கத்துக் குடுக்கறாரு. இன்னும் அவர் அந்த மதுரைத் தமிழை சரியா பேசிக்கிட்டு இருக்காரு. டப்பிங்ல நாங்க பேசறதை சரி பண்ணினார். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: வெற்றிமாறன், பாலுமகேந்திராவின் சீடர். இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது? ஏதாவது வித்தியாசம் உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;நரேன்: பாலுமகேந்திரா சார்கிட்ட சில சீரியல் நடிகர்கள் எல்லாம்கூட நடிச்சிருக்காங்க. அவர்கிட்ட அவங்க சொல்லுவாங்க, ‘சார்! என்ன பண்ணணும்னு சொல்லுங்க. அப்பிடியே பண்றோம்’னு சொல்லுவாங்க. நான் அவர்கிட்ட ஆர்வக்கோளாறோட போய், ‘சார், நானே புதுசா ஏதாவது பண்றேன்’னு சொல்லி எதையாவது செய்வேன். அதுல அவருக்கு திருப்தியே வராது. கடைசியில ‘எப்பிடி பண்ணினா நல்லா இருக்கும் சார், எனக்குப் புரியல சார்!’னு அவர்கிட்டேயே கேப்பேன். அவர் சின்னதா ஏதாவது பண்ணிக் காமிப்பார். அப்போதான், ‘அய்யய்யோ! இது நமக்குத் தோணலியே!’ன்னு நினைப்பேன். அவர்கிட்ட நிறையா கத்துக்கிட்டேன். அவர் எல்லாத்துக்கும் காரணம் சொல்லுவாரு. அவருடைய பாணி ஒண்ணு இருக்கும். பேசுற தொனி, அங்க அசைவுகள் எல்லாம் இருக்கும். வெற்றிமாறன் எல்லாத்தையும் நேச்சுரலாத்தான் வேணும்னு சொல்லுவாரு. அவர்கிட்ட அந்த கேரக்டரா நடந்து காட்டணும். கொஞ்சம் ஜாஸ்தியாவோ, குறைச்சலாவோ பண்ணிடக்கூடாது. ரொம்ப யதார்த்தமா அந்தப் பாத்திரமாவே வாழணும். ஆனா, வெற்றி சார்கிட்ட ரொம்ப ஜாலியா ஒர்க் பண்ணலாம். எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். பொதுவா, இந்த இரண்டு இயக்குநர்கள்கிட்டயுமே எதையும் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். நம்ம சந்தேகத்தை அவங்க கிளியர் பண்ணி புரிய வச்சிடுவாங்க. ஸ்டைல் மட்டும் வேற, வேற. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நடிப்புல உங்களோட குறிக்கோள் எதுவா இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;நரேன்: நான் ஒரு கேரக்டர் பண்ணி, படம் வெளியாயிடுச்சு. அந்த கேரக்டர்ல நான் பண்ணினது ரொம்ப சரியா இருக்கணும். யாராவது, ‘இவருக்கு பதிலா வேற யாராவது பண்ணியிருக்கலாமே!’ன்னு சொல்லிடக்கூடாது. நான் எந்த பாத்திரத்துல நடிச்சாலும் அது பொருத்தமா, சரியா இருக்கணும். இதை வேற யாராலயும் பண்ண முடியாதுன்னு சொல்ல வரலை. ‘அய்யய்யோ! இதை நல்லாப் பண்ணியிருக்கலாமே!’ன்னு ஒரு அவப்பெயர் வந்துடக்கூடாது. எந்த பாத்திரமா இருந்தாலும் சிறப்பா பண்ணணுங்கறதுதான் என் லட்சியமே. &lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;(கனடாவில் இருந்து வெளிவரும் ‘விளம்பரம்’ பத்திரிகைக்காக நான் நடிகர் நரேனுடன் செய்த நேர்காணல்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-3663914351808125358?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/3663914351808125358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=3663914351808125358' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/3663914351808125358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/3663914351808125358'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2011/09/blog-post_19.html' title='அறியப்படவேண்டிய நடிகர்-1'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-3Z2ig0meOoM/TncrvkDA89I/AAAAAAAAAFQ/cQa4jiJqo7g/s72-c/Naren%2B2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-8193570462284925704</id><published>2011-09-05T03:52:00.000-07:00</published><updated>2011-09-05T03:54:27.071-07:00</updated><title type='text'>தவிக்க வைக்கும் தனியார் பேருந்துக் கட்டணம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-J6x0MMu5f7w/TmSqVwaaGTI/AAAAAAAAAFA/YOERoWg7yPQ/s1600/18THOMNI_BUS_TERMIN_116957f.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 255px;" src="http://4.bp.blogspot.com/-J6x0MMu5f7w/TmSqVwaaGTI/AAAAAAAAAFA/YOERoWg7yPQ/s320/18THOMNI_BUS_TERMIN_116957f.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5648827123379083570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வெளியூருக்குப் போக சென்னைவாசிகள் பெரிதும் நம்பியிருப்பது ரயில்களையும் அரசுப் பேருந்துகளையும் அடுத்துத் தனியார் பேருந்துகளைத்தான். டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், முழுக்கக் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது, வால்வோ.. என்று விதவிதமான தனியார் பேருந்துகள். சென்னை கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களுக்கும், பெங்களூர், திருப்பதி, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற வேற்று மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கும் செல்ல பேருந்துகள் கிடைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தனியார் பேருந்துகளில் படுக்கை வசதிகூட வந்துவிட்டது. கொஞ்சமும் அலுங்காமல், குலுங்காமல் விமானத்தில் பயணம் செய்வது போன்ற சொகுசான அனுபவத்தைத் தரும் அதி நவீன பேருந்துகள் எல்லாம் வந்துவிட்டன. ஆனாலும் இப்படிப்பட்ட தனியார் பேருந்துகள், நடுத்தர மற்றும் சாதாரண மக்களுக்கு ஏற்றவை அல்ல என்பதுதான் பல பேருடைய கருத்தாக இருக்கிறது. முதல் காரணம், இந்தத் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் பயணச்சீட்டுக் கட்டணம். அரசுப் பேருந்துகளைவிட இரு மடங்குக்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையிலிருந்து கும்பகோணத்துக்குப் போக அரசுப் பேருந்தில் 130 ரூபாய் கட்டணம் என்றால், குளிர்சாதன வசதி இல்லாத தனியார் பேருந்தில் 300 ரூபாய் வரைக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதுவே குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என்றால் 450 ரூபாய் வரைக்கும்கூட வசூல் செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டணங்கள்கூட அதிகம் கூட்டம் சேராத சாதாரண தினங்களில்தான். விழாக்காலம், பள்ளிவிடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் ஒரு வரைமுறை இல்லாமல் பயணச்சீட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரைக்குப் போக 300 ரூபாய் என்றால் 600 ரூபாய்கூட வசூல் செய்வார்கள். அவசர வேலையாகப் போகிறவர்கள், முன் பதிவு செய்யாமல் திடீர்ப் பயணம் செய்யவேண்டி இருப்பவர்களுக்கு வேறு வழியில்லை. அதிகக் கட்டணம் கொடுத்துப் பயணம் செய்யவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண தினங்களில், இன்னொரு பிரச்னையும் இந்தத் தனியார் பேருந்தில் நடக்கும். ஒருவர் திருச்சி போவதற்காக கோயம்பேடு வருவார். ‘இப்போ கிளம்பிடும். ஏறுங்க!’ என்று தனியார் பேருந்தில் ஏறச் சொல்வார்கள். உள்ளே ஏறியவர் இருக்கைகள் காலியாக இருப்பதைப் பார்ப்பார். ஏறிய பிறகு இறங்கவும் மனம் இருக்காது. தனியார் பேருந்து நடத்துனர், இருக்கைகள் நிரம்பும்வரை பஸ்ஸை எடுக்காமல், ஆள் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பார். ஏறியவர் காத்திருப்பார். சில சமயங்களில் பேருந்து பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்ப இரண்டு மணி நேரத்துக்கும் மேல் கூட ஆகிவிடுவதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அதோடு ஊருக்குப் போகிற வழியில் நினைத்த இடத்தில் பேருந்துகளை நிறுத்திவிடுவார்கள். பஞ்சர், பிரேக் டவுன்.. போல பேருந்துக்கு ஏதாவது பிரச்னை என்றால், அரசுப் பேருந்துகளைப் போல், மாற்று ஏற்பாடு வசதி இல்லை.. என்று பல குறைகளை பயணிகள் சொல்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்னைகளை எல்லாம் சொல்லி, சென்னை கோயம்பேட்டில் உள்ள சில தனியார் பேருந்து உரிமையாளர்களிடமும், நடத்துனர், ஓட்டுனர்களிடம் விசாரித்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;‘எல்லா தனியார் பேருந்து உரிமையாளர்களும் இஷ்டத்துக்கு டிக்கெட் காசு வசூலிக்கறது இல்லீங்க. ஒரு தடவை இவ்வளவுதான்னு டிக்கெட் விலையை நிர்ணயம் செஞ்சுட்டாங்கன்னா அதுக்கு மேல ஒரு பைசாகூட வசூல் செய்யாத எத்தனையோ நல்ல பேருந்து நிறுவனங்கள் எல்லாம் வந்துடுச்சு. இப்போல்லாம் இண்டர்னெட்லயே டிக்கெட் புக் பண்ணலாம். அதோட எட்டு மணிக்கு ஒரு பஸ் கிளம்பணும்னா, யாருக்காகவும் காத்திருக்காம, டயத்துக்குக் கிளம்பிடுற எத்தனையோ நல்ல பஸ்கள் இருக்கு.’ என்கிறார் ஒரு தனியார் பேருந்து ஓட்டுனர். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தனியார் பேருந்து உரிமையாளரோ வேறு விதமாக பதில் சொல்கிறார். ‘தனியார் பேருந்துகளுக்கு இருக்கை வரின்னு ஒண்ணு இருக்கு. அதுவே பஸ்ஸோட வருமானத்துல பெரும்பாலான தொகையை முழுங்கிடும். ஒரு பஸ் ஓடுதோ, இல்லையோ மூணு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபா இருக்கை வரி கட்டியாகணும். அதாவது முப்பத்தி ஆறு சீட்டுகள் கொண்ட ஒரு பஸ்ஸுன்னு வச்சுக்குவோம். ஒரு சீட்டுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 60 ரூபா இருக்கை வரி கட்டணும். எங்களுக்கு அரசு பேருந்துகளைப் போல மானியமோ, இலவச டீசலோ, வேற எந்தச் சலுகையோ கிடைக்கறதில்ல. வேற வழி இல்லாமத்தான் டிக்கெட் விலையை ஏத்தவேண்டியதா இருக்கு.’&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் எல்லாம் நிறுத்தி, நிறுத்தி டிக்கெட் போடுவதுகூட ஒரே ஒரு பஸ்ஸை மட்டும் வைத்துக்கொண்டு, அலுவலகம்கூட இல்லாமல் இருக்கும் சிறு பேருந்து உரிமையாளர்கள்தான் என்கிறார் ஒரு நடத்துனர். &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், ஒரு தனியார் பேருந்து நடத்துவது என்பது இன்றைக்கு அசாத்தியமான காரியம். இருக்கைவரி போக, டீசல் செலவு, ஊழியர்களுக்குக் கட்டணம், பராமரிப்புச் செலவு என்று என்னென்னவோ இருக்கின்றன. சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் போய் வருகிற ஒரு தனியார் பேருந்து, தனியார் டோல்கேட்டுகளில் கட்டும் கட்டணம் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு ரூபாய் ஆகிறது என்கிறார் ஒரு பேருந்து உரிமையாளர். ஆனால், அரசுப் பேருந்துகளுக்கு இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை கோயம்பேட்டில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் அலுவலகம் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பத்துக்குப் பத்து சதுர அடி கொண்ட அந்த இடத்துக்கு அவர் வாடகையாகக் கொடுக்கவேண்டிய தொகை மாதம் ஒன்றுக்கு 18,000 ரூபாய். இந்தக் கட்டணமும் வருடா வருடம் ஏறிக்கொண்டே போகிறது. விபத்துகள் நடக்கும்போது பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால், ஏற்கெனவே வெளியூர் போக்குவரத்துக்குப் போதிய வாகன வசதி இல்லாமல் தவிக்கிறது சென்னை. இந்தச் சூழ்நிலையில், தனியார் பேருந்துகளை ஒரு வரைமுறைக்கு உட்படுத்தி, அவர்களுக்கான வசதிகளையும், சில சலுகைகளையும் செய்துதர அரசு முன் வந்தால், டிக்கெட் கட்டணம் குறையும். பொது மக்களும் பயன் அடைவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;(ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலியில் ‘நகர்வலம்’ பகுதியில் வாசிக்கப்பட்ட என் கட்டுரை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-8193570462284925704?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/8193570462284925704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=8193570462284925704' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/8193570462284925704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/8193570462284925704'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2011/09/blog-post.html' title='தவிக்க வைக்கும் தனியார் பேருந்துக் கட்டணம்!'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-J6x0MMu5f7w/TmSqVwaaGTI/AAAAAAAAAFA/YOERoWg7yPQ/s72-c/18THOMNI_BUS_TERMIN_116957f.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-1117520976244760282</id><published>2011-06-27T06:53:00.000-07:00</published><updated>2011-06-27T07:01:19.236-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹரன் பிரசன்னா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிழல்கள்'/><title type='text'>நிழல்கள் கவிதைத் தொகுப்பு : ஒரு பார்வை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-TZ9XLalEiiM/TgiMyGxoVXI/AAAAAAAAAE4/xppLM-T7fZk/s1600/Nizhalgal.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-TZ9XLalEiiM/TgiMyGxoVXI/AAAAAAAAAE4/xppLM-T7fZk/s320/Nizhalgal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5622898927212189042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் விமர்சகன் அல்ல. ஆனால், எப்போதாவது, நான் வாசித்து, ரசித்த எந்தப் புத்தகத்தையாவது அறிமுகப்படுத்திவிடவேண்டும், அதை ஓரிருவராவது வாசித்துவிடவேண்டும் என்கிற மெனக்கிடல் எனக்கும் உண்டு. அந்த வகையில் அவ்வப்போது “பெண்ணே நீ” பத்திரிகையிலும்,  ‘அம்ருதா’ இதழிலும், “புத்தகம் பேசுது” மாத இதழிலும், என் ப்ளாக்கிலும் சில புத்தகங்களை அறிமுகம் செய்து வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நூல்தான் “நிழல்கள்” என்கிற கவிதைப் புத்தகம். எழுதியவர் ஹரன் பிரசன்னா. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் என் சக தோழர். என் அலுவலகத்தில் பணி புரிபவர். இதெல்லாம் இந்த நூலைக் குறித்த அறிமுகத்தை எழுதுவதற்குக் காரணமாகிவிடவில்லை. அவருடைய கவிதைகளை நானாகத்தான் கேட்டு வாங்கினேன். வாசித்துப் பார்த்தேன். நவீன கவிதைப் பரப்பில், மிகவும் கவனத்துக்குரிய ஒன்றாகவே அவர் கவிதைகள் எனக்குப்பட்டன. அதன் பொருட்டே இதை எழுத வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் சில அரசியல்களையும் பேசவேண்டியதாக இருக்கிறது. எனக்கு மிகவும் அன்னி(ந்நி)யோன்யமான சில பத்திரிகை ஆசிரியர்களிடமும் உதவி ஆசிரியர்களிடமும் பொறுப்பாசிரியர்களிடமும் ஒரு கவிதைத் தொகுப்புக் குறித்தான விமர்சனத்தை நீங்கள் பிரசுரிப்பீர்களா என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் கவலைக்குரியது. ”ஜாலியா, அப்டேட்டா, பிரச்னை பீதியைக் கிளப்புற மாதிரி ஏதாவது எழுதுங்களேன். இது வேண்டாம், ப்ளீஸ்” என்றார்கள். நான் சிபாரிசு செய்து, ஓர் இலக்கியப் பத்திரிகையில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் மகாத்மா வாயே திறக்கவில்லை என்பது என் கஷ்ட காலம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவை இங்கே முக்கியம் அல்ல. “நிழல்கள்” தொகுப்பில் நம்மைப் பரவசப்படுத்துகிற, யோசிக்க வைக்கிற, நெகிழச் செய்கிற, நம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய பல அம்சங்கள் கவிதைகளாக விரிந்திருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;”யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்” என்கிற கவிதை இப்படி ஆரம்பிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்&lt;br /&gt;நான்கைந்து பேர்களுடன்&lt;br /&gt;மெல்ல நகர்கிறது&lt;br /&gt;அந்த நிமிடத்தைப் போல.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அந்த யாரோவுக்குத் தூவப்படும் மலர்களுள் சில&lt;br /&gt;என் மீது விழ எனது ஆசாரம் விழித்துக்கொள்கிறது,&lt;br /&gt;எவ்வளவு விலகிக்கொண்டும் &lt;br /&gt;விலகவில்லை மலர்களின் வாச&lt;/span&gt;னை&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கவிதை மேலே மேலே போனாலும், அதைத் தாண்டி என்னால் போக முடியவில்லை. இதுதான் கவிதை. இந்த அனுபவம்தான் கவிதை. சவ ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் இருக்கும். எனக்கும் இருக்கிறது. அனுபவங்கள் கவிதையாகிறபோது எப்போதுமே அதனுள் இருக்கும் நிஜம் நம்மை ஈர்க்கும். அந்த வகையில் இந்தக் கவிதை என்னை மிகவும் பாதித்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஹரன் பிரசன்னா மிகச் சாதாரணமான ஆள் இல்லை. பழகிப் பார்த்தவர்களுக்கு அது தெரியும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கு அவரிடம் ஒரு பதில் இருக்கும். குறிப்பாக, இலக்கியம், சினிமா, அரசியல். இவற்றையும் தாண்டி பேசுவதற்கு வேறு முக்கிய விஷயங்கள் இருக்கிறதா என்ன? அவரைப் பொறுத்தவரை எதுவும் பேசு(பாடு)பொருளுக்கு அப்பாற்பட்டதல்ல. விவாதப் பொருள் எதுவாக இருந்தாலும், ஒரு வலுவான வாதத்தை முன் வைக்கிற போது அமர்ந்த குரலில் சொல்லுவார். அவர் சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. கட்டைக் குரலில், அவர் பாடுகிற பழைய பாடலைக் கூட பார்வையாளனை பதில் பேசாமல் கேட்க வைக்கிற மாதிரியான திறமை அவருக்கு இருக்கிறது. அவர் பாடுகிறபோது, அந்தப் பாடலின் வரிகள் நம்மை அந்தப் பாடலுக்குள் இழுத்துப் போட்டுவிடும். இவையெல்லாம் பிரசன்னாவின் தனிப்பட்ட ஆளுமைகள். ஆனால், கவிதை அப்படி கிடையாது. முன் பின் முகம் அறியாத ஒரு வாசகன் வாசிக்கிறபோது, அதில் ஈர்ப்பிருந்தால் ஒழிய அதில் அவனால் ஒன்ற முடியாது. கன்னியாகுமரியில் இருந்து கடல் கடந்த தேசம் வரைக்கும் தமிழ் படிக்கிறவர்கள் யாராக இருந்தாலும், “ஹலோ! ஒரு நிமிடம்! இதை வாசித்துவிட்டு நகருங்கள்!” என்று உரிமையோடும் அதே சமயம் அதற்கான அத்தனை தகுதிகளோடும் “நிழல்கள்” தொகுப்பு மூலமாக அறைகூவல் விடுகிறார் பிரசன்னா. &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை என்பது அனுபவம், மொழி ஆளுமை, ஒரு சங்கதி, ஓர் உணர்ச்சி, ரசனை... இப்படி ஏதோ ஒன்றை வாசகனுக்கு நுட்பமாக உணர்த்த முயல்கிற சங்கதி. இந்த இலக்கணம் மட்டுமே கவிதை என்று நான் சொல்லவில்லை. இவை நல்ல கவிதையின் சில முக்கியக் கூறுகள். கவிதை என்பது கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையில் நடக்கிற ஓர் உரையாடல். அது ஒரு சங்கமம். அந்த வகையில் கவிஞர் எழுதிய கவிதையில் வாசகனுக்கும் பங்கு உண்டு. அது அப்படித்தான். கவிதையின் முழுமை இப்படித்தான் இருக்கும் என்று உணர்தலும், ஒரு கவிதையின் பூரணத்துவம் இது போலத்தான் அமையும் என்று முடிவு செய்தலும்... ஒரு தீவிர, சரியான வாசகனால் மட்டுமே முடிகிற காரியம். அப்படிப்பட்ட ஒரு தேர்ந்த வாசகர், தன் கவிதையில் இனம் கண்டுகொள்ளும் சரியான இடங்களை கவிஞரும் தெரிந்துவைத்திருப்பார். அதைச் சரியாகச் சுட்டிக் காட்டவும் செய்திருப்பார். அப்படிப் பார்க்கையில், இத் தொகுப்பில் இருக்கும் கவிதைகளில் பெரும்பாலானவை நம்மை நமக்கே அடையாளம் காட்டுபவை. அந்த வகையில் சிறப்புப் பெறுபவை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எனக்கு முன்பு எழுந்துவிடுகிறது என் கடிகாரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் உண்மையைக்கூட கவிதையாகச் சொல்வதில் அர்த்தமிருக்கிறது என்பதை உணர்ந்திருப்பவர் ஹரன் பிரசன்னா. &lt;br /&gt;&lt;br /&gt;‘சுயசரிதை எழுதுதல்’ என்னும் கவிதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நான் நினைத்தது போல்&lt;br /&gt;எளிதாக எழுத இயலாமல் போன&lt;br /&gt;அடித்து அடித்து&lt;br /&gt;எழுதப்பட்ட&lt;br /&gt;சுயசரிதைக்குள்&lt;br /&gt;நான் அடைந்துகொண்டேன்&lt;br /&gt;கடைசியில் ஒரு குறிப்புடன்,&lt;br /&gt;இது வளைந்து நெளிந்து செல்லும்&lt;br /&gt;நேரான பாதை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கவிதையைப் படிக்கும்போது, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நான் படித்த காந்தியிலிருந்து மார்ட்டின் லூதர்கிங் வரைக்குமான மனிதர்களின் சுய சரிதை என் கண்ணுக்குள் வந்து வந்து போகிறது. சுய சரிதை குறித்தான என் பழைய மதிப்பீடுகள் முறிந்து போகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை என்பது ஏதோ ஒன்றை உணர வைத்தல். அது, நாம் ஏற்கெனவே அறிந்த ஒன்றாக இருப்பின் அந்தக் கவிதை உயிர்ப்புடன் இருப்பதற்கான அர்த்தம் புரிந்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;மேடைக் கவிதைகளுக்கும் மனத்துக்குள் வாசித்து அதனோடு பயணம் செய்கிற கவிதைகளுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்திருப்போம். மேடையில் வாசிக்கப்படும் கவிதைகள் கவிதைகளே அல்ல, அவை அந்தக் கணத்துக்கான எக்ஸ்டஸியை கேட்கிறவர்களுக்கு உண்டாக்குபவை; ஒரு பட்டி மன்ற பேச்சாளனுக்கும் மேடையில் கவிதை முழங்குகிறவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிரசன்னாவின் கவிதைகள் மனத்தில் அசைபோட்டுப் போட்டு, நமக்குள் ஆழ்ந்து போகச் செய்பவை. உரத்த குரலில் வாசிக்கும்போது அவருடைய கவிதைகள் அவற்றுக்கான அர்த்தத்தை இழந்துபோகக்கூடிய அபாயமும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, “உயிர்த்தெழும் மரம்” என்கிற கவிதை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;காலையில் கண்விழிக்கிறது மரம்&lt;br /&gt;இரவின் மௌனத்திற்குப் பின்&lt;br /&gt;பறவைகளின் கனவுக்குப் பின்&lt;br /&gt;பூமியிறங்கும் பனியுடன்&lt;br /&gt;அன்றைய நாளின் பலனறியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;மரம் இசைக்கும் மௌனமான சங்கீதம்&lt;br /&gt;பறவைகளின் சத்தத்தில் அமிழ்ந்துவிடுகிறது&lt;br /&gt;பெருங்காற்றில் அசையும்போது&lt;br /&gt;விலகும் தாளம், சுருதி பேதத்தை&lt;br /&gt;அதிகாலையில் மீட்டெடுக்கும் மரம்&lt;br /&gt;வாகனங்களின் சத்தத்தில் மீண்டும் தவறவிடுகிறது&lt;br /&gt;முன்பனியில்&lt;br /&gt;அல்லது பின்னோர் மழைநாளில்&lt;br /&gt;உயிர்த்தெழுகிறது&lt;br /&gt;குழந்தைக்கான உத்வேகத்துடன்&lt;br /&gt;இத்தனையின் போதும்&lt;br /&gt;எப்போதும் ஓய்வதில்லை&lt;br /&gt;மரத்தினூடாக நிகழ்ந்துகொண்டேயிருக்கும்&lt;br /&gt;அதன் பேரமைதிக் கச்சேரி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கவிதையை மேடையில் வாசித்தால், பார்வையாளனுக்கு என்ன உணர்வு ஏற்படும்? ஒருவேளை, அதீத கவன் ஈர்ப்புடன் கேட்டால்கூட, மௌனமாக வாசிக்கும்போது கிடைக்கிற பரவசத்தில் மிகக் குறைந்த சதவிகிதத்தைக்கூட இக்கவிதை ஒரு வாசகனுக்கு ஏற்படுத்தாது என்பது என் யூகம். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பில், பிரசன்னா எழுதிய கவிதைகள், மெல்ல மெல்ல ஒரு முழுமையையும் முதிர்ச்சியையும் அடைவதையும் காண முடிகிறது. ஆரம்ப எழுத்தில் இருந்து அவர் எந்த அளவுக்கு வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்பது புரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நிலையம் சேர்ந்தபின்&lt;br /&gt;தேர்வந்த பாதையில்&lt;br /&gt;சிதறிக் கிடக்கின்றன&lt;br /&gt;தொலைந்த செருப்புகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்கிற பிரசன்னாவின் கவிதை வரிகளைத் தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இது, நூலுக்கான விமர்சனம் இல்லை. நான் ரசித்த, மிகவும் ரசித்த, மனத்தில் பதிந்து போன பிரசன்னாவின் அத்தனை கவிதைகளையும் இங்கே கொட்டி விடுவது அத்தொகுப்புக்கு நான் செய்யும் நேர்மை அல்ல. எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு கவிதைத் தொகுப்பு “நிழல்கள்.” அதுவும் ஹரன் பிரசன்னாவின் நிழலைப் போலவே அவரைத் தொடர்ந்து வருகின்றன அவருடைய கவிதைகள். “நிழல்களை” வாசிப்பது பிரன்னாவை வாசிப்பது போல என்று உறுதியாகச் சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நூல்: நிழல்கள்&lt;br /&gt;ஆசிரியர்: ஹரன் பிரசன்னா&lt;br /&gt;வெளியீடு: தடம் வெளியீடு,&lt;br /&gt;4/31 D, மூன்றாவது மெயின் ரோடு, &lt;br /&gt;ராயலா நகர்,&lt;br /&gt;ராமாபுரம்,&lt;br /&gt;சென்னை - 89.&lt;br /&gt;தொலைபேசி: 98842 79211.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-1117520976244760282?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/1117520976244760282/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=1117520976244760282' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/1117520976244760282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/1117520976244760282'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2011/06/blog-post.html' title='நிழல்கள் கவிதைத் தொகுப்பு : ஒரு பார்வை'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-TZ9XLalEiiM/TgiMyGxoVXI/AAAAAAAAAE4/xppLM-T7fZk/s72-c/Nizhalgal.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-1310217126648414144</id><published>2011-03-11T22:25:00.000-08:00</published><updated>2011-03-11T22:28:12.403-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கண்ணாடி இலை</title><content type='html'>மூன்று மணிக்கு எழுந்து&lt;br /&gt;மடி ஆசாரத்துக்கு மாசில்லாமல்&lt;br /&gt;மாமனார் திவசத்துக்காக&lt;br /&gt;உயிர் கரைய வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கோபமோ&lt;br /&gt;மாமனார் காகமாக&lt;br /&gt;வந்து பிண்டத்தைக் &lt;br /&gt;கொத்தித் தின்ன&lt;br /&gt;அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சமையல் பிரமாதம்!’&lt;br /&gt;சம்பாவணை வாங்கிய பிராமணர் &lt;br /&gt;வெற்றிலைச் சிவப்புத் தெறிக்க&lt;br /&gt;வாய்நிறையச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணாளுக்குப் பிறகு&lt;br /&gt;ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் போஜனம்.&lt;br /&gt;பரிமாறும்போது இடுப்பில் பிடித்துக்கொள்ள&lt;br /&gt;பல்லைக் கடித்து சமாளிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்ட இடத்தை &lt;br /&gt;நீர் தெளித்து மெழுகி &lt;br /&gt;மதியம் மூன்றரை மணிக்கு&lt;br /&gt;கடைசியாகச்  சாப்பிட அமர்ந்தால் &lt;br /&gt;உணவைப் பார்த்தாலே உமட்டல்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையிலிருந்து காபிகூட&lt;br /&gt;பல்லில் படாதது நினைவுக்கு வர&lt;br /&gt;கொஞ்சமாக உணவு கொறிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்ட இலைகளை &lt;br /&gt;கூடையில் போட்டு&lt;br /&gt;அடுத்த தெரு&lt;br /&gt;பசுமாட்டுக்குக் கொடுக்கும்போது&lt;br /&gt;மாமி கேட்டாள்: &lt;br /&gt;‘கோமதி! யாருக்கு திவசம்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘எனக்குத்தான்.’&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த வார கல்கியில் வெளியான என் கவிதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-1310217126648414144?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/1310217126648414144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=1310217126648414144' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/1310217126648414144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/1310217126648414144'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2011/03/blog-post.html' title='கண்ணாடி இலை'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-6594724578670903066</id><published>2010-12-27T01:52:00.000-08:00</published><updated>2010-12-27T01:59:33.726-08:00</updated><title type='text'>பசும்பொன் நினைவுகள் - 3</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRhiqnC2HiI/AAAAAAAAAEU/DS3r7SykzJw/s1600/P1140533.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRhiqnC2HiI/AAAAAAAAAEU/DS3r7SykzJw/s320/P1140533.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555298624536452642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி மீனா அம்மையார், தேவரைப் பற்றி நிறையச் சொன்னார். பசும்பொன்னில் இருந்து கிளம்பியபோது, மனமெங்கும் முத்துராமலிங்க தேவர் நிறைந்திருந்தார். எவ்வளவோ படித்திருந்தாலும், நிறையபேர் சொன்னதைக் கேட்கக் கேட்க அவரைப் பற்றிய அற்புதமான ஒரு பிம்பம் உள்ளே பதிந்து போயிருந்தது.    &lt;br /&gt;&lt;br /&gt;மெயின் ரோடு வரைக்கும் நடந்து போகத்தான் நான் நினைத்தேன். வழியில் வயதானவர்கள் யாராவது இருந்தால், அவர்களோடு தேவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் கேட்கலாமே என்று ஆசை. சரியாக ஒரு ஷேர் ஆட்டோ வந்து நின்றது. வெங்கிடு, ‘அண்ணே! ரொம்பப் பசிக்குது. இதுல போயிடலாம்’ என்று சொன்னான். என்னால் மறுக்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கமுதி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தோம். ‘ஏதாவது நல்ல ஓட்டலா சொல்லுங்க!’ என்று மாரியிடம் சொன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;‘புரோட்டா சாப்பிடலாமா சார்?’ என்று மாரி கேட்டார். நான் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அந்த ஊரில் அதுதான் நன்றாக இருக்கும் போல. &lt;br /&gt;&lt;br /&gt;‘இல்ல, இல்ல. நீங்க வேணும்னா சாப்பிடுங்க. நான் சைவம். சாப்பாடுதான் வேணும்’ என்று சொல்லிவிட்டு, வெங்கிடைப் பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;‘அண்ணே! நானும் நான்வெஜ் சாப்பிடமாட்டேன். புரட்டாசி மாசம்ல?’ என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருந்த சைவ ஓட்டலுக்கு அழைத்துப் போனார் மாரி. அதை ஓட்டல் என்று சொல்லக்கூடாது. கேண்டீன் என்றுகூடச் சொல்ல முடியுமா தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வெளியே போர்டு மாட்டியிருந்தாலும், கூரை போட்ட சிறிய ஓட்டல். ஸ்கூல் டெஸ்க் போல நீளமாக ஒன்றை நடுவில் போட்டிருந்தார்கள். இருபுறமும் மர பெஞ்சுகள். சுவரோரத்தில் அதே போல இன்னொரு டெஸ்க், பெஞ்ச். மொத்தம் பதினைந்து பேர் ஒரே நேரத்தில் சாப்பிடலாம். நாங்கள் போனபோது ஆறு, பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மதியம் அங்கே சாப்பாடு மட்டும்தானாம். டிபன் இல்லை என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;கல்லாவில் இருந்தவர், ‘அவங்களுக்கு இலை போடுங்க!’ என்று கை காட்டினார். நகர ஓட்டல்களைப் போல அளவுச் சாப்பாடெல்லாம் கிடையாது. அன்லிமிடெட். ஆனால், என்னாலும் வெங்கிடாலும் சரியாகச் சாப்பிட முடியவில்லை. கிராமத்துக்கே உரித்தான இயல்பான சமையல். வாசனாதி வகையறா கொஞ்சமும் சேர்க்காத பதார்த்தங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;புளி, உப்பு, மிளகாய்த்தூள், போன்ற அடிப்படைப் பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு. சம்பந்தமில்லாமல்,  ‘இயற்கை உணவு’ என்கிற பெயரில், காசு பிடுங்கும் சென்னை உணவகம் ஒன்று என் நினைவுக்கு வந்தது. ஆயுர்வேத சிகிச்சைக்குப் போனவர்களுக்குத் தெரியும். அவர்கள் கொடுக்கும் உணவைத்தான் நாம் சாப்பிட முடியும். உப்போ, புளிப்போ அளவோடு சேர்த்திருப்பார்கள். அது போல இருந்தது சாப்பாடு. &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRhirLavNuI/AAAAAAAAAEk/i3CkD4BsPF8/s1600/P1140550.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRhirLavNuI/AAAAAAAAAEk/i3CkD4BsPF8/s320/P1140550.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555298634300339938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானும் வெங்கிடும் எழுந்தோம். மாரி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நான் கை கழுவும்போது கேட்டேன்: ‘என்னா தம்பி! புரோட்டாவே சாப்பிட்டிருக்கலாம் இல்ல?’&lt;br /&gt;&lt;br /&gt;‘இல்லண்ணே. சாப்பாடு நல்லாத்தான் இருந்துச்சு. என்னாலதான் சாப்பிட முடியல’ என்றான். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். இதற்கு மேலும் மாரி சாரை காத்திருக்கச் சொல்வது சரியாகப்படவில்லை. அவர் நேர் எதிர்த் திசையில் இருக்கும் வேறு ஒரு கிராமத்துக்குச் செல்லவேண்டியவர். நன்றி சொல்லி அனுப்பி வைத்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;‘மதுரைக்கே போயிடலாமா தம்பி?’&lt;br /&gt;&lt;br /&gt;‘எதுக்குண்ணே? வந்த வழியிலேயே போயிடலாம்’ எங்கேயோ பார்த்தபடி சொன்னான் வெங்கிடு. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனியார் பஸ் வந்து நின்றது. காத்திருந்தது போல அடித்துப் பிடித்து ஏறியது கூட்டம். இரண்டு மணி வெயில் சுட்டெரித்தது. நாங்கள் கடைசியாக ஏறினோம். பின் சீட் காலியாக இருந்தது. உட்காரப் போனபோது கண்டக்டர் தம்பி திரும்பிப் பார்த்தார். நிச்சயம் அவருக்கு வெங்கிடைவிட இரண்டு வயது குறைவாகத்தான் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;‘எங்க சார் போகணும்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘மானாமதுரை.’&lt;br /&gt;&lt;br /&gt;‘பஸ் கெளம்புறப்போ ஏறுங்க.’&lt;br /&gt;&lt;br /&gt;‘சீட்டு காலியாத்தானே இருக்கு?’ என்று கேட்டான் வெங்கிடு.&lt;br /&gt;&lt;br /&gt;‘அங்... மதுரை வரைக்கும் லாங்கா... போறவுகளுக்கு சீட் வேணாமா. எறங்குங்க சார்.’&lt;br /&gt;&lt;br /&gt;வெறுப்போடு இறங்கினோம். அந்த கண்டக்டர் டிக்கெட் போட்டுக்கொண்டிருந்தார். கீழே இறங்கி பஸ் ஸ்டாண்டில் இருந்த சிறிய ஓட்டல் வாசலில், புரோட்டா போடுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு வேறு பஸ் இல்லை என்பது விசாரித்ததில் தெரிந்தது. ஓரமாக நின்றிருந்த டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;‘ஏன் சார்? சீட்டு காலியாத்தானே இருக்கு. அந்த கண்டக்டர் அப்பிடி வெரட்டுறாரே?’&lt;br /&gt;&lt;br /&gt;‘அவன் லூஸு சார். அப்பிடித்தான் பேசுவான். கெளம்பறப்போ ஏறுங்க.’ இப்படிச் சொல்லிவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார் டிரைவர். &lt;br /&gt;&lt;br /&gt;வெயில். வியர்வை. கசகசப்பு. நிழலுக்கும் பஸ் கூடாரத்துக்குள்  ஒதுங்க முடியவில்லை. பெண்கள், குழந்தைகள், என்று குடும்பம் குடும்பமாக கிராமத்து மனிதர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து ஊர்களுக்குச் செல்லும் டவுன்பஸ் உள்ளே நுழைந்தால், அதைப் பிடிக்க ஓடினார்கள். கொஞ்சம் இடம் காலியாவது போல இருந்தாலும் இன்னொரு கும்பல் அதைப் பிடித்துக்கொண்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;வரிசையாக பலகாரக் கடைகள் இருந்தன. ஜிலேபியை சின்னதாகச் சுடுகிற வழக்கம் அந்தப் பக்கத்தில் இல்லை போல. நல்ல அகலமான தட்டில் பெரியதாகச் சுற்றி, இரண்டடி உயரத்துக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். எல்லா கடைகளிலும் அப்படித்தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தேன். ‘அதுவா? இனிப்பு சேவு!’ என்று சொன்னார். பிறகு, என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு நகர்ந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிராமத்து மனிதர் ஐந்துகிலோ காராசேவு வாங்குவதைப் பார்த்தேன். என் பார்வையைப் புரிந்துகொண்டவனாக வெங்கிடு சொன்னான். ‘அண்ணே! வியாபாரம் செய்யறதுக்கா இருக்கும்ணே. கிராமத்துல கடை வச்சிருப்பாரு.’&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அடுத்த கடையில் ஒருவர் ‘நாலு கிலோ இனிப்பு சேவு!’ என்று சொன்னது எங்கள் காதிலும் விழுந்தது. வெங்கிடு பதில் சொல்லவில்லை. அவன் கவலையோடு மதுரை பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். சீட்டுகள் நிரம்பியிருந்தன. மனிதர்கள் உள்ளே நடைபாதையில் நிற்க ஆரம்பித்திருந்தார்கள். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRhiq7BnGwI/AAAAAAAAAEc/hWq27e8dW14/s1600/P1140554.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRhiq7BnGwI/AAAAAAAAAEc/hWq27e8dW14/s320/P1140554.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555298629899983618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் எதிர்பார்த்ததுதான் நடந்தது. பிதுங்கப் பிதுங்கக் கூட்டம். படிக்கட்டில் தொங்கிக்கொண்டுதான் போயாகவேண்டும். அடுத்த பஸ்சில் போகலாம் என்றால், அது எப்போது வரும் என்றும் தெரியாது. பஸ் கிளம்பியபோது தாவி ஏறினோம். &lt;br /&gt;&lt;br /&gt;மூச்சு விட முடியவில்லை. ‘ரூட் பஸ்’ என்று பெயர்தானே தவிர, ஒவ்வொரு ஊரிலும், ஊர் விலக்கிலும் நின்று நின்று சென்றது. நிறுத்தம் தோறும் கண்டக்டர் பின் வாசலில் இறங்கி, முன் வாசலுக்குப் போய் டிக்கெட் போடுவார். அல்லது, அங்கிருந்து இங்கு வருவார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாதவனாக கண்டக்டரிடம் கேட்டேன். ‘என்னாங்க! நிக்கிறதுக்கே இடத்தைக் காணோம். ஒவ்வொரு ஸ்டாப்லயும் ஆளுங்களை ஏத்திக்கிட்டே இருக்கீங்களே?’&lt;br /&gt;&lt;br /&gt;அவர் முறைத்துப் பார்த்தார். ‘நீங்க என்னிக்கோ ஒரு நாளு வாறதுக்கே இப்பிடி அலுத்துக்குறீங்களே! நாங்க தெனோம் இப்பிடித்தான் போயாவணும். போலாம்... ரை!’&lt;br /&gt;&lt;br /&gt;கமுதியில் இருந்து மானாமதுரைக்கு பயணம் நேரம், அதிகபட்சம் ஒரு மணி நேரம். நாங்கள் வந்து சேர இரண்டு மணி நேரம் ஆனது. நல்ல வேளையாக சிவகங்கைக்குப் போகிற பஸ் உடனே கிடைத்தது. சீட்டில் உட்கார்ந்ததும் வெங்கிடு எதுவும் பேசவில்லை. பேயறைந்தவன் போல இருந்தான். சார்ஜ் இல்லாத செல்போனை கையில் உருட்டிக்கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;சிவகங்கையில் அரைமணி நேரம் காத்திருந்ததில், தஞ்சைக்குச் செல்வதற்கு நேரடி பஸ் கிடைத்தது. மின்னல் வீரனைப் போல் தாவி ஏறி, சீட்டைப் பிடித்தான் வெங்கிடு. மாலை ஐந்து மணிக்கு அப்படி ஒரு புழுக்கம். சட்டையைக் கழற்றி எறிந்துவிடலாமா என்று இருந்தது.   &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பசும்பொன் பயணத்தில் விதம்விதமான மனிதர்களைப் பார்த்த அனுபவம் கிடைத்தது. முன்னே பின்னே யார் என்று அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணிடம், மூச்சுவிடாமல் ‘சளசள’வென்று பேசியபடி வந்த ஒல்லி மனிதர். ஜுரம் தகிக்க, பேரக் குழந்தையை தூக்கி வந்த பாட்டி. யார் இடம் கொடுத்தாலும் பாட்டியின் தோளைவிட்டு இறங்காமல் அடம் பிடித்தது அந்தக் குழந்தை. சூழலுக்குக் கொஞ்சமும் பொருந்தாத குல்லாவும் முழங்காலைத் தாண்டும் ஜிப்பாவும் அணிந்து வந்த இஸ்லாமிய இளைஞர்கள் நான்குபேர். குசுகுசு பேச்சும், நமட்டுச் சிரிப்புமாக வந்த புதிதாகத் திருமணமான தம்பதி. ஏறி உட்கார்ந்ததில் இருந்து, இறங்குவரை பார்வையை அப்படி இப்படித் திருப்பாமல், பேப்பர் வரி விளம்பரத்தைக்கூட விடாமல் படித்த கண்ணாடிக்காரர். கண்டக்டருடன் சண்டைபோட்ட திருநங்கை... இப்படி நிறைய. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மனிதர்களை நிச்சயம் வெங்கிடுவும் மறந்திருக்கமாட்டான் என்றே தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;திருப்பத்தூருக்கு அருகே வரும்போதே மழை பிடித்துக்கொண்டது. நாங்கள் தஞ்சாவூர் பெரிய பஸ் ஸ்டாண்டில் இறங்கி, கீழ வாசலுக்கு பஸ் பிடித்து வந்து சேர்ந்தபோது மணி பத்துக்கு மேல் இருக்கும். கடுமையான வேலை பார்த்து வந்ததுபோல அப்படி ஒரு சோர்வு. வெங்கிடுவுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;‘என்னா தம்பி! டிரிப் எப்பிடி இருந்துச்சு?’&lt;br /&gt;&lt;br /&gt;‘நல்லா இருந்துச்சுண்ணே!’&lt;br /&gt;&lt;br /&gt;‘லட்ச ரூவா குடுத்தாகூட இப்பிடி ஒரு அனுபவம் கிடைக்காதுல்ல?’&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கிடு என்னைப் பார்த்தான். முறைக்கிறானா, சிரிக்கிறானா என்று தெரியவில்லை. இந்தக் காலத்து இளவட்டங்கள் அப்படித்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-6594724578670903066?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/6594724578670903066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=6594724578670903066' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/6594724578670903066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/6594724578670903066'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2010/12/3.html' title='பசும்பொன் நினைவுகள் - 3'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRhiqnC2HiI/AAAAAAAAAEU/DS3r7SykzJw/s72-c/P1140533.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-1388330133344225140</id><published>2010-12-22T23:15:00.000-08:00</published><updated>2010-12-23T00:32:10.097-08:00</updated><title type='text'>பசும்பொன் நினைவுகள் - 2</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRL3yp_WdvI/AAAAAAAAADw/fkv7Hl5CQBQ/s1600/P1140552.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRL3yp_WdvI/AAAAAAAAADw/fkv7Hl5CQBQ/s320/P1140552.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553773740138329842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தஞ்சாவூரில் இருந்து கமுதிக்கு நாங்கள் போன வழிதான் சிறந்தது என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பது திரும்பி ஊருக்கு வந்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. நேராக மதுரைக்குப் போய், அங்கிருந்து கமுதிக்குப் போயிருக்கவேண்டும். பயணம் செய்யும் நேரம், டிக்கெட் கட்டணம் என்று எதை எதையோ யோசித்துத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் ஏதோ வேலை நடந்துகொண்டிருந்தது. புதிதாக சிமெண்ட் போடப்பட்ட தரை. உள்ளே மனிதர்களும் பிராணிகளும் நுழைந்துவிடாதபடிக்கு வாசலில் கற்களையும், செடிகளையும் மறித்துப் போட்டு வழியை அடைத்திருந்தார்கள். அங்கிருந்து மதுரைக்குப் போகிறவர்களும், கமுதி, ராமநாதபுரம் போகிறவர்களும் சாலையின் இருபுறமும் எதிரெதிரே கும்பலாக நின்றுகொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மாரி போன் செய்தார். கமுதி பஸ் ஸ்டாண்டில் இருப்பதாகச் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;‘வர்ற வழியிலதான் பசும்பொன் இருக்கு. அங்கேயே இறங்கிடுறீங்களா? நான் வந்துர்றேன்’ என்றவர், என்ன நினைத்தாரோ, ‘வேணாம். கமுதிக்கே வந்துடுங்க!’ என்று சொல்லிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;‘அடுத்த பஸ்ஸுல வந்துர்றோம்.’ &lt;br /&gt;&lt;br /&gt;மதுரையிலிருந்து கமுதிக்குப் போகிற பஸ் ஒன்று வந்து நின்றது. வைக்கோலைப் போட்டு அமுக்குவது போல மக்கள் தங்களை அதில் திணித்துக்கொண்டிருந்தார்கள். ஓர் ஆள்கூட இறங்குவதாகத் தெரியவில்லை. ஏறுவதற்குக் கிட்டத்தட்ட ஏழெட்டு பேர் காத்திருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் வெங்கிடைப் பார்த்தேன். ‘ஏறிடலாம்ணே! அடுத்த பஸ் வர்றதுக்கு அரைமணி நேரம் ஆகுமாம்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘நிறையா எடம் இருக்கு. உள்ள வாங்கப்பு!’ என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் கண்டக்டர். இருவரும் ஏறினோம். கொஞ்சம் கொஞ்சமாக வழி ஏற்படுத்திக்கொண்டு, பஸ்ஸின் மத்திய பகுதிக்கு வந்து சேர்ந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒரு பெண்மணி நின்றுகொண்டிருந்தார். கறுப்பாக இருந்தாலும் களையாக இருந்த அந்தக் குழந்தை கண்ணை உருட்டி, உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. வெங்கிடு அதைப் பார்த்து சினேகமாக சிரிக்க, அது முகத்தைத் திருப்பிக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRL3yEVT4xI/AAAAAAAAADg/tA9lHdpfRXw/s1600/P1140531.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRL3yEVT4xI/AAAAAAAAADg/tA9lHdpfRXw/s320/P1140531.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553773730029888274" /&gt;&lt;/a&gt;அது ஒரு தனியார் பஸ். அகலம் அதிகமில்லாதது. நடுவில் ஓர் ஆள் மட்டுமே நடந்து போக இருக்கிற நடைபாதையில் இரண்டு இரண்டு பேராக நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தோம். நின்று பயணம் செய்வது பரவாயில்லை. முழுப் பாதத்தையும் ஊன்றக்கூட வழியில்லை. ஒரு கால், அல்லது இன்னொரு கால். அல்லது இரண்டு நுனிக் கால்கள். அதுதான் பிரச்னையாக இருந்தது. இரண்டு கையையும் மேலே தூக்கிக் கம்பியை இறுகப் பிடிக்கவேண்டியிருந்தது. பஸ், மேடும் பள்ளமுமான சாலையில் குலுங்கிக் குலுங்கி விரைந்துகொண்டிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;பஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில், நெரிசலையும் பெரிய மனிதர்கள் விடும் மூச்சுக் காற்றையும் தாங்க மாட்டாமல் குழந்தை கதற ஆரம்பித்தது. கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;‘எங்கம்மா போகணும்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘கமுதி.’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRL3yS7fw4I/AAAAAAAAADo/qsPZLMWu9DE/s1600/P1140547.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRL3yS7fw4I/AAAAAAAAADo/qsPZLMWu9DE/s320/P1140547.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553773733948146562" /&gt;&lt;/a&gt;உட்கார்ந்திருப்பவர்களில் யாராவது அந்தக் குழந்தையை வாங்கி வைத்துக்கொள்ள மாட்டார்களா என்று எனக்கு இருந்தது. அவரவருக்கு அவரவர் கவலை. ஜெயம்ரவி நடித்த ஏதோ ஒரு படம் டி.வி.டி. திரையில் ஓடிக்கொண்டிருக்க, தலையை எக்கிப் பார்த்து மெய்மறந்து போயிருந்தார்கள். சிலருக்கு படம் பார்க்க முடியாமல், நின்று கொண்டிருப்பவர்களின் தலை மறைக்கிற சங்கடம். &lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திபனூர், அபிராமம் என வழியில் இருக்கும் எந்த ஊரிலும் ஜனம் இறங்கவில்லை. ஏறிக்கொண்டே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் கமுதி வந்து சேர்ந்தபோது மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. செல்போனில் தொடர்புகொண்டதும் அடையாளம் கண்டுகொண்டு கிட்டே வந்தார் மாரி. கொஞ்ச நேரம் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து பசும்பொன் கிளம்பினோம். வழியெல்லாம் மாரி தேவரைப் பற்றிப் பேசியபடி வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;‘தேவரய்யா ஆரம்ப காலத்துல குதிரைலதான் இந்த வழியாப் போவாங்க. அதுக்கப்புறம் வில்வண்டி ஒண்ணு வச்சிருந்தாங்க. அதுல போவாங்க. இந்தா இருக்குல்ல இந்த மரம். இது மேல நின்னுக்கிட்டுத்தான் ரெண்டு மூணு பேரு தேவர் அய்யா தலை மேல கல்லைத் தூக்கிப் போடப் பாத்தாங்க. அய்யா நிமுந்து பாத்தாரு. ‘முருகா’ன்னு சொன்னாரு. அவ்வளவுதான். கல்லு அப்பிடியே அந்தரத்துல நின்னுடுச்சு...’ இப்படி நிறைய சொல்லிக்கொண்டே வந்தார் மாரி.&lt;br /&gt;&lt;br /&gt;மெயின் ரோட்டில் இருந்து பசும்பொன்னுக்குத் திரும்புகிற இடத்தில் பிரம்மாண்டமான நுழைவு வாயில், அமர்க்களமாக வரவேற்றுக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வாகனச் சந்தடி இல்லாமல் அமைதியாக இருந்தது கிராமம். இரண்டு ஆடுகளும், ஒரு மாடும் கடந்து போயின. ஊர்க் குளத்தில் நான்குபேர் குளித்துக்கொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கினோம். தேவர் உறைவிடம் பூட்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘பக்கவாட்ல ஒரு வழி இருக்கு’ என்று சொல்லி அழைத்துப் போனார் மாரி. வருடா வருடம் தேவர் குருபூஜைக்கு வருகிறவர் என்று மாரியைப் பற்றி பாண்டியன் சொன்னது நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தேவர் உறங்கும் இடத்துக்குப் பின்னால் அவர் வாழ்ந்த வீடு. அதற்கு வலது பக்கம், அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த முக்கிய சம்பவங்களின் படத்தொகுப்பைக் கண்காட்சியாக வைத்திருந்தார்கள். அரங்கம் பூட்டியிருந்தது. முக்கியமான தினங்களில் மட்டும்தான் அது திறக்கப்படும் என்று சொன்னார்கள். பக்கவாட்டு வழிக்கு வெளியே ஒரு நூலகம். நூலக நேரம் முடிவடைந்திருந்ததால் அதுவும் பூட்டியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நினைவுச் சின்னம் அப்படியே இருக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் வீட்டைச் சிதைத்துவிடாமல், கொஞ்சம் மெருகேற்றி அப்படியே வைத்திருக்கிறார்கள். வாசல் கதவும் பல நூற்றாண்டுகளாக அப்படியே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வீட்டைக் கட்டியவர் பசும்பொன் தேவரின் தாத்தா ஆதி முத்துராமலிங்க தேவர். வாசலில் ஒரு கயிற்றுக் கட்டில். அதில் ஒரு பெரியவரும் ஒரு வயதான அம்மாளும் உட்கார்ந்திருந்தார்கள். அந்த அம்மாள் பெயர் காந்தி மீனா. தேவரின் மிக நெருங்கிய உறவினர். பல பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும் நடுவே இந்த இடத்தைப் பராமரித்து வருபவர் என்பது பேசிப் பார்த்ததில் தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மெதுவாக ஒவ்வொன்றாகச் சுற்றிப் பார்த்தோம். ஒரு தேசியத் தலைவர், எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வீடு ஒன்றும் மிக பிரம்மாண்டமானது அல்ல. காரைக்குடி பக்கத்து பழங்கால வீடுகளோடு ஒப்பிட்டால், அதில் பாதிகூட இருக்காது. நடுவே முற்றம். பக்கவாட்டில் பூஜை அறை. இன்னொரு அறை. பின்புறம் ஒரு அறை. பின்னால் போக முடியாமல் தடுப்புப் போட்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வீடு முழுக்க புகைப்படங்கள், பல்வேறு அமைப்பினர் தேவரைப் பாராட்டி எழுதிய பாராட்டுப் பத்திரங்கள்.. பிரேம் செய்து மாட்டப்பட்டிருந்தன.   &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் எதிர்ப்பட்டவர்களிடம் எல்லாம் பேசினோம். அவர்களுக்கெல்லாம் தேவர் என்பவர் தேசியத் தலைவர், மாமனிதர் என்பதையெல்லாம் தாண்டி தெய்வமாகவே இன்றைக்கும் தெரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏதோ ஒரு தேர்தலு. பிரசாரத்துக்குப் போயிட்டு இங்ஙனதான் தேவர் அய்யா குதிரை மேல வந்து இறங்கினாரு. சும்மா  ‘தகதக’ன்னு என்னா ஆகிருதி தெரியுமா? என் கண்ணுக்குள்ளேயே நிக்குது’ என்கிறார் ஒரு எண்பது வயதுப் பெரியவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRMEk5BU44I/AAAAAAAAAEA/xNa6IgWxZYU/s1600/P1140559.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRMEk5BU44I/AAAAAAAAAEA/xNa6IgWxZYU/s320/P1140559.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553787797306139522" /&gt;&lt;/a&gt;ஓர் இளைஞர் சொன்னார்: ‘தேவர் அய்யாவைப் புடிக்கிறதுக்கு போலீஸு வந்துது. வாசல்ல அய்யா நின்னுக்கிட்டிருக்காக. கிட்டப் போனா காணல. அந்தா அந்த மரத்தாண்ட சிரிச்சிக்கிட்டே நிக்காக. திடீர்னு எதுத்தாப்ல. கொஞ்ச நேரத்துல தேவர் அய்யா மாதிரியே ஏழெட்டு உருவங்க. துப்பாக்கிய தூக்கின போலீஸ்காரவுக மெரண்டு போயி ஓடிப் போயிட்டாக. இதை எங்கப்பா சொல்லிக்கிட்டே இருப்பாரு.’  &lt;br /&gt;&lt;br /&gt;பூஜை அறை பூட்டியிருந்தது. இரும்புக் கம்பிக்குப் பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, மாரி சொன்னார். ‘தேவர் அய்யா எப்பவும் புலித் தோல் மேல உக்காந்துக்கிட்டுதான் பூஜை செய்வாங்க. இங்க இருக்குமே!’&lt;br /&gt;&lt;br /&gt;புலித்தோல் இல்லை. ஒருவரிடம் கேட்டபோது சாவதானமாகச் சொன்னார். ‘யாராவது எடுத்துட்டுப் போயிருப்பாங்க. இல்ல, வேற எங்கயாவது இருக்கும்.’&lt;br /&gt;&lt;br /&gt;- தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-1388330133344225140?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/1388330133344225140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=1388330133344225140' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/1388330133344225140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/1388330133344225140'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2010/12/2.html' title='பசும்பொன் நினைவுகள் - 2'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRL3yp_WdvI/AAAAAAAAADw/fkv7Hl5CQBQ/s72-c/P1140552.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-1653911821059169176</id><published>2010-12-21T22:22:00.000-08:00</published><updated>2010-12-21T22:57:24.946-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பசும்பொன் முத்துராமலிங்க தேவர்'/><title type='text'>பசும்பொன் நினைவுகள் - 1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRGZsMKDkuI/AAAAAAAAADQ/jEAYA178c2M/s1600/Devar..jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 242px;" src="http://3.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRGZsMKDkuI/AAAAAAAAADQ/jEAYA178c2M/s320/Devar..jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553388799981228770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவர் வாழ்க்கை எந்த அளவுக்கு சுவாரஸ்யமோ அதில் கொஞ்சம்கூட குறையாமல் இருந்தது அவர் வாழ்ந்த பசும்பொனுக்கு நான் போய் வந்த அனுபவம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறுப் புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. அதோடு அவர் பேசிய உரைகள், எழுதிய கட்டுரைகள், அவர் குறித்த சர்ச்சைகள் எல்லாமே நூல் வடிவில் இருக்கின்றன, குறிப்பாக சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்திலும், கன்னிமாராவிலும். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் எழுதுகிற அளவுக்கு போதும், போதும் என்கிற அளவுக்குத் தகவல்கள் கிடைத்துவிட்டாலும், ஒரு முறை பசும்பொன்னுக்குப் போய்வரவேண்டும் என்கிற ஆசை உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது. உறவினர் ஒருவர் வீட்டுத் திருமணத்தை முன்னிட்டு தஞ்சாவூர் போகவேண்டியிருந்தது. அப்படியே பசும்பொன்னுக்கும் ஒரு டிரிப் அடித்துவிடலாம் என்று முடிவு செய்து கிளம்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சாவூரில் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு நான் மட்டும் கமுதிக்கும் பசும்பொன்னுக்கும் போய்வருவது என்று திட்டம். ஆனால், தனியாகப் போகக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பேச்சுத் துணைக்காவது ஒருவர் இருந்தால்தானே நன்றாக இருக்கும்? &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கிடு என்கிற வெங்கடேஷ், மனைவி வழியில் சொந்தம். தஞ்சாவூரில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். வகையாக மாட்டினான். ‘தம்பி! காலைல கெளம்பிப் போய் சாயந்தரம் வந்துடலாம். கூட வாயேன்!’  &lt;br /&gt;&lt;br /&gt;‘கண்டிப்பா வர்றேண்ணே!’ என்று நம்பிக்கை தந்தான். தஞ்சையில் இருந்து கமுதிக்கு நேரடி பஸ் ஒன்றுதான் இருந்தது. அதுவும் ஒன்பது மணிக்கு மேல்தான் கிளம்பும் என்பதால், அது வசதிப் படாது என்று முடிவெடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;மைத்துனர் நடராஜன், ‘சிவகங்கைக்கு நிறையா பஸ் இருக்கு. அங்கருந்து கமுதிக்குப் போய்விடலாம்’ என்று நம்பிக்கையாகச் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்து, ஐந்து மணிக்கு கீழ வாசல் பேருந்து நிறுத்தத்தில் நானும் வெங்கிடுவும் முதல் பஸ்ஸைப் பிடித்தோம், தஞ்சாவூர் பெரிய பஸ் ஸ்டாண்டுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் ஸ்டாண்டில் சூடாக ஒரு டீயை அடித்துவிட்டு, உள்ளே போனோம். சிவகங்கைக்கு நேரடி பஸ் ஒன்பது மணிக்கு மேல்தான் என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;‘திருப்பத்தூருக்குப் போயிடுங்க. அங்கருந்து சிவகங்கைக்கு நெறையா பஸ் இருக்கு’ என்றார் ஒரு கண்டக்டர். நான் வெங்கிடுவுடன் பேச்சுக் கொடுத்தேன். கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் என்று ரொம்ப நேரம் தயங்கிக் கொண்டிருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வரும்போது திருப்பத்தூர் வந்துவிட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;திருப்பத்தூரிலேயே காலை டிபனை முடித்துவிட்டு, அங்கிருந்து சிவஙகங்கை. இந்த இடத்தில் தெக்கத்தி சீமைக்காரர்களின் பரந்த மனசை சொல்லியே ஆகவேண்டும். கை கழுவிட்டு சாப்பிட உட்கார்ந்ததும், பெரிய சாப்பாட்டு இலையாகக் கொண்டு வந்து போடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;‘இலைக்கும் சேத்து பில்லைப் போட்டுறப் போறாங்கண்ணே!’ என்று கிசுகிசுத்தான் வெங்கிடு. &lt;br /&gt;&lt;br /&gt;பூரி ஆர்டர் செய்தோம். ஒரு செட் பூரிக்கு துக்கிணியூண்டு கிண்ணத்தில் உருளைக் கிழங்கைக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். சப்ளை செய்பவர் இரண்டு பூரிகளை இலையில் போட்டுவிட்டு, வாளியில் கரண்டியைவிட்டு,(பெரிய சைஸ்) அள்ளி அள்ளி இலையில் பூரிக் கிழங்கைப் போட்டார். மேலும் இரண்டு பூரி சாப்பிடுகிற அளவுக்குக் கிழங்கு. காபி கேட்டால், மிகப் பெரிய டம்ளர் வட்டைக் கப் சகிதமாக வந்திறங்கியது. அபார ருசி. மிக மிகச் சாதாரணமான பில் தொகை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கேயும் ஒரு கண்டக்டர் சொன்னார். ‘கமுதிக்கெல்லாம் நேரடியா பஸ் இல்லைங்க. மானாமதுரை போயிடுங்க.’ வேறு வழி? அங்கிருந்து மானாமதுரை போனோம். &lt;br /&gt;&lt;br /&gt;மானாமதுரை பஸ் பிடித்தோம். என் அலுவலகத்தில் மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் பாண்டியன், தன் சகோதரர் மாரி என்பவரின் மொபைல் நம்பரைக் கொடுத்திருந்தார். அவர், கமுதியில் இருந்து எங்களை பசும்பொன்னுக்கு அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. &lt;br /&gt;&lt;br /&gt;அரைமணி நேரத்துக்கு ஒரு முறை செல்போனில் அழைத்தபடி இருந்தார் மாரி. &lt;br /&gt;&lt;br /&gt;‘எங்க இருக்கீங்க?’&lt;br /&gt;&lt;br /&gt;‘இப்பத்தான் சிவகங்கைக்குப் போய்க்கிட்டு இருக்கோம்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘எங்க வந்துக்கிட்டு இருக்கீங்க?’&lt;br /&gt;&lt;br /&gt;‘மானாமதுரைகிட்ட வந்துட்டோம்.’&lt;br /&gt;&lt;br /&gt;மானாமதுரை வரைக்கும்கூட அதிகம் பிரச்னை இல்லாமல் வந்து சேர்ந்துவிட்டோம். அங்கிருந்து கமுதிக்குப் போன அனுபவம் இருக்கிறதே அடடா! நான் மறந்தாலும் வெங்கிடு மறக்கமாட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கிடு பரபரப்பான இளைஞன். தஞ்சாவூரிலேயே பைக்கில் 80 கிலோ மீட்டருக்குக் குறையாத வேகத்தில் பறப்பான் என்று கேள்வி. ஓர் இடத்தில் அவனை சும்மா உட்கார வைப்பதே பெரிய காரியம். &lt;br /&gt;&lt;br /&gt;செல்போனில் யார் யாருக்கோ மெசேஜ் அனுப்பியபடியும், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடியும் வந்தான். வெளியேயும் சுவாரஸ்யமான காட்சிகள் ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிவகங்கையை நெருங்கும்போதே கள்ளிச்செடிகளும் கருவேல முள்செடிகளுமாகத்தான் கண்ணுக்குத் தெரிந்தன. ஆங்காங்கே இருந்த சின்னச் சின்னக் குட்டைகளில்கூட செம்மண் ஏறிய கலங்கலான தண்ணீர். மழை பெய்ததால்தான் அந்த அளவுக்காவது தண்ணீர் இருந்தது. இல்லையென்றால் வறண்ட பொட்டல்காடாகத்தான் அந்தக் குட்டைகள் காட்சியளித்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மானாமதுரையை நெருங்கும்போது வெங்கிடுவின் முகம் மாறியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன தம்பி! பதில் மெசேஜ் வரலியா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘இல்லண்ணே! செல்போன்ல சார்ஜ் தீர்ந்துபோயிடுச்சு!’&lt;br /&gt;&lt;br /&gt;-தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-1653911821059169176?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/1653911821059169176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=1653911821059169176' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/1653911821059169176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/1653911821059169176'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2010/12/1.html' title='பசும்பொன் நினைவுகள் - 1'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TRGZsMKDkuI/AAAAAAAAADQ/jEAYA178c2M/s72-c/Devar..jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-6838200572559432327</id><published>2010-12-18T22:05:00.000-08:00</published><updated>2010-12-18T22:06:44.467-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கேர்ள்ஸ் ஹாஸ்டல்</title><content type='html'>அன்புள்ள அத்தைக்கும்&lt;br /&gt;அருமை மாமாவுக்கும்&lt;br /&gt;அம்சவேணி எழுதுவது.&lt;br /&gt;&lt;br /&gt;நலம் நாடுவதும் அதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணக் கனவு தரும்&lt;br /&gt;வளமான வாழ்க்கை தரும்&lt;br /&gt;வருங்காலம் கருதித்தான்&lt;br /&gt;என்னை &lt;br /&gt;விடுதியில் விட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வருங்காலம் கிடக்கட்டும்&lt;br /&gt;வாழ்க்கை நசிந்து போகுமென்ற&lt;br /&gt;நடுக்கம் வந்துவிட்டதெனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அரசினர் விடுதி&lt;br /&gt;அப்படித்தான் இருக்கும் -&lt;br /&gt;என ஆயிரம் சொல்லலாம் நீங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆயிரமும் தாண்டி&lt;br /&gt;அநியாயம் நடப்பதைத்தான்&lt;br /&gt;அங்கீகரிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மூட்டைப் பூச்சியை&lt;br /&gt;நசுக்கி நசுக்கி&lt;br /&gt;விரல்முனை&lt;br /&gt;தேய்ந்துவிட்டது.&lt;br /&gt;அது பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் இரவின்&lt;br /&gt;தூக்கம் போனதில்&lt;br /&gt;முதல் பீரியடிலேயே &lt;br /&gt;உறக்கம் வந்துவிடுகிறது.&lt;br /&gt;‘மூதேவி!’ என்று&lt;br /&gt;திட்டுகிறார் ஆசிரியை.&lt;br /&gt;அதுவும் பிரச்னையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முடை நாற்றம் வீசும்&lt;br /&gt;புழுத்துப் போன&lt;br /&gt;புழுங்கரிசிச் சோற்றை&lt;br /&gt;வாயில் வைத்தாலே&lt;br /&gt;வாந்தி வருகிறது.&lt;br /&gt;அதையும் நான்&lt;br /&gt;குறையாகச் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஐநூறு மாணவிகளுக்கு&lt;br /&gt;ஐந்து கழிப்பறைகள்&lt;br /&gt;அசுத்தச் சகதி நினைத்தால்&lt;br /&gt;அசூயையாக இருக்கிறது.&lt;br /&gt;அதையும் நான் &lt;br /&gt;சகித்துக்கொள்வேன்.&lt;br /&gt;சங்கடங்கள் ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதியில் சேர்ந்த&lt;br /&gt;அடுத்த தினமே&lt;br /&gt;சோப்பு சீப்பு&lt;br /&gt;பவுடர் ஸ்டிக்கர் பொட்டு... என&lt;br /&gt;நீங்கள் வாங்கிக் கொடுத்துப் போன&lt;br /&gt;எதையும் காணவில்லை.&lt;br /&gt;இதில் ரேவதி&lt;br /&gt;எனக்குப் பிரியமாய்க் கொடுத்த&lt;br /&gt;வண்ணத்துப்பூச்சி வடிவ ஹேர் க்ளிப்பும் அடக்கம்.&lt;br /&gt;அதற்கும் நான் வருந்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரவற்ற&lt;br /&gt;முகம் தெரியாத&lt;br /&gt;அந்தச் சகோதரி&lt;br /&gt;என்னைக் கேட்டிருந்தால்&lt;br /&gt;கொடுத்திருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் திருடவேண்டிய&lt;br /&gt;நிர்ப்பந்தம் நேர்ந்திருக்காது.&lt;br /&gt;அதுகூட பிரச்னையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சிறிய அறையில்&lt;br /&gt;புழுக்களைப் போல&lt;br /&gt;எட்டுப் பெண்கள்&lt;br /&gt;சுருண்டு கிடக்கிறோம்.&lt;br /&gt;அதுவா பிரச்னை. இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்னை பெரியதாகயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஞாயிற்றுக் கிழமை&lt;br /&gt;அடுத்த அறை வளர்மதியை&lt;br /&gt;வார்டன் அழைத்துப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;மல்லிகை மலராகப் போனவள்&lt;br /&gt;மரவட்டையாக சுருங்கிப் போய்த் திரும்பி வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உதட்டில் காயம்&lt;br /&gt;உடம்பெல்லாம் கீறல்கள்&lt;br /&gt;உசுப்பிக் கேட்டாலும்&lt;br /&gt;ஊமையாக நிற்கிறாள்.&lt;br /&gt;உறுத்து விழிக்கிறாள்&lt;br /&gt;குலுங்கி அழுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;புரியாத வயதா எனக்கு?&lt;br /&gt;அவளும் ப்ளஸ் ஒன்&lt;br /&gt;நானும் ப்ளஸ் ஒன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே, யாருக்கு, எதற்கு&lt;br /&gt;எதுவும் தெரியாது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஞாயிறு தோறும்&lt;br /&gt;தொடர்கிற சங்கதியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்த்துக் கேட்டால்&lt;br /&gt;ஏச்சுப் பேச்சு.&lt;br /&gt;விடுதியை விட்டு&lt;br /&gt;உடனே நீக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஞாயிறை நினைத்தால்&lt;br /&gt;நடுக்கமாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பலிகடான் நான்தானோ&lt;br /&gt;அச்சமாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள மாமா!&lt;br /&gt;அதற்குள் வந்து&lt;br /&gt;அழைத்துப் போங்கள் என்னை!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அம்மா&lt;br /&gt;இல்லாத எனக்கு&lt;br /&gt;நீங்கள்தானே எல்லாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அவசியம் வாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையோடு&lt;br /&gt;அம்சவேணி&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. எதிர்வீட்டுப் பூனை குட்டி போட்டுடுச்சா?&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-6838200572559432327?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/6838200572559432327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=6838200572559432327' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/6838200572559432327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/6838200572559432327'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2010/12/blog-post_18.html' title='கேர்ள்ஸ் ஹாஸ்டல்'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-7030794208595680150</id><published>2010-12-07T22:48:00.001-08:00</published><updated>2010-12-07T22:54:34.623-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்தாளர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>பல்கலைக்கழகத்துக்குப் போன பழக்கடைக்காரர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TP8rhZjP71I/AAAAAAAAADI/Q1f4-0yVB_U/s1600/Nirangalin%2Bulagam.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 204px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TP8rhZjP71I/AAAAAAAAADI/Q1f4-0yVB_U/s320/Nirangalin%2Bulagam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5548201118738149202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘பஸ்ஸு வந்துரும்டா’ என்றேன் நான். &lt;br /&gt;&lt;br /&gt;‘பத்தே நிமிசம்டா. பஸ்ஸு வர்றதுக்குள்ள வந்துரலாம் வாடா!’ என்றபடி, என்னை இழுத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டுக்கு எதிர்ப்புறம் இருந்த கற்பகம் ஓட்டலுக்குப் போனான் ரமேஷ். &lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் ஒரு தள்ளுவண்டியில் பழங்கள் பரப்பியிருக்க, அவர் ஆப்பிள் பழங்களைத் துணியால் துடைத்து, அடுக்கிக் கொண்டிருந்தார். முகத்தின் கால் வாசியை மறைத்ததுபோல சோடாபுட்டிக் கண்ணாடி. வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். ரமேஷைப் பார்த்து சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘வணக்கம் தோழர்!’ என்றான் ரமேஷ். &lt;br /&gt;&lt;br /&gt;‘வணக்கம். வாங்க! என்னா காலேஜுக்குப் போகலியா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘கௌம்பிட்டோம். பஸ்ஸு வர்றதுக்கு டைம் இருக்கு. புதுசா ஒரு கதை எழுதினேன். அதான் படிச்சுக் காட்டலாம்னு...’&lt;br /&gt;&lt;br /&gt;‘படிங்க. படிங்க. இது யாரு?’&lt;br /&gt;&lt;br /&gt;‘என் ஃபிரெண்டு. பாலு...’ &lt;br /&gt;&lt;br /&gt;ரமேஷ் தன் கையில் வைத்திருந்த காலேஜ் நோட்டில் ஒரு பக்கத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தான். அவர்  பழங்களை அடுக்கியபடியே கேட்டார். அவன் படித்து முடித்ததும்  முதலில் மனமாரப் பாராட்டினார். பிறகு விமர்சனம் சொன்னார். எங்கேங்கே தவறு, எப்படி திருத்தினால் சரியாக இருக்கும் என்று அவன் காயப்பட்டுவிடாமல் சொன்னார். ரமேஷ் குறித்துக் கொண்டான். நாங்கள் விடைபெற்றோம்.  காலேஜ் பஸ்ஸில் ஏறும்போது அவர் பெயர் தேனி சீருடையான் என்று சொன்னான் ரமேஷ்.  &lt;br /&gt;&lt;br /&gt;‘எழுத்தாளரா இவர்? பழக்கடை வைத்திருக்கிறாரா?!’ எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரைப் பற்றி அவன் மேலும் சொன்னான். சிறு வயதில் அவருக்குப் பார்வை பறிபோய்விட்டது. பார்வையற்றோர் பள்ளியில் படித்தார். பிறகு கண்ணில் ஆபரேஷன் நடந்து பார்வை வந்தது. சிறுகதைத் தொகுதி, நாவல் வெளியிட்டிருக்கிறார். அவை இரண்டு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக இருக்கின்றன. நான் பிரமித்துப் போனேன். &lt;br /&gt;&lt;br /&gt;ரமேஷ் வைத்யா எழுதி, அவரிடம் வாசித்துக் காண்பித்த அந்தச் சிறுகதை, எழுத்தாளர் பொன் விஜயன் தொகுத்த ஒரு தொகுப்பில் வெளியானது. பிறகு ரமேஷோடு நானும் சேர்ந்துகொண்டேன். படைப்பாளியாக. சிறுகதை, கவிதை என்கிற பெயரில் எதை எழுதிக் கொண்டுபோனாலும் பொறுமையாகக் கேட்பார். பொறுப்பாக விமர்சனம் செய்வார். தொடர்ந்து எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துவார். இன்றைக்கும் தேனியில் எழுத்தாளர்கள் ம. காமுத்துரையோ, அல்லி உதயனோ, இதயகீதனோ எதை எழுதினாலும் முதலில் அவரிடம் காண்பிக்கத்தான் ஓடுகிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;‘நிறங்களின் உலகம்’ நாவலை விமர்சிப்பதற்கு முன்பாக, தேனி சீருடையானைப் பற்றிய ஒரு அறிமுகம் தேவை என்று தோன்றியது. அதற்காகத்தான் இந்த முன்னுரை.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையை இழந்த ஒரு சிறுவன், சென்னை பூந்த மல்லியில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளியில் பத்து ஆண்டுகள் படிக்க நேர்கிறது. இந்த ஒற்றைவரி வாழ்க்கைதான் இந்த நாவல். கண்ணிலாத ஒருவனின் உலகம் அந்தந்தக் கால மன நிலையில் விரிகிறது.  தமிழில் இப்படி ஒரு நாவல் இதுவரை வந்திருக்கிறதா என்பது சந்தேகமே. &lt;br /&gt;&lt;br /&gt;‘வெளிச்சம் நிறைந்த கும்மிருட்டில் மூழ்கியிருந்தது அறை. ஒளியின் நிறமும் இருட்டின் நிறமும் பின்னிப் பிணைந்து முகத்தில் அப்பிக் கொண்டன. சொதசொதத்த முகவெளியில் சோகக் கோடுகள் பதியமிட்டன. ரம்பம் ஒன்று கண்களைக் கீறி ரத்தம் வராத ரணத்தை ஏற்படுத்தியது. சப்தமும் சப்தமின்மையுமான எல்லைகளுக்குள் சிறைப்பட்டுக் கிடந்தேன் நான்.’   &lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன வர்ணனையை எந்த எழுத்தாளரும் எழுதிவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது. இது தேனி சீருடையான் பார்வையிழந்திருந்த காலத்தில் அனுபவித்த அவலத்தில் முகிழ்த்த வர்ணனை.  &lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தை இறுக்கிப் பிடித்திருக்கும் வறுமை, பார்வையிழந்த அக்கா, வீட்டை கவனிக்காமல் திரியும் தந்தை, அப்பாவி அம்மா என்கிற குடும்பப் பின்னணியில் பாண்டியின் கதை விரிகிறது. இடையில் பார்வை பறிபோக, அவனுடைய மாமா பாண்டியை அழைத்துப் போய் சென்னையில் உள்ள ஒரு பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்துவிடுகிறார். அங்கிருந்து புதுப் புதுப் பாத்திரங்கள் கதையில் பாண்டியுடன் சேர்ந்து கொள்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பார்வையில்லை, புது இடம், புது மனிதர்கள், புதுவிதமான (பிரெய்லி முறை) கல்வி. தடுமாறிப் போகிற பாண்டி கொஞ்சம் கொஞ்சமாக அந்த வாழ்க்கைக்குப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக அதில் கரைந்து போகிறான்.  பத்மநாபன், கன்னியம்மாள், சென்னியப்பன், பொன்னுச்சாமி சார், பாண்டுரங்கன்... என நாவல் முழுக்க மறக்க முடியாத பாத்திரங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;படிப்பு முடிந்து பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய சூழல். நண்பன் பத்மநாபன் அழுதுகொண்டிருக்கிறான். பாண்டி அவனைத் தேற்றுகிறான். நண்பன் சொல்கிறான்: ‘என் பசியை இன்னக்கி வரக்யும் அரசாங்கம் தீத்து வச்சுச்சு; இனிமே யார் அதைச் செய்வா?’ வெகு சாதாரணமாக சொல்லப்படும் இந்த வசனம் நம்மை அதிர்ந்து போக வைத்துவிடுகிறது. உண்மையில், பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான சிறுவர்களின் முதல் பிரச்னை வறுமையாகத்தான் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வறுமை பாண்டியின் வாழ்க்கையில் அழுத்தமாகக் காண்பிக்கப்படுகிறது. ஒரு முறை விடுமுறைக்கு வீட்டுக்குப் போகிறான். அவனுடைய பிரெய்லி புத்தகங்களையும் அவன் வாங்கியப் பதக்கத்தையும் விற்றுவிட்டிருக்கிறாள் அம்மா. அதிர்ந்துபோகிற பாண்டியிடம், ‘கோவிச்சுக்காதய்யா! அக்காவுக்கு நடு முதுகுல ராஜ பிளவை பொறப்பட்டு சாகக் கெடந்தப்போ, வைத்தியச் செலவுக்குக் காசு இல்லாம ஒம் புஸ்தகத்தையும் பதக்கத்தையும் வித்துட்டோம். கஞ்சி இல்லாட்டிக்கூட ஈரத் துணிய இறுக்கிக் கட்டிப் படுத்துக்கலாம். ரத்த உசுர். சாகக் கெடக்கறப்போ எப்படிய்யா பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியும்?’ என்கிறாள் அம்மா. &lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து வாழ்க்கையும் பிரமிப்பூட்டும் சென்னை வாழ்க்கையும் பார்வையற்ற ஒருவனின் மன நிலையில் இருந்து சொல்லப்படுவது இந்நாவலின் புதிய அணுகு முறை. மிக எளிமையான உரையாடல்களும், மிரட்டாத, தெளிவான நடையும்தான் இந்த நாவலின் பலம் என்றுகூடச் சொல்லலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;முழு நாவலையும் படித்து முடித்ததும் பார்வையற்றவர்களோடு கலந்து வாழ்ந்த உணர்வு ஏற்படுகிறது. அவர்களுக்கேயான இயல்பான வாழ்வியல் சிக்கல்கள், இருட்டைப் போலவே பயமுறுத்தும் எதிர்காலம் எல்லாவற்றையும் கொண்டுவந்து கண்முன் நிறுத்துகிறார் சீருடையான். ஆனாலும் நாவலின் முடிவில் கீற்றாகக் கிளம்பும் நம்பிக்கைதான் அவரை யார் என்று நமக்கு இனம் காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;‘படிப்பு வெள்ளை நிறம். முடிப்பு கருநீல நிறம்; முடித்துவிட்டேன் என்ற கருத்து வெளிர் மஞ்சள் நிறம். ஏன் இப்படி நிறங்கள் உண்டாகின்றன? மனக் கற்பனைக்குத் தகுந்தபடி நிறங்களா? நிறங்கள் கற்பனையை உண்டாக்குகின்றனவா? ஒரு வேளை பிறவிக் குருடனாய் இருந்தால் நிறங்கள் புரியாமல் போயிருக்குமோ? அப்படியும் சொல்ல முடியவில்லை. கங்காதரன் பிறவிக் குருடன். பச்சை நிறம் எப்படி இருக்கும் என்று கேட்டபோது இலை போலக் கையை விரித்துக் காட்டினான். ‘வெள்ளை நிறம்?’ ‘பகல் முடிந்த இருள் போல இருக்கும்.’&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ‘நிறங்களின் உலகம்’ நாவலில் விரிகிற தேனி சீருடையானின் உலகம் மிகப் புதியதாக இருக்கிறது. கதையின் நாயகன் பாண்டி அனுபவிக்கிற அத்தனை உணர்வுகளையும் படிக்கிற நம்மையும் தொற்றிக்கொள்ளச் செய்கிறது. வான வில்லைப் போல அழகான, அதே சமயம் யதார்த்தமான படைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;நூல்: நிறங்களின் உலகம்&lt;br /&gt;ஆசிரியர்: தேனி சீருடையான்&lt;br /&gt;வெளியீடு: அகரம், மனை எண். 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007.&lt;br /&gt;விலை: ரூ. 150/-.&lt;br /&gt;&lt;br /&gt;(அம்ருதா இலக்கிய இதழில் வெளியானது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-7030794208595680150?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/7030794208595680150/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=7030794208595680150' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/7030794208595680150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/7030794208595680150'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2010/12/blog-post.html' title='பல்கலைக்கழகத்துக்குப் போன பழக்கடைக்காரர்'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TP8rhZjP71I/AAAAAAAAADI/Q1f4-0yVB_U/s72-c/Nirangalin%2Bulagam.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-6573154640692988778</id><published>2010-06-02T02:06:00.000-07:00</published><updated>2010-06-02T02:13:40.439-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆனைமுத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.மு.க. அண்ணா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடர் கழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>வே. ஆனைமுத்து - விரிவான நேர்காணல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TAYge3hRGrI/AAAAAAAAACw/2bByLaKW-qI/s1600/DSC_0826.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TAYge3hRGrI/AAAAAAAAACw/2bByLaKW-qI/s320/DSC_0826.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478101711414434482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘இந்தியாவில் இந்தி தேசிய மொழி என்பது தவறு!’&lt;br /&gt;&lt;br /&gt;- வே. ஆனைமுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேர்காணல்: பாலு சத்யா&lt;br /&gt; &lt;br /&gt;அய்யா ஆனைமுத்து, ‘வாழும் பெரியார்’ என்று அழைக்கப்படுபவர். பெரம்பலூருக்கு அருகே இருக்கும் முருக்கன்குடி என்ற சிற்றுரில் வேம்பாயி - பச்சையம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக 21.06.1925-ல் பிறந்தார். 1944-ல் வேலூரில் தந்தை பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டு சுயமரியாதைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டார். தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் பணியில் இன்றுவரை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ‘குறள் மலர்’, ‘குறள் முரசு’, ‘சிந்தனையாளன்’ ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர். 1957-ல் அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். திராவிடர் கழகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர், 1975-ல் அதிலிருந்து வெளியேறினார். தோழர்களுடன் இணைந்து ‘பெரியார் சம உரிமைக் கழகம்’ என்ற இயக்கத்தை 1976-ல் தொடங்கினார். 1978ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காக மிகத் தீவிரமாக போராடினார். அப்போதைய குடியரசு தலைவர் சஞ்சீவரெட்டியை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை வைத்தார். உ.பி.யில் முசாபர் நகரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பீகாரில் முதன் முறையாக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கிடைத்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ்நாட்டிலும் 1979-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித ஒதுக்கீடு கிடைத்தது குறிப்பிடத்தக்க ஒன்று. 1988ஆம் ஆண்டு, பெரியார் சம உரிமைக் கழகம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது. ‘சிந்தனையாளர்களுக்கு சீரிய விருந்து’, ‘தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்!’, ‘பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?’, ‘விகிதாசார இட ஒதுக்கீடு செய்!’ ஆகிய நூல்களை எழுதியவர். ‘பெரியார் - ஈ.வெ. ரா. சிந்தனைகள்’ என்று பெரியாரின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுத்து வெளியிட்டார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொகுப்பை நன்கு விரிவாக்கம் செய்து, சமீபத்தில் இருபது தொகுதிகளாக தொகுத்து வெளியிட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இந்த வயதிலும் உங்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் உந்து சக்தி எது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: எனக்குப் பிடித்தமான பணி, பெரியாரைப் பற்றிப் படிப்பது, எழுதுவது, ஆராய்ச்சி செய்வது. அந்த விஷயங்களை ஊராருக்குச் சொல்லுவது. இந்தப் பணியில் நான் ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எழுபத்தைந்து முதல் ஈடுபட்டிருக்கிறேன். அந்தக் குறிப்பிட்ட பணியில் எனக்கு அளவு கடந்த ஆர்வம் இருப்பதால், அது முடிகிற வரையில் பல இடங்களுக்குப் போவது தவிர்க்க முடியாதது, பலபேரைப் பேட்டி காணுவது தவிர்க்க முடியாதது, பல ஆவணங்களை பதிவு செய்வது தவிர்க்க முடியாதது. நூலகங்களுக்குப் போவதும் இன்றியமையாதது. ஆகையால் நான் ஓய்வைத் தேடுவதே இல்லை. ஓய்வில்லாமல் அலைந்தால்தான் எனக்கு வேண்டிய தரவுகளை, பல மட்டங்களில் நான் திரட்டிக்கொள்ள முடியும். அதற்கு வயது ஒன்றும் தடையாக இல்லை. ஏனென்றால், எனக்குக் கண் பார்வை நன்றாக இருக்கிறது. நினைவாற்றல் நன்றாக இருக்கிறது. பயணம் போவதற்கும் ஒன்றும் தடையில்லை. ஆகையால், நான் எடுத்துக்கொண்ட வேலையை முப்பத்தைந்து ஆண்டுகளாக விடாமல் செய்துகொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம். அது முற்றுப் பெறுகிற வரைக்கும், எனக்கு எத்தனை வயதானாலும் அப்படித்தான் இருப்பேன். இதுதான் என் உந்து சக்தி. பெரியாரை முழுமையாக உலகத்துக்குக் காட்டவேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: தற்போது பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகளை இருபது தொகுதிகளாகத் தொகுத்திருக்கிறீர்கள் அல்லவா? அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: பெரியாருடைய எழுத்துகள் எல்லாம் 1925-ல் இருந்து எழுதப்பட்ட எழுத்துகள்தான். அன்றைக்கு அந்த முதல் ஓராண்டில் அவரால் எழுதப்பட்ட எழுத்து, அவரிடமும் இல்லை, பெரியார் நூலகத்திலும் இல்லை, எங்களிடமும் இல்லை. அது இருக்கற இடம் அப்போ எனக்குத் தெரியாது. அது தெரியாமலே, 1925-ல் பெரியார் எழுதிய, பேசியவற்றையெல்லாம் விட்டுவிட்டு, 1926-ல் இருந்து தொகுக்க ஆரம்பித்தேன். அவர் இறக்கும்வரை என்ன பேசினாரோ, எழுதினாரோ அவற்றில் இன்றியமையாதவை என்று கருதப்படுகிற கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் தொகுத்தேன். சொன்னவற்றையே மறுபடியும் திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தால், அதை மறுபடியும் சேர்க்காமல் விட்டுவிட்டு தொகுத்தேன். இதை பெரியாரே சொல்லியிருந்தார். ‘நான் ஒரே செய்தியைப் பேசியிருப்பேன். ஒரே செய்தியை எழுதியிருப்பேன். அது வந்துடாம பாத்துக்கங்க!’ன்னு சொல்லியிருந்தார். அதில் நான் எச்சரிக்கையாக இருந்தேன். 1926 முதல் 1973 வரை, நாற்பத்தேழாண்டு காலம் அவருடைய பேச்சு, எழுத்தில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் நான் இரண்டாண்டுகளாக தொகுத்துவிட்டேன். அந்த ஆவணங்கள் முழுவதும் திருச்சியில், பெரியார் மாளிகையில் இருந்தன. அவரே அது முழுவதையும் எடுத்துக்கொண்டு போவதற்கு எனக்கு அனுமதி கொடுத்துவிட்டார். நானும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். என் வீடும் திருச்சி, பெரியார் குடியிருந்ததும் திருச்சி.  அவர் புத்தூரில் குடியிருந்தார். நான் நகர ரயில்வே ஸ்டேஷன் அருகே குடியிருந்தேன். என்னுடைய ஓய்வு நேரம், தூக்க நேரம் எல்லாம் போக நான் படிப்பேன். நான் படித்து வைத்ததைக் குறித்து வைப்பேன். அதை இன்னொருவர் சரி பார்ப்பார். அதை நான்கு பேர் எடுத்து எழுதுவார்கள். அப்போதெல்லாம் கணினி கிடையாது. ஜெராக்ஸ் கிடையாது. அப்போது படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த இளைஞர்கள் நான்கு பேரை, ஓர் அறையை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்தேன். அவர்கள் எடுத்து எழுதுவதற்கு ஏற்பாடு செய்தேன். அவர்கள் ஏறக்குறைய இருபது மாதங்கள் எழுதினார்கள். ‘ஹிந்து’ ஒரு பக்க அளவு இருக்கிறதல்லவா? அதற்கு ‘சிங்கிள் டெமி’ என்று பெயர்.  அந்த சிங்கிள் டெமி சைஸில் 3,222 பக்கம் எடுத்து எழுதினேன். நான் படித்ததில், கழித்தது போக. மொத்தம் 5,000 பக்கங்கள் வர்றது மாதிரி படித்தேன். அதில் ரெப்பெட்டிஷனாக வருவதையெல்லாம், நானே திரும்பத் திரும்பப் படித்துக் கழித்துவிட்டேன். ஃபைனல் என்று தேறியது 3,222 பக்கங்கள். அந்த, எழுதப்பட்ட கையெழுத்துப் படியை பெரியாரிடமே கிட்டத் தட்ட பத்து மாதங்கள் கொடுத்து வைத்திருந்தேன். அவர் தானாகவும் படிப்பார். என்னைப் படிக்கச் சொல்லியும் கேட்பார். சில தோழர்களைப் படிக்கச் சொல்லியும் கேட்பார். படித்துவிட்டு, ஏறக்குறைய ஐநூறு இடங்களில் கையெழுத்துப் போட்டார். வேக வேகமாகக் கையெழுத்துப் போடுவார். இதெல்லாம் நான் முதல் பதிப்பு கொண்டுவரும்போது ஏற்பட்ட அனுபவங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: முதலில் இந்த தொகுப்புப் பணியைச் செய்யும்போதே அவருடைய சில கட்டுரைகள், சொற்பொழிவுகள் எல்லாம் கிடைக்கவில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருந்தீர்கள் இல்லையா? அவை எல்லாம் கிடைத்துவிட்டனவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: 1973-ல் பெரியார் இறந்தார். சென்னை மண்ணடியில், மறைமலை அடிகள் நூல் நிலையம் ஒன்று இருக்கிறது.  1974, நவம்பரில் அங்கே போய் உட்கார்ந்து விடுபட்டுப் போனவற்றையெல்லாம் முழுதாகப் படித்து கையில் நானே எழுதிக் கொண்டேன். ஆனால், அத்தனையையும் என்னால் முழுதாக எழுத முடியவில்லை. எனக்குக் கிடைக்காத தகவல்கள் கிடைத்துவிட்டன. மறுபடியும், அவற்றை வேறொருவரிடம் வாங்கி 2001-ம் ஆண்டுதான் முழுதாக ஜெராக்ஸ் பண்ணினேன். ஏனென்றால், பெரியார் இறந்த பிற்பாடு பெரியார் எனக்கு எதையெல்லாம் கொடுத்தாரோ அவை எல்லாவற்றையும் திருப்பி வாங்கிவிட்டார்கள். என்னிடம் எதுவும் இல்லை. ஆதாரம் என்று ஒன்றுகூட என்னிடம் கிடையாது. கையில இருந்த எல்லாமே 1975 கடைசியில் போய்விட்டது. அப்புறம் நான் என் தேடலை ஆரம்பித்தேன். அங்கங்கே போகிற இடங்களில் ஏதாவது ரெண்டு வால்யூம், ஒரு வால்யூம், அரை வால்யூம் என்று கிடைக்கிற பெரியாரின் சிந்தனைகளை அருப்புக்கோட்டையில் இருந்து பல ஊர்களில் திரட்டிக்கொண்டு இருந்தேன். அது சம்பந்தமாக காமராஜரையும் பார்த்தேன். இது தொடர்பாக இரண்டாவதாகப் நான் பார்க்கப் போனது காமராஜரைத்தான். ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பெரியாருடைய சொற்பொழிவுகள், பயண அனுபவங்கள், வைக்கம் போராட்டம் குறித்த பேச்சு எல்லாம் வந்திருக்கின்றன. அதை டெல்லியில் படித்திருந்தேன். ஆனால், அந்தப் பத்திரிகை கை வசம் இல்லை. காமராஜர் இறந்தது 2.10.1975-ல். 30.9.1975, மாலை நான்கரை மணிக்கு நானும் ‘பஞ்சாயத்து செய்தி’ ஆசிரியர் கு. கோவிந்தராஜுலுவும் காமராஜரைப் பார்த்தோம். முக்கால் மணி நேரம் பேசினோம்.  அதாவது, காமராஜர் இறப்பதற்கு நாற்பத்தி எட்டு மணி நேரத்துக்கு முன்னால். அப்போது அவர் உடம்பு நொந்து போயிருந்தது. என்னை அவர் ‘தம்பி!’ என்றுதான் அழைப்பார். அவரை நான் ஆண்டுக்கு இரண்டு முறை பார்ப்பேன். கோட்டையில் ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். 1966-ல். &lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன தம்பி?’ என்று கேட்டார். ‘அய்யாவைப் பத்தி உங்க வார்த்தையில கேட்டு பதிவு செய்ய வந்திருக்கேன்யா’ன்னு சொன்னேன். அவருக்கு உடல் நிலை சரியில்லை, இல்லையா? அதனால் சொன்னார். ‘ஒரு பத்து நாள் கழிச்சு வா! நான் நிறையா சொல்லணும். சொல்றேன்’ அப்பிடின்னார். நானும் ‘சரிங்க’ என்று சொல்லிவிட்டேன். அவரால் அதிகம் வேகமாகப் பேச முடியவில்லை. அப்புற்ம் கொஞ்சம் நேரம் கழித்து நானாகக் கேட்டேன். ‘உங்க காங்கிரஸ் கமிட்டி ஆபீஸ்ல ‘சுதேசமித்திரன்’ இருக்கும் இல்லைங்கய்யா! அதைக் கொஞ்சம் குடுக்கச் சொல்லுங்களேன்!’னு சொன்னேன். ‘அது எங்க இருக்கும்? அது... ஆகஸ்ட் கலவரத்துல எல்லாத்தையும் வெள்ளைக்காரன் தூக்கிட்டுப் போயிட்டான். அங்க ஒண்ணும் இல்ல’ என்று சொல்லிவிட்டார். அது உண்மை. அப்புறம் அவர் எதுவும் சொல்லவில்லை. அப்புறம் நான் யோசித்துக் கேட்டேன். ‘அருப்புக்கோட்டையில முத்து நாடார் வீட்ல இருக்குமாங்கய்யா?’ என்று கேட்டேன். ‘ஆங்... ஆமா, ஆமா. அவங்க ரெண்டு பேரும் தோஸ்து. அங்க இருக்கும். அங்க போ!’ என்று சொன்னார். முத்து நாடார், பெரியாரோடு காங்கிரஸில் இருந்தவர். பெரியாரோடு சுதந்தரா இயக்கத்தில் இருந்தவர். பெரியார் இறக்கும் வரை பெரியாரோடு இருந்தவர்.  அந்த ‘அருப்புக்கொட்டை முத்து நாடார்’ ஒரு பத்திரிகை நடத்தினார். அது பெரியார் பத்திரிகைக்கு ஆறாண்டு முற்பட்ட பத்திரிகை.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அது என்ன பத்திரிகை?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: ‘நாடார் குல மித்திரன்.’ அது ஒரு வாரப் பத்திரிகை. அதை 1919-ல் ஆரம்பித்திருந்தார். அதனால் அங்கே போய் கேட்டால் தகவல்கள் கிடைக்கும் என்று சொன்னார் காமராஜர். அப்போ முத்து நாடாரோட மகன், சின்னவர் உயிரோடு இருந்தார். இப்போதுதான் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இறந்தார். நான் நேராக அவர் வீட்டுக்குப் போய்விட்டேன். இரண்டு நாள் தங்கியிருந்தேன். முடிந்தவரை பார்த்தேன். அப்போ ஜெராக்ஸெல்லாம் கிடையாது. ஒரு நாற்பது பக்க நோட்டில் சில குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். நாடாருடைய மகனும் அப்போது பெரியார் கட்சியில் இருந்தார். அந்த மாவட்டத்தினுடைய தி.க. தலைவர் அவர். அவர் எனக்கு மிகவும் வேண்டியவர். மிகவும் அனுசரணையாக இருந்தார். அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே தங்கி பெரியார் சிந்தனைகளைப் படித்தேன். அப்போ நான் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். ‘சிந்தனையாளன்.’ அதனால் அதிக நாள் தங்க முடியவில்லை. திரும்பி வந்துவிட்டேன். மறுபடி, 1987-ல் போனேன். எம்.ஜி.ஆர். இறந்த தினத்தன்று நான் அருப்புக் கோட்டையில் அவர்கள் வீட்டில் இருந்தேன்.  அந்த சந்தர்ப்பத்தில் பத்து நாட்கள் தங்கிப் படித்தேன். அப்போ ஜெராக்ஸ் இருந்தது. எல்லா ஆவணங்களையும் மதுரைக்குக் கொண்டு வந்து, என்னிடம் எவ்வளவு பணம் இருந்ததோ, அதற்கு ஏற்றதுபோல் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டேன். எல்லாவற்றையும் எடுக்கவில்லை. அதற்குப் பிறகு எனக்கு நிறைய தரவுகள் கிடைத்தன. ஆனால், எனக்குக் கிடைத்த முதல் தரவு அவர்களிடம் கிடைத்ததுதான். இப்படி தேடிக்கொண்டே இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அப்படியானால் கிட்டத்தட்ட பெரியாரின் எல்லா சிந்தனைகளையும் தொகுத்துவிட்டீர்கள், இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: இல்லை. எனக்கு வசதி கிடையாது. வயதாகிவிட்டது. வாகன வசதி கிடையாது. பொருள் வசதி கிடையாது. கூட வருவதற்கு ஆட்கள் இல்லை. நான் நிறைய இடத்துக்குப் போகவேண்டி இருந்தது. இன்னும்கூட நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:  இன்னும் தொகுப்பில் சேர்க்கவேண்டியது நிறைய இருக்கின்றன என்று சொல்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: நிச்சயமா. இப்போது நான் தொகுத்தவற்றிலேயே பெரியாரின் எல்லா சிந்தனைகளையும் பயன்படுத்திவிடவில்லை. இப்போது நான் என்ன வெளியிட்டிருக்கிறேனோ, அதைப் போல இரண்டு மடங்கு வெளியிட என்னிடமே செய்திகளும் தகவல்களும் இருக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் இனிமேல் எனக்கு வயது இல்லை. நேரமும் இல்லை. இதுதான் இந்தத் தொகுப்பினுடைய சுருக்கமான அனுபவம், வரலாறு. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் குடியரசு கட்டுரை தொகுப்புகளுக்கும் உங்களுடைய தொகுப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? &lt;br /&gt;&lt;br /&gt;ஆனமுத்து: எந்த அமைப்பு ‘குடியரசு’ என்கிற பெயரால் வெளியிட்டு இருந்தாலோ, ‘பெரியார் எழுத்தும் பேச்சும்’ என்கிற பெயரால் வெளியிட்டு இருந்தாலோ பெரிய வேறுபாடு என்ன என்று கேட்டால், காலத்தை மையமாக வைத்து கட்டுரைகளையோ, பேச்சையோ அப்படியே மொத்தமாக தொகுத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மற்ற தொகுப்புகளில். காலத்தை மட்டும் மையமாக வைத்து, பொருள்வாரியாகப் பிரிக்காமல், மொத்தமாக அச்சடித்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். என் தொகுப்பில் முதல் வேறுபாடு என்னவென்றால், நான் காலத்தை மையமாக வைத்திருக்கிறேன். ஆனால், படிக்கும்போதே பொருள்வாரியாக முழுக்கப் பிரித்துவிட்டேன். ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே, இந்தக் கட்டுரை எந்தப் பொருளைப் பற்றி முதன்மையாகப் பேசுகிறது, எந்தத் தலைப்பில் வருகிறது என்று சப்ஜெக்ட்வைஸாக பிரித்துவிட்டேன். க்ரோனலாஜிக்கல் ஆர்டர் இஸ் தேர். கால வரிசை அப்படியே இருக்கிறது. ஆனால், அந்தக் கால வரிசைப்படி மொத்தமாக அச்சிடாமல், முதலில் பொருள்வாரியாகப் பிரித்ததுதான் என்னுடைய வித்தியாசம். அப்படி கிட்டத்தட்ட 70 வெவ்வேறு சப்ஜெக்டுகள் வருகின்றன.  ‘பெண்ணுரிமை’ என்றால் அதைக் கால வரிசைப்படுத்தியிருக்கிறேன். ‘தீண்டாமை’ என்றால் அதைக் கால வரிசைப்படுத்தி இருக்கிறேன். ‘ஜாதி ஒழிப்பு’ என்றால் அதைக் கால வரிசைப்படுத்தி இருக்கிறேன். ‘மத எதிர்ப்பு’ என்றால் அதைக் காலவரிசைப்படுத்தி இருக்கிறேன். இப்படி எல்லாவற்றையும் பொருள்வாரியாகப் பிரித்து அவற்றைக் கால வரிசைப்படுத்தி இருக்கிறேன். இது முதல் வேறுபாடு. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, அந்த ‘குடியரசு’ தொகுப்பு என்று பெயர் வைத்ததால், ‘குடியரசை’த் தவிர வேறு இடத்துக்குப் போவதற்கு அங்கு வாய்ப்பில்லை. நான் அப்படி பெயர் வைக்கவில்லை. பெரியாருடைய சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் என்பதால், ‘குடியரசு’ பத்திரிகையில் வெளியானவை, ‘குடியரசு’க்கு முன்னால் வந்த ஆவணங்கள் எல்லாவற்றையும் தொகுத்தேன். இந்தப் பதிப்பில் நான் தொகுத்ததில், முதன்மையாக, முதல் கட்டுரை 1922-ட் ஆண்டு அக்டோபர் முப்பத்தி ஒன்றாம் தேதி பெரியார் கொடுத்த பேட்டி இடம்பெற்றிருக்கிறது. அதுதான் ஃபர்ஸ்ட் ஸ்பீச் இன் பிளாக் அண்ட் ஒயிட். என் ஆய்வுக்கு உட்பட்ட வரையில், முதன் முதல் அச்சில் பதிப்பாகி வெளி வந்தது இந்தப் பேட்டிதான். அந்தப் பேட்டியும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பேட்டி. &lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன பேட்டி என்றால், அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு வரும் வழியில் பாளையம்பட்டி என்ற ஓர் ஊர் இருக்கிறது. அங்கே தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடு நடந்தது. பெரியார் காங்கிரஸ் கட்சியின் செக்ரட்டரி. மாநாடு முடிந்ததும் வரவு, செலவு கணக்கைக் கேட்பதற்காக அங்கே பெரியார் தங்கியிருந்தார்.  மாலையில் மாநாடு முடிந்ததும் இளைஞர்கள் பத்துபேர் அவரை பேட்டிகாண வருகிறார்கள். அவர்கள் யார் என்றால், அருப்புக்கோட்டை நாடார் வாலிபர்கள். அவர்கள் என்ன கேட்டார்கள் என்றால், ‘நாங்கள் நாடார்கள்! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நுழையக்கூடாது என்று சொல்கிறார்கள். நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் காங்கிரஸில் காந்தி தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபடுகிறார் என்று சொல்கிறீர்கள். இங்கே தீண்டாமையை ஒழிக்க உங்கள் கட்சி பாடுபடுமா?’ என்று கேட்கிறார்கள். ‘கட்டாயம் பாடுபடும்’ என்று சொல்லிவிட்டு பெரியார், தீண்டாமை தன்னை எப்படி பாதித்தது என்பதை விளக்குகிறார். அவர் சொல்கிறார்: ‘நான் போன மாசம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் போனேன். நான் என்னுடைய வழக்கமான உடை, சட்டை, தலைப்பாகையோட போயிருந்தேன். வாசப்படிகிட்ட போனவுடனே அங்க இருக்குற காவல்காரன், ‘செருப்பை வெளிய விடணும்யா!  சட்டை, தலைப்பாகை எல்லாம் கழட்டி இங்க வச்சிடணும். இடுப்பு வேஷ்டியோடதான் போகணும்’ அப்பிடின்னு சொன்னான். ‘ஏம்ப்பா அப்பிடி?’ன்னு கேட்டேன். ‘பக்தர்கள்லாம் அப்பிடித்தான் போகணும்’னு அவன் சொல்லிப்புட்டான். நானும் அதே மாதிரி போனேன். உள்ள போய் பார்த்தா, சாமி இருக்கற இடத்துல பூட்ஸோட, வார்ப்பட்டையோட, தொப்பியோட போலீஸ்காரன் நின்னுக்கிட்டு இருந்தான். இது ஒண்ணுக்கொண்ணு முரண் தான். அதான் இந்து மதம். நான் வேற ஜாதி. எனக்கே அந்த நிலைமைதான் இருக்கு. இது அவமானம். கட்டாயம் நான் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடுவேன்.’ இப்படிச் சொன்னார் பெரியார். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரண்டு மாதத்தில், திருப்பூர்ல தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடு நடக்கிறது. அதுல வாசுதேவ அய்யர் தலைமை தாங்கியிருக்கிறார். ராஜகோபாலாச்சாரியார், ஸ்ரீநிவாச ஐயங்கார், பெரியார் எல்லோரும் பேசுகிறார்கள். அந்த மாநாட்டில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுட்டு வர்றார் பெரியார். ‘நாடார்கள் தீண்டப்படாதவங்களா கருதப்படறாங்க. அது அக்கிரமம். நம்ப காங்கிரஸ் கட்சி அதுக்குப் பாடுபடணும்’ அப்பிடிங்கறார். அப்போது பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘இது மதவிஷயம், நம்ப கட்சி அரசியல் கட்சி. நாம்ப இதுல தலையிடக்கூடாது. இது நமக்கு அப்பாற்பட்ட விஷயம்’ என்று சொல்லி ஆட்சேபம் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள். திறந்த மாநாட்டில், திருப்பூரில் இது நடக்கிறது. பெரியாருக்குக் கோபம் தாங்கவில்லை. மாலையில் திருப்பூரிலேயே தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்.  அதில் பெரியார் பேசுகிறார். ‘தீண்டாமை நம்ப நாட்டுல மட்டும்தான் இருக்கு. அது இயற்கைக்கு விரோதமானது. அது சாஸ்திரப்படி இருக்குது. ராமாயணப்படி, ஆன்மிகப்படி இருக்குது. அதைப் போக்கணும்னு சொன்னா, அது நமக்கு சம்பந்தப்பட்டது இல்லைன்னு சொல்றாங்க. நாம்ப ராமாயணத்தைக் கொளுத்தணும். மனுஸ்மிருதியைக் கொளுத்தணும்’ அப்பிடின்னு காங்கிரஸ் பொதுக்கூட்டத்துல பேசறார். அதுதான் அவரோட வாழ்நாள்ல முதல் பேச்சு. அதாவது ராமாயணத்தையும், மனுஸ்மிருதியையும் கொளுத்தணும்னு சொன்ன பேச்சு. கூட்டம் முடிந்து ஒரே கார்ல ராஜாஜியும் பெரியாரும் வருகிறார்கள். அவர் சேலத்துக்குப் போக வேண்டும். இவர் ஈரோட்டுக்குப் போக வேண்டும். வரும்போது, ‘நாய்க்கரே! இன்னிக்கி டோஸ் ரொம்ப ஸ்ட்ராங்’ என்று சொல்லியிருக்கிறார் ராஜாஜி. உடனே பெரியார் கிண்டலாக, ‘இந்த மடப்பசங்களுக்கு இது என்ன ஸ்ட்ராங்க்? இதைப் போல இன்னும் டபுஸ் ஸ்ட்ராங்க் குடுக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார். ராஜாஜி வாயை மூடிக்கொண்டு வந்துவிட்டார். அதுதான் பெரியாருக்கு ஏற்பட்ட முதல் எதிர்ப்பு, பார்ப்பனர் தரப்பிலிருந்து. ‘இவ்வளவு எல்லாம் பேசறோம், சுதந்திரம் கேக்கறோம், சுயராஜ்ஜியம் கேக்கறோம். நம்பளுக்குள்ள ஒருத்தனை தீண்டப்படாதவன்னு சொன்னா அதுக்கு இவங்க பாடுபடக்கூடாதா?’ என்கிற கோபம் அவருக்கு தன்னைமீறி வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு, ரொம்பத் தீவிரமாக சிந்திக்கிறார். அப்போ அவர் ஈரோட்டில் இருந்த ஒரு கோயிலுக்கு தர்மகர்த்தா. அங்கே எப்படி பறையர்களை உள்ளே கொண்டு போவது என்று திட்டம் போடுகிறார். ஏற்கெனவே சேது நாயக்கர் முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில்தான் வைக்கத்தில் போராட்டம் நடக்கிறது. அது 1924, மார்ச் மாதம், 30-ம் தேதி ஆரம்பித்தது. அப்போ பெரியார் ஒரு பிரசார பயணத்தில் இருந்தார். இந்தப் போராட்டத்தை கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் எல்லாம் பெரிய பெரிய படிப்பாளிகள். பாரத் லா படித்தவர்கள். வக்கீலுக்குப் படித்தவர்கள். முக்கிய தலைவர்கள் பத்தொன்பது பேரையும் மூன்றே நாட்களில் கைது செய்துவிட்டார்கள். போராடுறதுக்கு ஆளே இல்லை. தலைவர்கலை அரெஸ்ட் செய்ததும் பாமர மக்கள் எல்லோரும் பயந்துவிட்டார்கள்.  யாரும் போராட்டத்துக்கு வரவில்லை. அப்போ கமிட்டி தலைவர்களில் முக்கியமான ஒருவரான ஜார்ஜ் ஜோசப் என்கிற ஒருவர் ஜெயிலுக்குள் இருந்தார். கொரூர் நீலகண்ட நம்பூதிரி பாட் என்று ஒரு பார்ப்பனர், அவர் மட்டும் வெளியே இருந்தார். அவர் தீண்டாமை ஒழிப்பில் அக்கறை உள்ளவர். அவருக்கு பெரியாரை நன்கு தெரியும். கேரளாவில் இருந்து பெரியாருக்கு தந்தி மேல் தந்தி அனுப்புகிறார்கள். ‘ஸ்டார்ட் இம்மீடியட்லி’ என்று. அப்போது பெரியார், திண்டுக்கல்லில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்குக் கொடுத்த தந்தி, ஈரோட்டுக்கு போய் ரீ டைரக்ட் ஆகி வந்தது. உடனே அவர் கிளம்பி ஈரோட்டுக்கு வருகிறார். ஏப்ரல் 12-ம் தேதி, ‘நீங்கள் உடனே புறப்படாவிட்டால், போராட்டம் தோற்றுப் போகும்’ என்று தந்தி வந்திருக்கிறது. அப்போது பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். உடனே அவர், ராஜாகோபாலாச்சாரிக்கு ஒரு லெட்டர் எழுதி வைக்கிறார். ‘நான் போராட்டத்துக்குப் போறேன். நான் வர்ற வரைக்கும் நீங்க பார்த்துக்கங்க!’ என்று எழுதி வைத்துவிட்டு, ‘சுதேசமித்திரன்’ போன்ற பத்திரிகைகளுக்கு எல்லாம் அறிக்கை கொடுத்துவிட்டு, தனியாகப் புறப்பட்டுப் போகிறார். அவர் போகிறார் என்று கேள்விப்பட்டதும், ஆங்காங்கே இருந்து ஆட்கள் புறப்பட்டு வந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் போய் இறங்கும்போது, ராஜாவே ஆள் வச்சு அவரை வரவேற்கிறான். இவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது, வெகுளித்தனமாகவே, இவர் ஒன்றும் திமிர்த்தனமாக இல்லை. அவரை மேளதாளத்துடன் வரவேற்கிறார்கள். மேஜிஸ்ட்ரேட் உள்பட பெரிய மனிதர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஏன் பெரியாரை ராஜா வரவேற்கச் சொன்னார் என்றால், பெரியாருக்கு ஈரோட்டில் பழைய வீடு, ‘சிங்க மெத்தை வீடு’ என்று சொல்வார்கள், அப்புறம் ‘சத்திரம்’ என்று ஒன்றைச் சொல்வார்கள்.  இரண்டும் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே இருக்கிறது. இப்போதும் இருக்கிறது. திருவாங்கூர் ராஜாவோ, அவரைச் சேர்ந்தவர்களோ யார் வந்தாலும், ரயிலில் இருந்து இறங்கி, அங்கே தங்கிவிட்டுத்தான் டெல்லிக்குப் போவார்கள். இந்த சம்பவத்துக்கு ஐந்தாறு மாதங்களுக்கு முன்னால்கூட ராஜா இங்கே வந்திருக்கிறார். அவருடன் அந்த போலீஸ் ஆபீஸரும் வந்திருக்கிறான். பட்டாளமே வந்திருக்கிறது. அவர்களை எல்லாம் பெரியார் நன்கு உபசரித்திருக்கிறார். அவர்களுக்கு இவரை நன்கு தெரியும். அதனால், அவர்கள் சொன்னார்கள், ‘ராஜா உங்களை உபசரிக்கச் சொன்னார்’ என்று. பெரியார், ‘இல்ல, நான் அவரை எதிர்த்துப் போராட வந்திருக்கிறேன். ரொம்ப நன்றி. நீங்க போய்ட்டு வாங்க!’ என்று சொல்லிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு இவர் சத்தியாக்கிரக ஆசிரமத்துக்குப் போகிறார். எதிர்த்துக் கடுமையாகப் போராடுகிறார். பேசுகிறார். பெரியார் பேச்சைக் கேட்ட ஒருவர், என்னிடம் நடித்தே காண்பித்திருக்கிறார். 1978-ல். அப்போது நான் அங்கே போயிருந்தபோது, அவருக்கு எழுபத்தெட்டு வயது. நம் ஊரில் அவர் மந்திரியாக இருந்தவர். வக்கீலுக்குப் படித்தவர். அவர் பெரியார் எப்படிப் பேசினார் என்பதை நடித்தே காட்டினார். அவர் லா காலேஜுக்குப் போய்விட்டு வருகிறார். அங்கே படகுத்துறை என்று ஒன்று இருக்கிறது. அங்கேதான் அய்யா பேசுவாராம். தலைப்பாகை கட்டிக்கொண்டு, கையை வீசிக்கொண்டு, பேசுவாராம். அந்த சாமியின் பெயர் ‘வைக்கத்தப்பன்.’ அதாவது, ‘வைக்கம் மகாதேவன்’ என்று பெயர். பாமர ஜனங்கள் அதை ‘வைக்கத்தப்பன்!’ என்று அழைப்பார்கள். பெரியார், ‘வைக்கத்தப்பனை தூக்கி குப்புறப்போட்டு, துவைச்சு எடுங்கடா!’ என்று பேசியிருக்கிறார். ஜனங்களுக்கு ஒரே ஆச்சரியம். கிளர்ச்சி உண்டாகியது. எழுச்சி ஏற்பட்டது. ‘நம்மளைத் தொடக்கூடாதுங்கற சாமி நமக்கு வேணாம். தூக்கிப் போட்டு துவை!’ இந்தப் பேச்சை இளைஞர்கள் கேட்டவுடன், உற்சாகம் உண்டாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பெரியாரை கைது செய்யவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: பெரியாரை அரெஸ்ட் செய்துவிட்டார்கள். அப்போது, எம்பெருமாள் நாயுடு என்று ஒருவர் இருந்தார். அவரும் லண்டனில் படித்தவர். டாக்டர். அவருக்கு நாகர்கோவில். அவர் பெண்டாட்டியோட போராட்டத்துக்கு வந்துவிட்டார். இவருடைய மனைவி, நாகம்மை வந்துவிட்டார். பெரியார் அரெஸ்ட் ஆனவுடன், அவர்கள் எல்லா ஊருக்கும் போய், ஆண்களையும் பெண்களையும் அழைத்து வந்து போராட்டம் செய்கிறார். அவர்களையும் கைது செய்கிறார்கள். அப்போது ஆளே இல்லை. பற்றாக்குறை. அப்போது, ஈழவர்கள் அங்கே பெரிய எண்ணிக்கையில் இருந்தார்கள். நம் ஊரில் நாடார்களை இரண்டுவிதமாகச் சொல்வார்கள். ‘நாடார்!’ என்று சொல்வார்கள். பனைமரம் ஏறுகிறவர்களை ‘சாணான்’ என்று சொல்வார்கள். அங்கே கேரளாவில் ‘நாடார்’ என்றும் சொல்லுவார்கள். பனைமரம் ஏறுகிறவர்களை ‘தீயர்’ என்று சொல்வார்கள். பெரியார் ஈழவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதுதான் ஒரு பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ‘நீங்கதான் பெரிய எண்ணிக்கையில இங்க இருக்கீங்க. நீங்க கொஞ்சம் வசதியா இருக்கீங்க. ஏதோ கொஞ்சம் நிலம், கிலம் வச்சிருக்கீங்க. ஆனா, உங்களை யாரும் தீண்டமாட்டேங்கிறாங்க. ‘தெருவுல நடக்காதே!’ங்கிறாங்க. ‘கோயிலுக்குள்ள போகாதே!’ங்கிறாங்க. உங்களுக்கு ரோஷம் கிடையாதா? நீங்க ஆளுக்கு ஒரு படி அரிசி கொண்டு வரலாம்ல? நாலு தேங்காய் கொண்டு வரலாம்ல? வீட்டுக்கு ஒரு ஆள் வரலாம்ல?’ என்று அறிக்கை விடுகிறார். அது கேரளாவில் எல்லா பேப்பரிலும் வந்தது. தமிழ்நாட்டில், ‘ஹிந்து’ பத்திரிகையில் முழுதாக அப்படியே போட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே நாராயணகுரு என்று ஒரு பெரியவர் இருந்தார். அவருடைய ஆசிரமம் ஒன்று இருந்தது. அந்த ஆசிரமம்தான் சத்தியாகிரக ஆசிரமம். அங்கே ஈழவர்கள், அரிசி, தேங்காய், ஏலம், வாழைப்பழம், நேந்திரங்காய்... என்று எக்கச்சக்கமாகக் கொண்டு வந்து குவித்துவிட்டார்கள். பிறகு, தினம் பத்துபேர் போராட்டத்துக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அந்த போராட்ட வடிவம் எப்படி இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: ஒரு பறையன், ஒரு புலையன், ஒரு நாடான். மூன்று பேரும் இந்த ஜாதியில் இல்லாத யாரோடாவது ஜோடி போட்டுக்கொண்டு போவார்கள். நாகம்மாள் என்ன பண்ணுவார்கள் என்றால், கோவிந்தன் சாணார் என்று ஒருவர். அவரின் மனைவி நாகம்மாளுக்கு ஜோடி. அந்தப் பெண் இழுத்துக்கொண்டே போவார். அங்கே கோயிலுக்குப் போனவுடன், போலீஸ்காரன் சொல்லுவான்: ‘அந்த அம்மா சாணாத்தி! விட முடியாது’ என்று. ‘இல்லை இவங்களோடதான் போவேன்! ‘ என்பார் நாகம்மாள். உடனே கைது செய்துவிடுவார்கள். இப்படி இடைவிடாத போராட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை, மழை பெய்து, தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்டது, கோயிலைச் சுற்றி. போராட்டம் எதற்கு? கோயிலைச் சுற்றி இருக்கிற நான்கு தெருக்களிலும் நடக்கக்கூடாது. அதற்குத்தானே! இது கோயிலுக்குள் போகிற போராட்டம் இல்லை. தெருவிலேயே நடக்கக்கூடாது என்பதற்கான போராட்டம். தெரு, நல்ல அகலமான தெரு. உயரமான மதில்கள். அந்த வெள்ளத்தில், அந்தத் தெருவில் தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்டது. சத்தியாகிரகம் பண்ணப் போன ஒரு பையன், முழுகி செத்தே போய்விட்டான். அந்த வெள்ளத்திலும் மூணு மூணு மணி நேரம் தெருவில், கழுத்தளவு தண்ணீரில் நிற்பது. அதற்குப் பிறகு இன்னொருவர் போய் நின்றுகொண்டு ஏற்கெனவே நின்றவரை மாற்றிவிடுவார். இப்படித் தொடர்ந்தது போராட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;நாயர், பார்ப்பான், வெள்ளாளன் இவர்கள்தான் அங்கே மேல்ஜாதிக்காரர்கள். நம் எம்.ஜி.ஆர். இருக்கிறாரே அவர் நாயர். மேனன், நாயர் இருவரும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இவர்கள், தாங்கள் பார்ப்பானுக்குப் பிறந்தவர்களாகவே நினைப்பவர்கள். பார்ப்பானுக்கு அடுத்த ஜாதி என்று நினைப்பவர்கள். அடுத்து வெள்ளாளர். இந்த மூன்று ஜாதிக்காரர்களும் ஒன்று சேர்ந்துகொண்டு, படை திரட்டிக்கொண்டு பெரியாருக்கு எதிராக வர ஆரம்பித்தார்கள். கோயில்கிட்டயே சண்டை, அடிதடி நடந்தது. ஒரு பார்ப்பாரப் பையன் பெரியார் போராட்டத்துக்கு ஆதரவாக வந்தான். அவனை, பார்ப்பனர்களே பிடித்து அடித்து, மூஞ்சியைத் தரையில் வைத்துத் தேய்த்து, அவனுக்குக் கண்ணு இரண்டு போய், பார்வை கெட்டது. மூச்சே விட முடியாமல் போய்விட்டது. அப்புறம் அவனை இழுத்துக்கொண்டு போய், மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவ்வளவு கொடுமை செய்தார்கள். அடித்தார்கள், கல்லால் அடித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தடவையும் பெரியாரை கைது செய்துவிட்டு, பிறகு வெளியே விட்டார்கள். அப்படி விடும்போது, ‘நீங்கள் இந்த மாகாணத்தைவிட்டே வெளியே போகவேண்டும்!’ என்று சொன்னார்கள். அவர், ‘வெளியேற முடியாது! என்னவேணும்னாலும் பண்ணிக்கொள்ளுங்கள்!’ என்று சொல்லிவிட்டார். ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்புறம்தான் பேச்சுவார்த்தை நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் ஜெயிலில் இருக்கும்போதே, ராஜா செத்துப் போய்விட்டான். அவனுக்கு வயசாகிவிட்டது, செத்துவிட்டான். ஆனால், இவர்கள் எல்லாம் ஜெயிலில் இருக்கிறார்கள், இல்லையா? இவர்களுக்கு அவன் பாஷையில் ‘எதிரிகள்’ என்று பெயர். அதனால், ராஜாதரப்பில் ‘சத்துரு சம்ஹார யாகம்’ பண்ணினாங்க. இவர்களை சாகடிப்பதற்கு. அந்த யாகம் நடப்பதற்குள் ராஜா செத்துப் போய்விட்டான். இரவில் சங்கு ஊதப்படுகிறது. பெரியார் முழித்துக்கொண்டிருந்தார். காவல்காரனைக் கூப்பிட்டு, ‘என்னப்பா சங்கு ஊதுது?’ என்று கேட்டார். ‘ராஜா திருநாடு எய்துவிட்டார்!’ என்று சொன்னான் காவல்காரன். பெரியவர்களை ‘செத்துப் போயிட்டாங்க’ என்று சொல்லக்கூடாது இல்லையா? அது மாதிரி. ‘அப்படியா?’ என்று கேட்டார் பெரியார். ராஜா இறந்ததால், இவர்களை விடுதலை செய்தார்கள். விடுதலையானதும் பெரியார், கோவை அய்யா முத்து, எம்பெருமாள் நாயுடு மூவரையும் மாகாணத்தைவிட்டு வெளியே போகச் சொன்னார்கள். மூன்று பேருமே, வெளியேற முடியாது என்று மறுத்துவிட்டார்கள். மூவருமே தமிழ்நாட்டுக்காரர்கள். உடனே, அவர்களுக்குத் தமிழ்நாட்டுக்காரர்கள் மேல் மிகவும் மரியாதை வந்துவிட்டது. பிறகு, கீழே இறங்கிவந்து பேசினார்கள். காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வந்தார். ராணியைப் பார்க்கிறார். ராணி, ‘இப்போ ரோட்ல விடுறேன். உடனே, கோயிலுக்குப் போகணும்னு அவங்க சொன்னா, அப்புறம் என்ன பண்றது?’ என்று காந்தியிடம் கேட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பெரியார் வேறொரு இடத்தில்   தங்கியிருந்தார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னார் காந்தி. ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். பெரியார், ‘எனக்கு கோயிலுக்குள்ள போகறதுதான் என் நோக்கம். கண்டிப்பா போவேன். ஆனா, இப்போ போக மாட்டேன். இப்போ ரோட்ல நடக்க விடணும்’ என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதும், ‘சரி’ என்றார்கள். 1925-ஆம் வருடம் நவம்பர் மாதம்தான் இந்த அனுமதி கிடைத்தது. கிட்டத்தட்ட ஒருவருட காலப் போராட்டம்.   &lt;br /&gt;&lt;br /&gt;இதில் இடையில் ஒரு நாள், நாகம்மாள் என்ன செய்தார்கள் என்றால், இரண்டு, மூன்று பெண்களை அழைத்துக்கொண்டு கோயிலுக்குள்ளேயே போய்விட்டார். அப்போது, பெரியார் ஆசிரமத்தில் இருந்தார். அந்தக் கோயில்ல படைக்கிற பாப்பான் ஓடியாந்தான் ஆசிரமத்துக்கு. ‘நாயக்கரே! ஜாக்கிரதை! உன் பொண்டாட்டியை அடக்கி வை! பொம்மனாட்டி ரோட்லயே நடக்கக்கூடாதுன்னுட்டான். அவ சாமிகிட்டயே வந்துட்டா!’ என்று திட்டியிருக்கிறான். அதை யாரும் சட்டை செய்யவில்லை. இப்படி தைரியமாகப் போராட்டம் செய்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பெரியார் தொகுப்பை தயாரிக்கும்போது, திராவிடர் கழகத்திலிருந்து ஏதாவது எதிர்ப்பு வந்ததா? எப்படி சமாளித்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: அப்படி எதிர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஏனென்றால், நான் மேற்கொண்ட தொகுப்பை படித்து, மற்றவர்களைப் படிக்கச் சொல்லி கேட்டு, கையெழுத்துப் போட்டபோது, எங்களுக்கு ‘பதிப்புரிமை உண்டு!’ என்று எழுதிவிட்டார். அது அவர்களுக்கே தெரியும். அவர்களும் அதை ஒத்துக்கொண்டார்கள். இதை ஒன்றும் செய்ய முடியாது. ‘ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்னுடைய பெயரில் வெளியாவதை வேறு யாருமே தடுக்க முடியாது. அய்யாவே அனுமதி கொடுத்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அவருடைய முழுமையான ஒட்டுமொத்த படைப்புகளுக்கான உரிமை உங்களிடம் இல்லை, அப்படித்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: அப்படியல்ல. நான் எதை வேண்டுமானாலும் தொகுப்பேன். நூலின் பெயர், ‘ஈ.வெ.ரா. சிந்தனைகள்.’ உள்ளடக்கம், ‘சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்.’ நான் எப்போது வேண்டுமானாலும் தொகுத்து, எதை வேண்டுமானாலும் வெளியிடுவேன்.   அந்த உரிமையை நாங்கள் வாங்கியிருக்கிறோம். நாங்கள் பெரியாரின் கட்டுரைகளையும், எழுத்துகளையும் தொகுத்து வெளியிடுவதை யாரும் சட்டப்படி தடுக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பெரியாரின் உடைமைகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிட்டால் இதுபோன்ற சர்ச்சைகள் வராமல் தடுக்கலாம், இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: அதை நாங்கள் வரவேற்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டிருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: நாங்கள் நாட்டுடைமை ஆக்கவெண்டும் என்று எப்போது சொல்லிவிட்டோம். எப்போது கூட்டம் போட்டாலும் நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்று சொல்கிறோம். இந்த மாதிரியான பிரச்னைகள் வரும்போது நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்று எழுதுகிறோம். அப்படி நாட்டுடைமை ஆக்கப்படுவதில் கௌரவமும் படுகிறோம். எங்களுக்கும் ஓர் உரிமை இருக்கிறதல்லவா? எங்கள் வெளியீடு நாட்டுடைமை ஆக்கப்படும்போது, எங்களுக்கும் உரிமை இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பெரியாருக்குப் பிறகு அவரளவுக்குத் தீவிரமாக யாரும் நாத்திகவாதம் பரப்பாதது ஏன்? இந்த விஷயத்தில் தி.மு.க.வை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: பொதுவாக, பெரியாருக்குப் பிறகு நாத்திகத்தை யாரும் பரப்பவில்லை என்பது சரியான கருத்து இல்லை. பெரியார் காலத்திலும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி என்கிற தன்மையில் அது நாத்திகத்தை ஏற்றுக்கொண்ட கட்சி அல்ல. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அதிகாரபூர்வமான கொள்கை. கலைஞர் நாத்திகர், பேராசிரியர் நாத்திகர், நாவலர் நாத்திகர். அதோடு சரி. அவர்கள் நாத்திகர்களாக இருப்பதால், அந்தக் கட்சி நாத்திகமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அதை அவர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பொருத்தமற்றது. ஏனென்றால், அதன் நிறுவனர் அண்ணா. இல்லையா? அவர், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சொல்லித்தான் கட்சி ஆரம்பித்தார். அவர் நாத்திகரா, இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கட்சி நாத்திகக் கட்சி கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, காங்கிரஸ். அது பகுத்தறிவுவாதக் கட்சியே அல்ல. ஆனால், நேரு மட்டும் பகுத்தறிவுவாதி, இல்லையா? ‘ஏன் காங்கிரஸ் பகுத்தறிவாக இல்லை?’ என்று கேட்கக் கூடாது. அது பொருத்தமற்ற கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பெரியாருடன் பழகிய அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து:  அவரிடம் மிகவும் பாராட்டப்படவேண்டிய தன்மை என்னவென்றால், காலை எட்டு மணிக்குப் பிறகு, மாலை ஏழு மணிவரை, (இடையில் பிற்பகல் ஒன்றிலிருந்து மூன்று போக) யார் வேண்டுமானாலும், எந்தவிதமான அனுமதியும் இல்லாமல், சிறுவர்கள், பெரியவர்கள், அறிஞர்கள்... யார் வேண்டுமானாலும் அவரைப் பார்க்கலாம். யார் போனாலும், வயது, படிப்பு, உடை ... எந்த வேறுபாடும் கருதாமல், உட்கார வைத்து அருமையாகப் பேசுவார். ஐயம் கேட்டால், பதில் சொல்வார். என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். இது, முதலில் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி. அவர் சாகிறவரை அப்படித்தான் இருந்தார். அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் யாரும் வாங்கியது கிடையாது. அண்ணா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார். அவர் முதலமைச்சராக வரப்போகிற நேரத்தில். ஆனால், மற்ற யாரும் அப்படி அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதில்லை. அவர்கள் பாட்டுக்கு வருவார்கள். கதவு திறந்தே கிடக்கும். எங்களுக்கு முன்னால் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டுப் போகவேண்டும். அவ்வளவுதான். இது மிகப் பெரிய செய்தி. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, ஒரு தொண்டனோ, ஒரு அறிவாளியோ அல்லது தனக்கு சம்பந்தமில்லாதவர்களோ, தான் பேசுகிற விஷயத்தைப் பற்றி கொஞ்சம் மாறுபட்ட கருத்தைச் சொன்னால், அதற்காக வருத்தப்படமாட்டார். அதை வரவேற்று, அவரிடம் தவறு இருந்தால் அதைத் திருத்திக்கொள்வார். திருத்திக்கொண்டு, உடனே அதைப் பதிவு செய்வார். யார் சொன்னார்கள், இதைப் போய் நாம் பதிவு செய்கிறோமே என்றெல்லாம் பார்க்க மாட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது, கடைசி வரையில் தன்னுடைய வாழ்நாளில் எப்படியாவது இந்து மதத்தில் இருக்கும் பெரும்பாலான மக்கள், இழிஜாதி மக்கள் நிலையை ஒழிக்க வேண்டும். அதற்குக் கடைசி வரைக்கும் பாடுபடவேண்டும். அவர்களை அந்த ஜாதி இழிவில் இருந்து வெளியேற்ற வேண்டும். இந்து மதத்தில்தான் இது இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது, எல்லா அடிமைத்தனமும் நீங்கவேண்டும் என்பது போலவே, மக்கள் கூட்டத்தில் பாதி பெண்களாக இருக்கிறவர்களுக்கு, ‘கல்வி கொடு! வேலை கொடு! சொத்து கொடு’ என்றெல்லாம் எல்லா தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். ஆனால், உலகத்திலேயே (8.3.1970) இந்திய அரசிடம், இந்திராகாந்தியிடம் இணை அமைச்சராக இருந்த, குடும்ப நலத்துறை கட்டுப்பாட்டு அமைச்சர், டாக்டர் சந்திரசேகரிடம் ‘பெண்ணுக்கு எல்லா விடுதலையும் வேண்டும். எதை எடுத்தாலும் ஐம்பது விழுக்காடு கொடு!’ என்று சொன்ன முதல் தலைவரும், ஒரே தலைவரும் அவர்தான். சாவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால். எந்தத் தலைவர் எதைச் சொல்லியிருந்தாலும், இதை எந்தத் தலைவரும் சொல்லவில்லை. பெண்விடுதலையைப் பற்றி சிந்திப்பதில் ஈடு இணையற்றவர் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இதெல்லாம் பெரியாருடைய நல்ல பக்கங்கள். அவருடைய சிறந்த பக்கங்களைச் சொல்கிறீர்கள். இவை எல்லாம் அவருடைய கொள்கை, அந்த தன்மை சார்ந்தவை. அவருடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரத்யேக அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: நான் அவரிடம் ‘மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு எடுக்கவேண்டும்’ என்று சொன்னேன். ஏற்றுக்கொண்டார். அவர், மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு ஆரம்பித்தார். 1929-ல் ஆரம்பித்தார். இடையில் மறுபடியும் 1942-ல் ஆரம்பித்தார். 1949-ல் முடித்துவிட்டார். பிறகு, விட்டுவிட்டார். ‘மறுபடியும் ஆரம்பிக்கணும்!’ என்று சொன்னவன் நான் தான். 1964-ல் சொன்னேன். ‘அப்போ அந்தப் பொறுப்பை நீயே எடுத்து நடத்து!’ என்று சொல்லி, அறிக்கை விட்டு, மாணவர்களுக்கு சாப்பாட்டுக்கு வேண்டிய பண்டமெல்லாம் வாங்கிக் கொடுத்து, அதை ஒரு ஸ்டோர் ரூமில் வைத்து, அந்த சாவியை என்னிடம் கொடுத்துவிட்டார். ‘நீ நடத்து!’ என்று. முதன்முதலாக, அவர் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பு அதுதான். அதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால், அவர் வாழ்ந்த இடத்துக்கு ‘பெரியார் மாளிகை’ என்று பெயர். அது புத்தூரில் இருந்தது. இன்னொரு இல்லத்துக்கு ‘பெரியார் இல்லம்’ என்று பெயர். அது, தென்னூரில் இருக்கிறது. அது பெரியார் மாளிகையைவிட இரண்டு மடங்கு பெரியது. அதை நான் வாடகைக்கு எடுத்திருந்தேன். என்னுடைய சொந்த தொழில் டுட்டோரியல் கல்லூரி நடத்துவது. நிறைய மாணவர்கள் சேர்ந்தவுடன் எனக்கு இடம் போதவில்லை. அதை நான் வாடகைக்கே எடுத்திருந்தேன். நான் மேலே கிளாஸ் எடுத்துக்கொண்டிருப்பேன், நூறு பேருக்கு. பெரியார், கீழே வகுப்பு எடுத்துக்கொண்டிருப்பார், முப்பது பேருக்கு.  1964-ல் ஆரம்பித்த அந்த வகுப்புகள், அவர் சாகிற வரை தொடர்ந்தன. நானும் அவரும் மாகாணம் முழுக்கப் போய் வகுப்புகள் எடுப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல 1962 தேர்தல், 1967 தேர்தல். இரண்டு தேர்தல் பொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டார். எல்லாரையும் கூப்பிட்டு நான் சொல்கிறபடிதான் செய்யணும் என்று அறிக்கையும் விட்டார். ஏனென்றால், அவருக்கு என் மேல் அவ்வளவு நம்பிக்கை. தேர்தல் என்றால், கட்டுப்பாடாக வேலை செய்யவேண்டும். எதிரியிடம் விலை போய்விடக்கூடாது. தேர்தல்லயும் பணம் செலவு பண்ணிவிடக்கூடாது. நாங்கள் கெட்ட பெயர் வாங்கிவிடக்கூடாது. அந்தத் தேர்தலில் மிக அருமையாக வேலை செய்து, தேர்தல் முடிந்தவுடன், அந்தத் தேர்தலில் நின்ற அபேட்சகருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன் நான். அவன் போய் அய்யாவிடமே சொல்லிவிட்டான். ‘உங்க கட்சிக்காரன் ஒருத்தன் தான் வேலை செஞ்சான், ஒழுங்கா. மிச்சம் இருக்குற பணத்தைக் கொண்டுவந்து குடுத்தான்யா’ என்று. பெரியார் மிகவும் மனம் திறந்து பாராட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகுப்பு வேலையை ஒப்படைக்கிறபோது, ஒரு முன்னூறு தலைப்புகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் வரிசையாக எழுதி, அய்யாவிடம் கொண்டுபோய் காட்டினேன். அவர் ஒருமணி நேரம் பார்த்தார். ‘இதுலயே அடக்கிப்புடுவியா?’ என்று கேட்டார். அதற்குப் பிறகு நான் ஒரு மாதம் அவரிடம் போகவில்லை. உட்கார்ந்து, ஆயிரம் தலைப்புகளை யோசித்தேன். அதைக் கொண்டுபோய் காட்டினேன். இரண்டு, மூன்று மணி நேரம் படித்துப் பார்த்தார். ‘நல்லாருக்கு, நல்லாருக்கு. செய்!’ என்று சொன்னார். அப்போ நான் செயலாளர், தொகுப்பாளர். கோபால் பொருளாளர். அவர் கிட்ட இருந்து கேட்கிறார். ‘சந்தேகம் இருந்தா வந்து கேட்டுக்கறோம்யா!’ என்று. உடனே பெரியார் சொன்னார். ‘எல்லாம் அவருக்குத் தெரியும். பண்ணுவாரு. போங்க! செய்ங்க!’ என்று சொல்லிவிட்டார். அது அவர் என் பெயரில் வைத்திருந்த ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, 1973 செப்டம்பெரில் அவருக்கும் எனக்கும் ஒரு பிரச்னையைப் பற்றி ஒரு நீண்ட வாக்குவாதம். ‘நாம இந்து மதத்தைவிட்டு வெளியேறவேண்டும்’ என்பது அவருடைய கோரிக்கை. ‘நாம் வெளியேற முடியாது’ என்பது என் கருத்து. நான் கேட்டேன்: ‘அய்யா! வெளியேறணும்னு சொல்றீங்களே! வெளியேறிய பிறகு, உங்களுக்கு என்ன பெயர்?’ ‘பகுத்தறிவாளன்னு நான் வச்சுக்குவேன்’ என்றார் அவர். இப்படியே பேசிக்கொண்டோம் நாங்கள் இருவரும். ‘ஆனா, பகுத்தறிவாளன்னு சொன்னாக்கூட இந்து இல்லைன்னு யார் சொன்னா உங்களுக்கு?’ என்றேன் நான். ‘அப்படி இல்லியா?’ என்றார் அவர். ‘இல்லியே! பகுத்தறிவாளன்னு சொன்னாலும் அப்புறமும் இந்துதான்.’ என்றேன் நான். ‘அப்போ, நாத்திகன்னு சொல்லிட்டா?’ - பெரியார். ‘நீங்க நாத்திகன்னு சொல்லிட்டாலும், அப்பவும் நீங்கள் இந்துதான்.’ - இது நான். &lt;br /&gt;&lt;br /&gt;உடனே பெரியார், ‘நான் நாத்திகன்னு சொல்லி, கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியாவுல நோட்டிஃபை பண்ணிட்டா?’ என்றார். ‘அய்யா! நீங்க நெத்தியில ‘நாத்திகன்’ன்னு பச்சை குத்திக்கிட்டாலும், அப்போதும் இந்துவாகப் பிறந்த நீங்கள் இந்து மதத்தைவிட்டு மாறாத வரையில் நீங்கள் இந்துதான். அதை நீங்கள் மாற்றவே முடியாது. பெயர் என்னவேண்டுமானாலும் இருக்கலாம். அதைப்பற்றிக் கவலை இல்லை’ என்று சொன்னேன். ‘சட்டத்துல அப்படி இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘ஆமா’ என்று நான் பதில் சொன்னேன். ‘நீங்கள் சிலையை உடைத்தாலும் இந்துதான். பார்ப்பானை உதைச்சாலும் இந்துதான். அடிச்சாலும் இந்துதான். வாடா, போடான்னு சொன்னாலும் இந்துதான்.’ இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லவில்லை. உங்களுக்குச் சொல்கிறேன். பார்ப்பானை அடித்துவிடுகிறீர்கள். கோயில்ல ஏதோ ஒரு சாமியை உடைத்துவிடுகிறீர்கள். அதுக்கு வயலேஷன்னு பேரு. இருக்கிற உரிமைகளை மீறிவிட்டால்கூட, மீறிய பிறகும் நீங்கள் இந்துதான். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, உங்கள் அப்பா இருக்கிறார். நீங்கள் உங்கள் அப்பாவை மதிக்கவில்லை. அடிக்கிறீர்கள், உதைக்கிறீர்கள், திட்டுகிறீர்கள். அப்பாவை மீறி நடக்கிறீர்கள். அப்போதும் மகன் இல்லை என்று ஆகிவிடுமா? மகன், மகன் தானே. ‘என்னை திட்டுறான், அடிக்கிறான். உதைக்கிறான். குடிக்கிறான். அவனுக்கு சொத்து குடுக்க முடியாது’ என்று சொல்ல முடியுமா? முடியாது. கொடுத்துத்தான் ஆகவேண்டும். அவன் என்னவாக இருந்தாலும் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆகையால், ஒன்ஸ் பார்ன் எ ஹிந்து, யு டை ஆஸ் எ ஹிந்து. வாட் எவர் யு கால் யுவர் செல்ஃப். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பெரியார் கேட்டார்: ‘முஸ்லீமா மாறிட்டா?’ நான் உடனே சொன்னேன்: ‘நீங்க 1924-லருந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க. எத்தனைபேரு மாறினான்? ஏன் மாறலை? அது இயற்கை இல்லை. செயற்கை. பொறந்த மதத்தைவிட்டு எவனும் போக மாட்டான்யா!’ என்று சொன்னேன்.  உடனே அவர், ‘கிறித்தவனா மாறிட்டா?’ என்று கேட்டார். நான் சொன்னேன்: ‘நம்ம ஊர்லல்லாம் பாப்பார கிறித்தவன், ரெட்டியார் கிறித்தவன், வெள்ளாளா கிறித்தவன், படையாச்சி கிறித்தவன்னு நிறையா பேரு இருக்காங்களே!’ எங்க ஊர்ல ஒரு தொகுதியில படையாச்சி கிறித்தவன் தேர்தல்ல நின்னாதான் ஜெயிக்க முடியும். அவ்வளவு கிறித்தவன் இருக்கான். அவங்களல்லாம் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால கிறித்தவர்களா மாறினவங்க. அதனால, ‘இங்க எல்லாவித ஜாதியிலயும் கிறித்தவங்க இருக்காங்கய்யா!’ என்று சொன்னேன். ‘ஆமாம்ப்பா. இப்பதான்ப்பா புரியுது’ என்று சொல்லிவிட்டு, என்ன சொன்னார் என்றால், ‘இவ்வளவையும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் பூரா சொல்லிடணும்’ என்றார். அதுக்காக ஒரு பயணம். நாங்கள் இரண்டு பேர் மட்டும் போகிற மாதிரி, பேசுகிற மாதிரி. அந்தப் பயணம், 1973, நவம்பர் 18-ல் இருந்து, 28 வரைக்கும் நடந்தது. பெரியார் இறப்பதற்கு நாற்பது நாட்களுக்கு முன்னால், நாங்கள் இரண்டுபேர் மட்டுமே போகிற பயணம். அப்போது எல்லோரும் புறக்கணித்துவிட்டார்கள், அந்தப் பயணத்தை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பயணத்தில் அவருக்கு உடம்பு மிகவும் கெட்டுப் போனது. ஏனென்றால், கன்னியாகுமரியில் கூட்டம். அதற்கு அடுத்து திருச்சியில் கூட்டம். அந்த கடைசி பயணம் முழுக்க பெரியார் அம்பாசிடர் காரில் வந்தார். அது அவருடைய உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. வேனில், இரண்டடி அகலமுள்ள, அவர் மட்டும் படுத்துக்கொள்வதற்கு தோதான படுக்கை இருந்தது. அவர் மட்டும் படுத்துக்கொள்வார். நாங்கள் எல்லோரும் பின்னால் இருக்கும் சீட்டில் படுத்துக்கொள்வோம். மணியம்மாள் பின்னால் இருக்கும் சீட்டில் படுத்துக்கொள்வார். நாங்கள் எதிர்சீட்டில் படுத்துக்கொள்வோம். அப்போது, அவர் அந்த வேனில் பயணம் செய்வதை விடவேண்டி நிர்பந்திக்கப்பட்டார். அம்பாசிடரில் பயணம் போனதில், அவருக்கு பதினோரு வயதிலிருந்து குடல் இறக்கம், அது நன்கு முற்றிவிட்டது. அது ரொம்பக் கொடுமையானது. அவர் என்னை நம்பிப் பல செய்திகளை எல்லாம் ஒப்படைத்தார். நான் சொன்ன பல கருத்துகளை, ஒரு தொண்டன் சொல்கிறானே என்று பார்க்காமல், ஏற்றுக் கொண்டார். அது அவருடைய பெருந்தன்மை. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பெரியாரின் நாத்திகவாதம் குறித்து அறிந்த அளவுக்கு அவரது அரசியல், சமூக புரட்சிகர சிந்தனைகள் அறியப்படவில்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு ஏற்பாடு என்று நீங்கள் நினைக்கிறீகளா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: இதில் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. முதல் பக்கத்தில், அவருடைய தொண்டர்களே, ‘பெரியார் இயக்கம் அரசியல் இயக்கம் அல்ல’ என்று தவறுதலாக நினைக்கிறார்கள். இது முதல் பிழை. அவர் வாழ்ந்த போதும், அவர் வாழ்வுக்குப் பிறகும் நம் இயக்கம் ஓர் அரசியல் இயக்கம் அல்ல என்று நினைக்கிறார்கள். இது பிழை என்பதுகூட, ஒரு மூடத்தனம். இதை எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், ‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என்று 1932-ல் கேட்டார். 1956-ல் ‘தமிழ்நாடு தமிழர்களுக்கே!’ என்றார். முழுச்சுதந்திர தமிழ்நாடு. தமிழ்நாடு வாங்குவது எதற்கு? தமிழ்நாடு வாங்கி, நான் தனியாக என் நாட்டை ஆளவேண்டும் என்பது அவசியம் இல்லையா? அதைப் புரிந்துகொள்கிற திராணி, 2010-லும் பெரியார் தொண்டர்களுக்கு இல்லை. இது மிக வேதனையான, வருத்தப்படத்தக்க செய்தி. அவருடைய மறுபக்கத்தைப் பார்த்தால், அவர் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை சாடினார். சமூகத்தில் பெரிய ஜாதி. எல்லா உத்தியோகத்திலும் நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு அவர்கள். நமக்கு பியூன் உத்தியோகம், அட்டெண்டர் உத்தியோகம், கிளார்க் உத்தியோகம். தேர்ட் கிரேடு உத்தியோகம்தான். அவர்களுக்கு செகண்ட் கிரேடு, ஃபர்ஸ்ட் கிரேடு. எல்லாத் துறையிலும். நீதி, நிர்வாகம், பட்டாளம் வரைக்கும். இந்த பார்ப்பான ஆதிக்கத்தை அவர் எதிர்க்கிறார் என்பதை விட்டுவிட்டு, பார்ப்பானை எதிர்க்கிறார், பிராமண துவேஷி என்கிற பிரசாரத்தை தேசியவாதிகள், , பொதுவுடைமைவாதிகள், பார்ப்பன பத்திரிகையாளர்கள் இந்த மூன்றுதரப்பாரும் கட்டுப்பாடாக பரப்பினார்கள். ஏனென்றால், இந்த மூன்று தரப்பிலும் தலைமை பார்ப்பான் தான். இது ஊடகங்களும், தேசியக் கட்சியில் இருந்த பார்ப்பனர்களும் செய்த விஷமப் பிரசாரம், பொய்ப் பிரச்சாரம். அவர் நாத்திகர் என்பது வேறு. நாத்திகர்தான். அதற்கு பதிலாக, அவர் பார்ப்பன எதிரி, பார்ப்பன வெறுப்பாளர், பிராமண துவேஷி என்பது பொய். பெரியார் பிராமண ஆதிக்க ஒழிப்பாளர். அதைக் கட்டாயம் ஒழிக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக்காரன், ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு, பத்தாயிரம் வெள்ளைக்காரர்கள் வந்து, முப்பத்தாறுகோடி மக்களை ஆண்டால் அது அடிமைத்தனம் இல்லையா? அப்போ, நாங்கள் ஆறரை கோடி தமிழர்கள் இருக்கிறோம். இருபது லட்சம் பார்ப்பான் இருந்துகொண்டு ‘நான் ஒசந்த ஜாதி! நான் தான் ஒசந்த ஜாதி’ என்று சொன்னால்...? இதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், யார் என்ன செய்வது? அகம்பாவத்தைவிடாதது முதலில் பார்ப்பான் தவறு. தமிழன் என்பவன் புரிந்துகொள்ளவில்லை. அவன் பார்ப்பனீயத்துக்கு அடிமை ஆகிவிட்டான். அது தமிழன் தப்பு. தப்பாக இருக்கிறவன், தப்பாகப் பார்க்கிறான். தப்பாக யோசிக்கிறான்.  &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: திராவிட நாடு கோரிக்கை ஒரு கட்டத்தில் மாநில சுயாட்சியாக சுருங்கி, இப்போது முற்றிலுமாக மறைந்துவிட்டது. அது கைவிடப்பட்டது என்றுகூடச் சொல்லலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: மன்னிக்கணும். அண்ணா, ‘கைவிடப்பட்டது’ என்றுதான் சொன்னார். அவர் ராஜ்ஜிய சபாவிலேயே, ‘திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டது! ஆனால், பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்று சொன்னார். பிறகு, கட்சிக்கு ஒரு கொள்கை வேண்டும், இல்லையா? அதை வகுக்கிறபோதுதான், ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில்கூட்டாட்சி.’  அது அவர்கள் கட்சி கொடுத்த அரசியல் நோக்கம். ‘கூடியிருப்போம். ஆனால், நாம் சுயாட்சியோடு இயங்கவேண்டும்.’ இந்தக் கோரிக்கையை வைத்த பிறகு, இப்போது இருக்கிற சுதந்திரத்தை இழந்துகொண்டிருக்கிறோம்.  உதாரணமாக, 1977 வரைக்கும் கல்வி முழுக்க முழுக்க மாகாண பட்டியலில் இருந்தது. 1977-ல் இருந்து மைய, பொதுப் பட்டியலுக்குப் போய்விட்டது. பொதுப்பட்டியல் என்றால், மாமியாரும் பேசுவாள், மருமகளும் பேசுவாள். அது எப்படி சரியாக இருக்க முடியும்? மாமியார் மட்டும் பேசினால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இரண்டு பேரும் பேசுவது இருக்கும். அதிகாரத்தை முழுவதுமாகப் பிடுங்கிவிட்டார்கள். அது மிகப்பெரிய கொடுமை. மாநில சுயாட்சியை நாம் கொஞ்சம் இழந்திருக்கிறோம், இந்தக் கோரிக்கையை வைத்த பிறகு. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, இந்தி வந்துவிட்டது. ஏறக்குறைய ஆட்சி மொழியாக  வந்துவிட்டது. எங்கள் கட்சியின் கொள்கையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கட்டாயமாக, இந்தி மொழி ஆட்சி மொழியாக இருக்கக்கூடாது. அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட எல்லா மொழிகளும் ஒரே நேரத்தில் ஆட்சிமொழியாக்கப் படவேண்டும். தமிழ் மட்டும் அல்ல. நம் மொழி சிறந்தது என்பதால், நம் மொழியை மட்டும் ஆட்சி மொழியாகக் கேட்பது பொருத்தமற்ற கோரிக்கை. அதே நேரத்தில், தமிழும், தமிழைப் போன்ற மற்ற எல்லா ஏற்புடைய மொழிகளும் உடனடியாக இந்திய ஆட்சி மொழியின் மையமாக இருக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது  பார்லிமெண்ட்டில், மு.க. அழகிரி தமிழில் பேசவேண்டும் என்றால், தாராளமாகப் பேசவேண்டும்.  இதில் என்ன இடைஞ்சல்? இப்போது கூகிள் என்ன செய்கிறான்? உலகத்தையே ரெவல்யூஷனரி பண்ணிவிட்டான். எல்லா மொழியிலயும் அதுல பண்ணலாம். இல்லையா? அவனை சைனாகாரனாலேயே ஒண்ணும் பண்ண முடியாது என்றால், அந்த அளவுக்கு ஜெயித்துவிட்டான். எந்த மொழியில் மாற்றவேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம். இதையும் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இந்த ஊடகம் பெருகிவிட்ட பின்னால், கணினி பெருகிவிட்ட பின்னால், ஆங்கிலத்தில் இருந்தால், எந்த மொழியிலும் மாற்றலாம். இந்த தன்மை வந்துவிட்ட பிறகு, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்றலாம். தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மாற்றலாம். இப்படி வந்தபிறகு இப்படி வைத்திருப்பதே தவறு முதலில். ஆந்திராவில் ரயில் ஓடுகிறது. போஸ்ட் ஆபீஸ் இருக்கிறது. வங்கி இருக்கிறது. இன்கம்டாக்ஸ் இருக்கிறது. ஏ.ஜி. ஆபீஸ் இருக்கிறது. எல்லாமே தெலுங்கில்தான் எழுதப்பட்டிருக்கும். இவர்கள்? எங்க ஊரில் தமிழில் எழுதவேண்டும். கேரளத்தில் மலையாளத்தில் எழுதவேண்டும். கர்நாடகாவில், கன்னடத்தில் எழுதவேண்டும். எங்களுக்கு ஆட்சேபணை கிடையாது. அவரவர்கள் ஊரில், அவரவர் மொழிதான் இருக்கவேண்டும். பார்லிமெண்ட்டில் அவரவரின் தாய்மொழியில் பேசவேண்டும். ஃபோன் வைத்திருந்தால், இங்கிலீஷில் கேட்கவேண்டும். எல்லோரையும். ஏற்பாடு செய்! எங்கள்  வீட்டுப் பணத்தில் அல்லவா நீ செய்கிறாய் அரசாங்கம்? உனக்கென்ன நோப்பாளம்? எங்க மொழியைக் கேட்டு, மொழிபெயர்த்து சொல்லு எல்லோருக்கும். அடுத்த ஆண்டில் என் பணி அதுதான். தலையங்கத்தில் அறிவித்துவிட்டேன். தேசிய மொழியாக ஒரு மொழி தேவை இல்லை. இந்தியாவில் இந்தி தேசிய மொழி என்பது தப்பு.  ஏனென்றால், எவ்வளவு அதிக எண்ணைக்கை உள்ளவர்கள் பேசுகிற மொழியாக இருந்தாலும், அது அவர்களுக்குத்தான் படிப்பிலும், நிர்வாகத் துறையிலும், நீதித் துறையிலும், பார்லிமெண்ட்டிலும், சட்டமன்றத்திலும் ஆதிக்கத்தை உண்டு பண்ணும். நாளாவட்டத்தில், எல்லோரும் அவர்களுக்கு அடங்கித்தான் இருக்க முடியும். அதில்தான் கொண்டுபோய் முடியும் அது. &lt;br /&gt;&lt;br /&gt;இதை முதலில் புரிந்துகொண்டது லெனின் தான். அவர் 1905-ல் பேச ஆரம்பித்து, 1907-ல் தோற்றுப் போய்விட்டார். அப்போது அது குறித்து ஆராய்ச்சியில் அவர் முதலில் புரிந்துகொண்டது, ‘நம் தாய்மொழி ரஷ்யன். நாம நம்பளை எல்லாம் அண்ணன், தம்பி என்று சொல்கிறோம். எவன் நம்புவான்?’ அப்படியானால், என் மொழிக்கு என்ன உரிமை உண்டோ, அந்த உரிமை உனக்கும் உண்டு. நீ உன் மொழியிலேயே பார்லிமெண்ட்டில் பேசலாம். நீ உன் மொழியிலேயே கடிதங்கள் எழுதலாம். இப்படி உறுதிமொழி கொடுத்தார்.  அதனால், ‘ஆல் அப்பரஸ்டு நேஷன்ஸ் யுனைட்!’ என்று கோரிக்கை வைத்தார். ‘வேர்ல்டு ஒர்க்கர்ச் யுனைட். ஒர்க்கர்ஸ் ஆஃப் ஆல் நேஷன்ஸ் யுனைட். உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள். அதற்குப் பிறகு அவர் கொடுத்தது, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களே ஒன்று சேருங்கள்! அந்த தேசிய இனத்திற்கு என்ன அடையாளம்? மொழி. என்னை நம்பு. உன் மொழியில் பேசலாம். உன் மொழியில் படிக்கலாம். உன் மொழியில் நீதிமன்றம் நடக்கும். கல்லூரிகள் நடக்கும். நிர்வாகம் நடக்கும். என்று சொன்னவுடன், எல்லோரும் நம்பிவிட்டார்கள். அடுத்து, நாம பொட்டிக்கடைக்காரனையோ, இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் காரனையோ நாம் குலாக்குகள் என்று சொல்லிவிடக்கூடாது. அவர்களுக்கு ‘பெட்டி பூர்ஷுவாக்கள்’ என்று பெயர். இது ரொம்பத் தப்பு, அவன் வயித்துக்கு சம்பாதிக்கிற அளவுக்குத்தான் வச்சிருக்கான். அதனால், அவன் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறான். தொழிலாளர்களில் நூற்றுக்கு நான்குபேர்கூட கிடையாது. அதனால், ‘ஆல் ஸ்மால் பெர்சன்ஸ், அண்ட் டிரேடர்ஸ் யுனைட்!’ என்று சொன்னார். அப்போதான் ஜெயிச்சுது. சுலபமா ஜெயிச்சுட்டார். அன்றைக்கு உலக சூழலும் அவருக்கு ஆதரவாக இருந்தது. அன்றைக்கு உலகத்தில் அனுபவரீதியாக, தன்னுடைய பிழையைக் கண்டு திருத்திக்கொண்ட முதல் புரட்சித் தலைவன் லெனின் தான். அதற்கு ஐந்தாண்டுகள் ஆனது. இடையில் தோற்றார். இறுதியில் ஜெயித்தார். அப்படி. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: ‘குறள் மலர்’, ‘குறள் முரசு’, ‘சிந்தனையாளன்’ என்று பல பத்திரிகைகளை நடத்தியிருக்கிறீர்கள்.  உங்களுடைய பத்திரிகை அனுபவங்கள்  பற்றிச் சொல்லுங்களேன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: தமிழ்மொழியில் பத்திரிகைகள் வந்ததெல்லாம் ஏறக்குறைய 1920-க்கு பிற்பாடுதான். 1950 வரைக்கும் எந்தக் கட்சிக்காரர்கள், எந்தக் கொள்கைக்காரர்கள் நடத்தினாலும் அவன் தியாகிதான். நான் மட்டுமில்லை. ஏனென்றால், அன்றைக்கு எழுத்தறிவு நூற்றுக்கு ஏழு விழுக்காடு. அதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அந்த ஏழுபேரில் இரண்டுபேர் பார்ப்பான். இரண்டுபேர் கிறிஸ்தவன். ஒருவன் துலுக்கன். இரண்டுபேர் வெள்ளாளன். சூத்திரனும் ஆதிதிராவிடனும் படிக்கவே கிடையாது. அப்போ வாங்குவது யார்? இதை யாருமே ஆராயவில்லை.  வாங்குவதற்கு ஆள்? அப்போது, லட்சியப்பிடிப்போடு ஒரு பத்திரிகையை ஆரம்பித்து, வாங்குகிறானோ, இல்லையோ, லட்சியத்திப் பரப்பவேண்டும். மத வாதிகள், தேசியவாதிகள், பொதுவுடைமைவாதிகள், சுயமரியாதைக்காரர்கள் எல்லோருமே தூய உள்ளத்தோடு பத்திரிகை தொடங்கி அண்டா, குண்டா இழந்தார்கள். பலபேர் சொத்தை இழந்தார்கள். 1957-ல் நான் வீட்டில் இருந்த நகை, தாலி உட்பட விற்றுவிட்டேன். பத்துபவுன் நகையை விற்றுவிட்டு, ஜெயிலுக்குப் போவதற்கு முன், தாலியை நசுக்கி, விற்று, வீட்டில் காசைக்கொடுத்துவிட்டுத்தான் போனேன். இதற்கு வேறு வழியில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நான் மட்டுமில்லை. கம்யூனிஸ்ட் காரர்களும் அப்படித்தான். காங்கிரஸ்காரர்களும் அப்படித்தான். ஆதிதிராவிடப் பத்திரிகையாளர்களும் அப்படித்தான். இஸ்லாமிய பத்திரிகையாளர்களும் அப்படித்தான். கிறிஸ்தவர்களுக்குமட்டும் சில விதி விலக்குகல் உனடு. அதனால எல்லாருமே தியாகிகள் தான். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: 1974-க்கு அப்புறம்... உங்களுக்கு கொஞ்சம் மாற்றம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: இல்லை, இல்லை. 1974-க்குப் பிறகு கொஞ்சம் அரசியலில் ஈடுபடுபவர்கலுக்குப் புரிகிற மாதிரி எழுதினேன். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அப்போ உங்களுக்கு பொருளாதார சிக்கல் எப்படி இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: தீரலை. 1993 வரைக்கும் பொருளாதார சிக்கல் மிகக் கடுமையாக இருந்தது. மூன்று வட்டிக்கெல்லாம் பணம் வாங்கியிருந்தேன். பிறகு, ‘பொங்கல் மலர்’ என்று ஒன்றைப் போட்டோம். 1990-க்கு பிற்பாடு. அதில் ஏதாவது பணம் கிடைத்தால், நான் வாங்கிய கடனைக் கொடுத்துவிடுவேன். பிறகு மீண்டும் கடன் வாங்கிக் கொள்வேன். 1993 வரைக்கும் இந்த நிலைமைதான். அதன் பிறகு, இப்படிக் வட்டிக்கு வாங்குவதை விட்டுவிட்டு, கை மாற்றாக வாங்க ஆரம்பித்தேன். பிறகு, அதையும் விட்டுவிட்டு, என்னுடைய பத்திரிகைக்கு சந்தா, ஆயுள் சந்தா, நன்கொடை என்று அப்படி இப்படி வசூல் செய்து கொஞ்சம் கடன் இல்லாமல் நடத்தினேன். இப்போதும் நட்டத்தில்தான் இருக்கிறோம்.  இந்த ஆண்டு எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்டம். இது எல்லாருக்கும் உள்ளது. நாங்கள்மட்டும்தான் பெரிய தியாகி என்று சொல்ல முடியாது. சிறு பத்திரிகைகள் நடத்தற எல்லாருமே கஷ்டப்படுறவங்கதான். அதுல கண்ணு, மூக்கு வச்சுப் பேசுறது நியாயம் ஆகாது. சில ஊதாரிப் பத்திரிகைகள் இருக்கலாம். பிளாக் மெயில் பண்ற பத்திரிகை மாதிரி. மற்ற பத்திரிகைகள் எல்லாமே, மதவாதி, தேசியவாதி யாரா இருந்தாலும் கண்டிப்பா கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். அது தவிர்க்க முடியாது. அதற்கு ஒரு காரணம் இருக்கு. இந்த சமூகம், ஒரு பொறுப்பில்லாத சமூகம். ‘இந்தப் பத்திரிகை பொறுப்பா பாடுபடுறாங்களே, நாம கை தூக்கிவிடுவோமே!’ அப்படிங்கற உணர்வு, பார்ப்பனர் அல்லாதவர்களிடம் மிகமிகக் குறைவு. பார்ப்பனர்களைப் பார்த்தால், ஒரே பார்ப்பனருக்கு ஆனந்தவிகடன், அவள்விகடன், ஜூனியர் விகடன், சுட்டி விகடன், நாணயம் விகடன் அத்தனையும் வாங்கறான். ஹிந்து வாங்கறான். ஃபிரண்ட்லைன் வாங்கறான். அவன் எக்ஸ்பிரஸ் வாங்கறதில்லை. தினமணி வாங்கறதில்லை. டெக்கான் கிரானிக்கல் வாங்கறதில்லை. நல்லா கவனிக்கணும். சூத்திரன் நடத்தற பேப்பர் எதையும் வாங்க மாட்டான் அவன். பார்ப்பான் நடத்தற, குறிப்பா ஆனந்தவிகடன், கல்கி குழுமம் நடத்தற அத்தனை பத்திரிகைகளையும் குழந்தை குட்டியில இருந்து எல்லாரும் படிப்பார்கள். அந்த இனப்பற்று அவர்களுக்கு உண்டு. தமிழர்களுக்கு உண்மையிலேயே அந்த இனப்பற்று கிடையாது. இனப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப் பற்று தமிழனுக்கு ரொம்பக் குறைவு. இல்லையென்றால், குறைந்தது தமிழ்நாட்டில் ஹிந்து மாதிரி ஒரு பார்ப்பான் இல்லாதவன் ஒரு வருமானம் வரக்கூடிய பத்திரிகை நடத்தணுமே!&lt;br /&gt;&lt;br /&gt;1929-ல் ஆனந்தவிகடனில் ஒரு செய்தி வெளியானது. அப்போ பனகல் ராஜா இறந்து போனார். அவர் மேல் உள்ள வெறுப்பைக் காட்டுவதற்கு, கற்பனையாக ஒரு கல்யாணப் பத்திரிகையை வெளியிடுகிறார்கள். அவர்களாக எழுதி. அதில், அழைக்கிறவர்கள் என்று போடுகிற இடத்தில், ‘பனங்கள் ராயர்’  என்று போட்டார்கள். அவர் இறந்துபோய்விட்டார். அந்த பிரிண்ட்டை இன்னமும் நான் வைத்திருக்கிறேன். எவ்வளவு வெறுப்பு இருக்கும் பாருங்கள்! பனகல் ராஜா சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பெரிய ஜமீன்தார். நாணயமானவர். யோக்கியமானவர். பார்ப்பான் அட்டகாசத்தை அடக்குவதில் முதல் ஆள். அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, அவர் பட்ட கடனுக்காக அவருடைய சொத்து ஏலம் போகிறது. அந்த ஏல நோட்டிஸை நான் கெஜட்டில் படித்திருக்கிறேன். அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தட்டிக் கழித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பனகல் ராஜா, தியாகராயர் இவங்கள்லாம் தங்களுடைய சொத்துகளை கட்சிக்காக அழித்தார்கள். அவ்வளவு பெரிய மகான்கள். இந்த வரலாறு, தமிழ்நாட்ல இருக்கிற, தமிழனாக இருக்கிற ஐ.ஏ.எஸ். படித்தவனுக்குத் தெரியுமா? வக்கீலுக்குத் தெரியுமா? டாக்டருக்குத் தெரியுமா? பேராசிரியருக்குத் தெரியுமா? அது அவன் குறையா? இல்லை. கல்வித் திட்டத்தின் குறை. பன்னிரெண்டாவதில் சொல்லித் தரவேண்டும் இல்லையா? பனகல் ராஜா என்றால் இப்படி. தியாகராயர் என்றால் இப்படி. என்று சொல்லித் தரவேண்டும். தியாகராயர் வீட்டை ஒவ்வொருவரும் போய்ப் பார்க்க வேண்டும். அவருடைய வீடு தண்டையார்பேட்டையில் இருக்கிறது. இரண்டு பக்கமும் வீடு. நடுவில் பாலம். அந்த வீட்டையும் இந்த வீட்டையும் இணைப்பதற்கு ரோட்டுக்கு மேல் பாலம். வெள்ளைக்கார கவர்னர், அவரை அங்கே போய்த்தான் பார்ப்பான். அவ்வளவு பெரிய செல்வந்தர் அவர். இன்று வரைக்கும் அந்தப் பாலம் அப்படியே இருக்கிறது. அவரெல்லாம் ஆங்கிலத்தில் பேசினால், அப்படியே கேட்டு, கேட்டு பசியே அடங்கிடும். அப்படி இருக்கும் அவருடைய இங்கிலீஷ் ஸ்டைல். நான் தியாகராயரைப் பார்த்ததில்லை. அவரிடம் பழகினவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர் மேதை.  காங்கிரஸிலும் அப்படித்தான். பல மேதைகள் இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: உங்களுடைய மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைமுத்து: நாங்கள் அடிப்படையில் மார்க்சியவாதிகள். உலகத்தின் நிகழ்வுகளையும், சம்பவங்களையும், சமூக அமைப்பையும் மார்க்சிய பார்வை கொண்டு பார்க்கவில்லை என்றால், எந்த ஒரு மனிதனும் உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. மார்க்ஸ், அவர் வாய் மொழியாகவே, ‘ஒரு நாட்டில் சமதர்ம புரட்சி வரவேண்டும் என்று யார் பாடுபடுகிறானோ, அவன் முதலில், அவன் பிறந்த நாட்டில் இருக்கிற சமூக அமைப்பின் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ச்சி செய்யவேண்டும்.’ என்று சொல்கிறார். நிபந்தனையே அதுதான். ‘சமதர்மம் என்பது, ஒரு ரெடிமேடு மருந்து அல்ல.’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அதைப் போலவே, இந்தியாவில், ஓர் இந்து என்பவன், ஒரு பசுமாட்டைத்தான் பெரிதாக நினைப்பான். ஒரு மனிதனை பெரிதாக நினைக்க மாட்டான். ஏனென்றால், மனிதன் என்பவன் தீண்டத்தகாதவனாக, தொடப்படாதவனாக இருக்கிறான். கீழ்ச்சாதிக்காரனாக இருக்கிறான். பசுமாடு, தெய்வாம்சம் பொருந்தியது. பிராமணத்துவம் பொருந்தியது. என்று நினைக்கிறான். இதையெல்லாம் திராவிட இயக்கத்தவர்கள் படிக்கவில்லை. இது முதல் குற்றம். இரண்டாவது, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் இதை மறைத்தேவிட்டார்கள். அந்த மார்க்சியம் இந்தியாவில் வெல்ல வேண்டும் என்பது என் நோக்கம். அதற்கு சரியான பாதை பெரியார் பாதை. சரியான பாதை அம்பேத்கார் பாதை. இந்த இரண்டுபேரும்தான் இந்திய சமூகத்தைப் படித்தவர்கள். அதற்கேற்ற பாதையை வகுத்தவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றாகச் சேர்த்தவர்கள். அதனால்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது, நடுவில் ஏற்பட்ட ஒரு நிலைப்பாடு கிடையாது. 81-ல் இருந்து 89 வரைக்கும் கடுமையாக விவாதித்தோம், கட்சிக்குள். எங்கள் கட்சியின் பெயர், ‘பெரியார் சம உரிமைக் கழகம். அதை நான் சேலத்தில்குறிப்பிட்டேன். ‘நாம் மார்க்ஸிஸ்டுகள். பேரை மாற்றவேண்டும்’ என்றேன். அதற்கு ஒரு கமிட்டி போட்டோம். 1988, மார்ச்சில், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் விவாதித்தபிறகு ஏற்றுக்கொண்டார்கள். எதையும் நாங்கள் துல்லியமாகப் புரிந்து செய்கிறோம்.எதையும் புரியாமல், கண்ணை மூடிக்கொண்டு செய்துவிடவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;(மே, 2010 ”அம்ருதா’ இதழில் வெளியான நேர்காணல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-6573154640692988778?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/6573154640692988778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=6573154640692988778' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/6573154640692988778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/6573154640692988778'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2010/06/blog-post.html' title='வே. ஆனைமுத்து - விரிவான நேர்காணல்'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_GfQQw3CCBSA/TAYge3hRGrI/AAAAAAAAACw/2bByLaKW-qI/s72-c/DSC_0826.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-5589538812004257446</id><published>2010-03-07T23:20:00.000-08:00</published><updated>2010-03-07T23:21:03.916-08:00</updated><title type='text'>மகளிர் தினக் கவிதை</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;அவள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கிளிகளைக் கூட்டமாய்ப் பார்த்து&lt;br /&gt;வெகு நாளாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவை கதறியபடி&lt;br /&gt;சீட்டுகளைப் பொறுக்கமட்டும்&lt;br /&gt;வெளியே வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கிளிகளுக்கு ஒரு கூண்டு&lt;br /&gt;அவளுக்கு இரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு - அலுவலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் இறங்கினால்&lt;br /&gt;மார்பகங்களை வெறிக்கும்&lt;br /&gt;ஆண்களின் பார்வை -&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்துப் பயணத்தில்&lt;br /&gt;வியர்வைக் கசகசப்போடு&lt;br /&gt;அசிங்கமான உரசல்-&lt;br /&gt;&lt;br /&gt;இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசும் &lt;br /&gt;வயதான சூப்பர்வைசரின் நாக்கு -&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தைப் பார்க்காமல்&lt;br /&gt;எங்கெங்கோ அலைபாயும்&lt;br /&gt;மேலாளரின் கண்கள் -&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி...&lt;br /&gt;அவளைக் காமப்பண்டமாய்&lt;br /&gt;உணரவைத்துக் குறுக வைக்கும்&lt;br /&gt;அசிங்கத் தொந்தரவுகள்&lt;br /&gt;அதிகம் இல்லை வீட்டில். &lt;br /&gt;&lt;br /&gt;எட்டுவீடுகள் கொண்ட&lt;br /&gt;தொகுப்புக் குடியிருப்பில்&lt;br /&gt;பொதுக் கழிவறையும்&lt;br /&gt;பொதுக் குளியலறையும்&lt;br /&gt;பெருந்தொல்லை அவளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;காக்காய் குளியலைக்கூட&lt;br /&gt;நிறுத்தி நிதானமாகச் &lt;br /&gt;செய்ய முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் செல்லும்&lt;br /&gt;அவசரத்திலும்&lt;br /&gt;குளியலறைக் கதவுக்கு வெளியே&lt;br /&gt;காத்திருக்கும் ஆண்களின்&lt;br /&gt;எக்ஸ்ரே பார்வை&lt;br /&gt;அவளை தகித்தபடிதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கழிவறைக்கு வெளியேயிருந்து&lt;br /&gt;‘சுசீலா! இன்னுமா முடியலை?’&lt;br /&gt;குரல் கேட்கும்போதெல்லாம்&lt;br /&gt;புழுவாய் உணர்வாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும்&lt;br /&gt;ஆடை மாற்றும் தருணங்களில்&lt;br /&gt;ப்ளஸ்டூ படிக்கும் தம்பியையும்&lt;br /&gt;ஆஸ்துமா வந்த அப்பாவையும்&lt;br /&gt;வெளியே அனுப்பி&lt;br /&gt;கதவைச் சாத்தவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றை அறைதான்&lt;br /&gt;அவளையும் சேர்த்து&lt;br /&gt;நான்குபேருக்கான முழுவீடு. &lt;br /&gt;&lt;br /&gt;இரவில் - அடுத்த வீட்டுத் &lt;br /&gt;தொலைக்காட்சிப் பெட்டியின்&lt;br /&gt;இரைச்சலைத் தாங்கியபடி&lt;br /&gt;சுவரோடு ஒட்டிக்கொண்டு &lt;br /&gt;அவள் உறங்கும்போது&lt;br /&gt;கனவில் வருபவர்கள்&lt;br /&gt;ராஜகுமாரர்கள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சுகமான ஆற்றுநீர்க்&lt;br /&gt;குளியல் -&lt;br /&gt;வேப்பம் பூக்கள்&lt;br /&gt;உதிர்ந்து கிடக்க&lt;br /&gt;சுற்றிலும் மரங்கள் படர்ந்த வீடு -&lt;br /&gt;சுதந்தரமாய் சுற்றிவர&lt;br /&gt;சின்னதாய் ஒரு&lt;br /&gt;மாந்தோப்பு -&lt;br /&gt;இனிய தோழிகள் -&lt;br /&gt;கண்களை மட்டும்&lt;br /&gt;நேருக்கு நேராய்ப்&lt;br /&gt;பார்த்துப் பேசும்&lt;br /&gt;கண்ணியமான ஆண்மக்கள் -&lt;br /&gt;இவைதான் நித்திய கனவு&lt;br /&gt;எப்போதும். &lt;br /&gt;&lt;br /&gt;அவள் ஒருத்தியில்லை&lt;br /&gt;ஆயிரம் லட்சம் கோடியாய்&lt;br /&gt;வசிக்கிறாள்&lt;br /&gt;இந்திய நகரங்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/743742264340340758-5589538812004257446?l=balusathya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balusathya.blogspot.com/feeds/5589538812004257446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=743742264340340758&amp;postID=5589538812004257446' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/5589538812004257446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/743742264340340758/posts/default/5589538812004257446'/><link rel='alternate' type='text/html' href='http://balusathya.blogspot.com/2010/03/blog-post.html' title='மகளிர் தினக் கவிதை'/><author><name>பாலு சத்யா</name><uri>http://www.blogger.com/profile/08216472180523529081</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-743742264340340758.post-1212856713319490953</id><published>2009-08-21T03:05:00.000-07:00</published><updated>2009-08-21T03:31:00.088-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>அருணா சாய்ராம் நேர்காணல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_GfQQw3CCBSA/So53RqG175I/AAAAAAAAACk/MUe9_PviLTM/s1600-h/IMG27.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_GfQQw3CCBSA/So53RqG175I/AAAAAAAAACk/MUe9_PviLTM/s320/IMG27.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5372362550744051602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;‘நான் இந்த அளவுக்கு உயரக் காரணமானவர்கள் ரசிகர்கள்’&lt;br /&gt;&lt;br /&gt;- அருணா சாய்ராம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது பாரீஸில் இருக்கும் ‘லெ தியேட்டர் டெ ல  வில்லி’ (Le Theatre De La Ville) அரங்கமோ, சென்னையில் இருக்கும் நாரத கான சபா அரங்கமோ, அருணா சாய் ராம் பாடுகிறாரா? அரங்கம் நிறைந்து விடுகிறது. கச்சேரி தொடங்கிய பின்பும்கூட எப்படியாவது ஒண்டிக் கொண்டு கேட்க ஓர் இடம் கிடைக்காதா, டிக்கெட் கிடைக்காதா என்று ரசிகர்கள் வெளியே காத்திருக்கிறார்கள். எல்லோரும் கேட்கும்படியான, ஒரு ஜனரஞ்சகமான, கணீரென்ற, அதே சமயம் குழைவு குறையாத குரலில், மனம் குளிர கர்நாடக இசையைத் தந்துகொண்டிருக்கிறார் அருணா சாய்ராம். &lt;br /&gt;&lt;br /&gt;பம்பாயில் பிறந்தவர். தாயார் ராஜலஷ்மி சேதுராமன் தான் இவருடைய முதல் குரு. அதற்குப் பிறகு,  சங்கீத கலாநிதி டி. பிருந்தா, வீணை வித்வான் கே. எஸ். நாராயணசாமி, டைகர் வரதாச்சாரியாரின் சிஷ்யர் திரு. ஏ.எஸ். மணி, டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. டி. ஆர். சுப்ரமணியம், திரு. எஸ். ராமச்சந்திரன், பத்மபூஷண்  பால முரளி கிருஷ்ணா ஆகியோரிடம் சங்கீதம் கற்றிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;சங்கீத கலாரத்னா, சங்கீத கலாமணி... உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். தற்போது இவருக்குக் கிடைத்திருக்கும் ‘பத்மஸ்ரீ’ விருது இவருடைய இசைப் பணிக்குக் கிடைத்திருக்கும் மிக முக்கியமான விருது. &lt;br /&gt;&lt;br /&gt;இனி அவருடன் நேர்காணல்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நீங்க பாடற பாணி மத்தவங்களோட பாணியிலருந்து ரொம்ப வித்தியாசமாகவும் எல்லாரும் விரும்பக்கூடியதாகவும் இருக்கிறது. அதற்கு என்ன காரணம்? &lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: என்னுடைய ஆரம்பப் பாடத்தை நான் என் தாயார்கிட்டதான் கத்துக்கிட்டேன். அப்போ ‘ஆலத்தூர் பிரதர்ஸ்’னு கர்நாடக இசையில பெரிய வித்வான்கள் இருந்தாங்க. அவங்களோட சிஷ்யை எங்க அம்மா. என்னோட பத்தாவது வயசு வரைக்கும் அவங்க ஓரளவுக்கு எனக்குக் கத்துக் குடுத்தாங்க. ஓரளவுக்குன்னா, ஆரம்பப் பாடங்கள், அகார சாதகங்கள், சரளி, ஜண்டை, கீதங்கள் ரொம்ப பால பாடங்கள் இருக்குல்லையா? ஏ,பி,சி,டி... மாதிரி. இதையெல்லாம் நான் என் அம்மாகிட்டதான் கத்துக்கிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: எந்த வயசுல கத்துக்க ஆரம்பிச்சீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: மூணு, நாலு வயசுலயே ஆரம்பிச்சாச்சு. எங்க வீட்ல காலையில எந்திரிச்சதும் வேலையெல்லாம் முடிச்சுட்டு, பாடினாதான் பால், காபின்னு ஏதாவது குடுப்பாங்க. அப்பிடி ஒரு பழக்கம். அதனால, கர்நாடக இசையில ஏ,பி,சி,டி, ... கேட், ரேட், மேட்... திஸ் இஸ் எ பால், திஸ் இஸ் எ பேட்... அந்த லெவல் வரைக்கும் அம்மா சொல்லிக் குடுத்துட்டாங்க. அதுக்கு மேலயேன்னு கூடச் சொல்லலாம். நூறு வர்ணங்கள், நூறு கீர்த்தனங்கள் வரைக்கும் சொல்லிக் குடுத்துட்டாங்க. அந்தக் கட்டத்துலதான் பிருந்தாம்மா என்னோட பத்தாவது வயசுல என்னோட வீட்டுக்கு வந்தாங்க. அவங்க எங்க வீட்லயே தங்கும்படியான ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. எங்க வீட்டுக்கு அடிக்கடி பெரிய பெரிய வித்வான்கள் வருவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அப்போ நீங்க எங்க இருந்தீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: பம்பாய்ல. நான் பிறந்தது பம்பாய், வளர்ந்ததும் பம்பாய்தான். என்னோட அப்பாவுக்கு பூர்வீகம் திருவாரூர். அம்மாவுக்கு திருச்சிராப்பள்ளி. பக்கா தமிழர்கள். ஆனா, கல்யாணத்துக்கப்புறம் அப்பா பம்பாய்ல செட்டில் ஆனதால அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனா, வீடு முழுக்க எங்களுக்கு தமிழ்நாட்டுக் கலாசாரம்தான். காலையில எந்திரிச்சுப் பாடுறதுலருந்து சமைக்கிறது வரைக்கும் எல்லாமே தமிழ்நாட்ல எப்பிடிப் பண்ணுவோமோ அப்படித்தான் நடக்கும். தமிழ்நாட்லருந்து வர்ற எந்தப் பெரியவங்களா இருந்தாலும், அது கர்நாடக சங்கீத வித்வான்களா இருந்தாலும் சரி, நாட்டியக் கலைஞர்களா இருந்தாலும் சரி, பேச்சாளர்களா இருந்தாலும் சரி, நாடகக் கலைஞர்களா இருந்தாலும் சரி எங்க வீட்டுக்கு வந்துட்டுதான் போவாங்க. அந்த மாதிரி, என் பெற்றோர் இருந்தாங்க. அம்மா, அப்பா ரெண்டுபேருக்குமே கலைகள்ல ஆர்வம் இருந்தது. அப்போ பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம், நேர்ல அவ்வளவு ஈஸியா பார்க்க முடியாதவங்க எல்லாம் எங்க வீட்டுக்கு வருவாங்க. அரியக்குடி சார், மதுரை மணி, எம்.எஸ். அம்மா, பால சரஸ்வதி அம்மா, டி.ஆர். மகாலிங்கம், கி.வா.ஜ., இந்த மாதிரி எல்லாருமே எங்க வீட்டுக்கு வருவாங்க. கீரன் சார் வந்தார்னா எங்க வீட்லயே ஒரு பிரசங்கம் நடத்துவார். நாற்பது அம்பது பேர் உக்காந்து கேட்டுட்டுப் போவாங்க. இது ஒரு பக்கம் நடக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் நார்த் இண்டியன் மியூசிசியன் வருவாங்க. நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலிதான். அப்பா ரயில்வேலதான் வேலையா இருந்தார். ஆனா, அது என்னவோ ஒரு கலை ஆர்வம். கூடவே விருந்தோம்பல் பண்பு. யாரையுமே நாம அன்பா வீட்டுக்கு அழைச்சு, நல்லா விருந்தோம்பல் செஞ்சோம்னா அந்த அன்புக்கு யாருமே கட்டுப்படுவாங்க இல்லையா? அது. நான் இவங்க எல்லாரையும் பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனா, யார்கிட்டயும் கத்துக்கலை. பிருந்தாம்மா அப்போ பெரிய பெரிய ஆர்ட்டிஸ்டுகளுக்கு சொல்லித் தரத்தான் வந்திருந்தாங்க. இடைச் செருகலா நானும் அவங்ககிட்ட கத்துக்க ஆரம்பிச்சேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அவங்ககிட்ட கத்துக்க ஆரம்பிச்சப்போ எனக்கு பத்து, பதினோரு வயசு இருக்கும். அதுவும் வருசம்பூரா கிடையாது. வருசத்துக்கு மூணு, நாலு மாசம் கத்துப்பேன். மீதம் இருக்கற நாள் பூரா அவங்க சொல்லிக் குடுத்ததை பிராக்டீஸ் பண்ணணும்.  திரும்ப மெட்ராஸ் போயிடுவாங்க. திரும்ப ஏப்ரல், மே, ஜூன் இந்த மூணு மாசம் வருவாங்க.   இப்பிடித்தான் நான் அவங்க கிட்ட கத்துக்கிட்டேன். இப்போ நான் அவங்க பாணியில பாடுறது இல்லன்னு சொல்றீங்க இல்லையா? முதல்ல பிருந்தாம்மா பாணி என்னன்னு பாப்போம். அவங்களோடது அழுத்தமான சங்கீதம். அதாவது அடி வயித்துலருந்து பாடறது. மொதந்துண்டு பாடறது, மேலெழுந்தவாரியாப் பாடறது இதெல்லாம் அவங்களோட பாணில கிடையாது. அழுத்திப் பிடிச்சுப் பாடறது அவங்களோட தனித் தன்மை. அவங்க எது பாடினாலும் ரொம்ப ஸ்லோவா இருக்கும். ஃபாஸ்ட்டா எல்லாம் பாட மாட்டாங்க. அதி விளம்பத்துல அகாரம் எல்லாம் வரும். அவுட் வாணம் மாதிரி. ஆனா, பேஸிக்கா வெரி ஸ்லோ மியூசிக். அது ஒரு இண்டெலக்ச்சுவல் மியூசிக். இப்போ இலக்கியத்துல ஆஸ்கர் ஒயில்ட், ஜார்ஜ் பெர்னாட்ஷாவோட ரைட்டிங்க்ஸை எல்லாம் எல்லாரும் படிக்க மாட்டாங்க. சில பேருதான் படிப்பாங்க. இதே வுட் ஹவுஸை எல்லாரும் படிப்பாங்க. பிருந்தாம்மா அது மாதிரி ஒரு லெவல்ல இருக்கறவங்க. செம்மங்குடி மாமா சொல்லுவார்: ‘பிருந்தாவா! அந்தம்மா பெரியாளாச்சே!’ன்னு. அந்த அளவுக்கு அவரே மதிப்புக் குடுக்கக்கூடிய ஒரு ஆர்ட்டிஸ்ட் பிருந்தாம்மா. அவங்ககிட்ட நான் பாடம் படிச்சது பெரிய கொடுப்பினை. &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குப் பிறகு நான் கச்சேரி செய்ய ஆரம்பிச்சிட்டேன். பல வருசங்கள் ஓடிப் போச்சு. நான் சங்கீதத்துல என்னோட வார்ப்புன்னு சில விஷயங்களைப் பண்ணியிருக்கேன். கிரியேட்டிவ் சைடுல. ஏன்னா, எந்த குருவும் தன்னோட கார்பன் காப்பியா சிஷ்யன் இருக்கணும்னு விரும்ப மாட்டாங்க. சிஷ்யன் தன்னோட மனசை தானே தேடிக்கணும்னுதான் எந்த நிஜமான குருவும் விரும்புவாங்க. அப்பிடித்தான் எங்க பிருந்தாம்மாவும். என்னை அவங்க வளத்தப்பவே அப்பிடியான ஒரு மைண்டோடதான் வளத்தாங்க. கிருதிகள் மட்டும்தான் சொல்லித் தருவாங்க. கற்பனை சங்கீதத்தை சொல்லித் தர மாட்டாங்க. ராகம் பாடறப்போ ஒரு கற்பனை வேணும். ஸ்வரத்தோட பாடறப்போ ஒரு கற்பனை வேணும். அதெல்லாம் பாடினாத்தான் அது சங்கீதம். வெறும் கிருதியை கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிச்சா அது சங்கீதம் கிடையாது. பிருந்தாம்மா கிருதியை கரெக்டா சொல்லித் தருவாங்க. ராகம் பாடறப்போ சொல்லித் தர மாட்டாங்க. பக்கத்துலயே உக்காந்திருப்பாங்க. ‘பாடு!’ம்பாங்க. அந்த ராகத்தை நான் பாடும்போது ‘ம்! ம்!’னு என்னை மேல மேல பாடச் சொல்லுவாங்களே தவிர, ‘நான் பாடறேன். என் பின்னாடியே பாடு’ன்னு அந்த கற்பனை சங்கீதத்தை சொல்லித் தர மாட்டாங்க. ஏன்னா நம்ம மனசைத் தூண்டி விடணுங்கறதுக்காக. இதுதான் அவங்க சொல்லிக் குடுக்கற வழி. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போ எனக்கு ஒரு own thingking வந்துடுச்சு. அதை அவங்களேதான் வளத்துவிட்டாங்க. அதோட எனக்கு மத்த influcences இருந்தது. பம்பாய்ல இருந்ததால மராட்டி சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம்லாம் நிறையா கேட்டேன். வெஸ்டர்ன் மியூசிக், பக்தி சங்கீதமும் நிறையா கேட்டேன். எங்க வீட்ல அப்பப்போ சம்பிரதாய பஜனை நடக்கும். ஒரு பக்கம் பிருந்தாம்மா சொல்லிக் குடுத்துக்கிட்டு இருந்தாங்க. பஜனை பாடற எல்லாரும் எங்க வீட்டுக்கு வருவாங்க. பிருந்தாம்மா ஒரு aspect. அவங்க எனக்கு குரு. ஆனா, இந்த மத்த விஷயங்கள் எல்லாமே என்னை பாதிச்சிருந்தது. பிருந்தாம்மா சொல்லிக் குடுத்த சங்கீதமும் இது எல்லாமும் சேந்து புது விதமா ஒரு சங்கீதத்தை நான் பாடறதுக்குக் காரணமா ஆச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அப்போ சங்கீதத்துல நீங்க ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: உருவாக்கியிருக்கேன்னா, எனக்கு வேற வழியில்ல. என் லைஃப்ல எனக்கு கிடைச்ச influcencesஐ நான் எடுத்து, அதை ஒரு வடிவமா அமைச்சுத்தானே நான் குடுக்க முடியும்? என்னால என்ன முடியறதோ, அதைத்தானே நான் செய்ய முடியும்? ஆனா, இப்போ நான் ஒரு ‘அபங்’ பாடறேன்னு வச்சுக்கோங்க. அதுக்கு ரொம்ப தம் பிடிக்கணும். அடி வயித்துலருந்து பாடணும். ஃபுல் ஃபோர்ஸ்ல பாடணும். அப்போதான் அந்த passion கேக்கறவங்களை பாதிக்கும். பிருந்தாம்மாவோட ட்ரெயினிங் இல்லைன்னா, அப்படி பாட முடியாது. அதே சமயம் அவங்களோட ஜெராக்ஸ் காப்பியாவும் நான் இருக்கக் கூடாதுங்கறது என் மனசுல இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போ தியாகராஜ சுவாமியை எடுத்துக்கோங்க. மும்மூர்த்திகள்ல ஒருத்தர். அதுலயுமே அவரோட ரீச் ரொம்ப அதிகம். அவரை பாதிச்சது யாரு? பத்ராச்சல ராமதாஸரோட கிருதிகள், புரந்தரதாஸரோட கிருதிகள் இதையெல்லாம் கேட்டுக் கேட்டுத்தான் வளந்தார். ஆனாலும் அவர் சங்கீதத்துல வேற ஒரு ஸ்டைலைக் கொண்டு வந்தார். அவரோட சொந்த கற்பனையை சங்கீதத்துல வச்சார். அதனாலதான் அவரோட ‘ஓ! ரங்கசாயி!’ தனித்துவமா இருக்கு. ‘கிரிராஜ சுதா’ அதுவும் தனித்துவமா இருக்கு. உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள் தனித்துவமா இருக்கு. ரொம்ப ரொம்ப சிம்பிளா Folk song கூடப் போடறார். அவர் பத்ராச்சல ராமதாஸர் மாதிரியே பாடணும்னு நினைச்சிருந்தா, இவ்வளவு பெரிய கிரேட் ஆளா வந்திருக்க முடியுமா? Being part of an institution is one approach. Trying to become an institution is another approach. I am going for the second. And I'm attempting. அதோட,  We should exceed our limit. இல்லையா? அதைத் தாண்டிப் போகணுமே! நீங்க அதுல succeed பண்ணணும்னு அவசியம் இல்ல. அதை நீங்க ட்ரை பண்ணினாலே உங்களுக்கு மார்க்ஸ் உண்டு.  முயற்சிக்கே நல்ல அங்கீகாரம் உண்டு. ‘இவங்க ஏதோ பண்ணணும்னு முயற்சி பண்றாங்க’ன்னு ரசிகர்கள் ஒப்புத்துப்பாங்க. ரசிகர்களோட ஒப்புதல் வேணுமே! அதுக்குத்தான் நான் இப்படிப் பாடறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நீங்க ஏன் ‘பதம்’ பாடறதில்ல?&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்:  பதம்ங்கறது சிருங்கார பாவம் கொண்டது. சிருங்கார ரஸம்தான் அதோட பிரதான எமோஷன். சங்கீதபூர்வமா பாக்கும்போது பதம்ங்கறது பெரிய விஷயம். சமீப காலமா பொது இடங்கள்ல பெரும்பாலானவங்க அதைப் பாடறதில்ல. ஏன்னா, அது ரொம்ப இழுத்து... வரும். அதி விளம்ப காலத்துல அப்பிடியே மூச்சு நிக்கறாப்ல இருக்கும். ஒரு வார்த்தையை சொல்லிட்டு, அடுத்த வார்த்தையை சொல்றதுக்குள்ள, நீங்க ‘போய்ட்டு வர்றேம்மா’ன்னு எழுந்து போயிடுவீங்க. அவ்வளவு ஸ்லோவான இசை. அதே சமயம் அழகான இசை. ஒண்ணு, ரொம்ப குவாலிஃபிகேஷன் இருந்தாத்தான் அதைப் பாட முடியும். இரண்டாவது, அதுல இருக்கற சிருங்கார பாவம். இடம், பொருள், ஏவல் இதைப் பொறுத்துதான் நாம எந்தக் காரியத்தையும் செய்யணும். நாம எங்க இருக்கோம்? யாருக்காக எதைப் பண்றோம்? அப்பிடிங்கறதை யோசனை பண்ணி எதையும் நாம வாழ்க்கையில செய்யணும். இப்போ நீங்களே நாலு பேரு இருக்கறப்போ ஒரு மாதிரியா பேசுவீங்க. ரெண்டு பேர் மட்டும் இருக்கறப்போ வேற மாதிரிப் பேசுவீங்க. இல்லையா? ஏன்னா, ஒரு கூட்டம் இருக்கறப்போ அதனோட வார்ப்பு வேற. ரெண்டு பேர் மட்டும் இருக்கறப்போ இருக்கற intimacy வேற. ஒரு நாள் பிருந்தாம்மாவோட நினைவு நாளுக்காக வீட்லயே பாடினேன் நான். நண்பர்கள், ஆர்வலர்களைக் கூப்பிட்டு சும்மா வீட்லயே பாடினேன். ரொம்ப நெருக்கானவங்க மட்டும்தான் இருந்தாங்க. அன்னிக்கி நான் நிறைய பதம் பாடினேன். அந்த மாதிரி ஒரு intimate crowd ல இதனோட பொருள், அர்த்தத்தை விகல்பமா எடுத்துக்காம, அந்த மியூசிக்கை அங்கீகரிக்கறவங்க மத்தியில நான் பாடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்காங்க. அதுல எல்லாத் தரப்பு மக்களும் இருக்காங்க. சங்கீதம் தெரியாதவங்களும் வர்றாங்க. சங்கீதம் தெரிஞ்சவங்களும் வர்றாங்க. ‘இவங்க என்ன புதுசா கர்நாடக சங்கீதம் பாடிறப் போறாங்க?’ன்னு கேக்கறதுக்கு வர்றவங்களும் வர்றாங்க. நையாண்டி பண்றதுக்கு வர்றவங்களும் வர்றாங்க. பல தரப்பட்ட Groups அது. எல்லாரையும் நாம திருப்திபடுத்தியாகணும். விமர்சகர்களையும் திருப்திபடுத்தியாகணும். அவங்க இருக்கறதாலதான் நம்மளோட தரம் (Standard) உயர்ந்துண்டே போகுது. அவங்க இல்லன்னா, நம்ம தரம் கீழ போயிடும்.‘இதை சரியாப் பாடலை, அதை சரியாப் பாடலை. இதை இப்படிப் பாடணும்’ அப்பிடின்னு சொல்றதுக்கு நாலுபேரு வேணும். காம்போஜில சரியா அந்த இடத்தைப் பிடிக்கலைன்னு சொல்றதுக்கு நாலு பேரு வேணும். அப்பதான் நாம எந்தக் காரியத்தையும் சரியா செய்வோம். இல்லையா? அவங்களும் இருப்பாங்க. அதனால, இத்தனைபேரையும் திருப்திபடுத்தணுங்கறப்போ, சில விஷயங்களை தவிர்த்துடனும். நான் ‘பதம்’ நிறையா பாடறேன். தனி இடங்கள்ல. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இப்போ நிறைய பேர் இசை விமர்சனம் பண்றாங்க. வெகுஜனப் பத்திரிகைகள்ல சங்கீத சீசன் சமயத்துல நிறைய இசை விமர்சனங்கள் வருது. அந்த இசை விமர்சகர்களோட தகுதி தெரியாம, அவங்களோட விமர்சனங்களுக்கு உடன்படறது சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: என்னோட வாழ்க்கையில நான் பிரபலமானது ரொம்ப லேட். பல வருஷங்களா நான் இருபது, முப்பது, நாப்பது பேருக்காக பாடினவ. இதை சொல்றதுக்கு நான் வெட்கப்படலை. நான் அப்படி வளந்தவதான். என் கச்சேரிக்கு ரொம்ப குறைவாத்தான் ஆட்கள் வருவாங்க. அப்பவும் எனக்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. விமர்சகர்கள் அப்பவும் வருவாங்க. நிறைய கமெண்ட்ஸும் எழுதியிருக்காங்க. நான் ஒவ்வொரு கமெண்ட்டையும் சீர்தூக்கிப் பாத்து, என்னை நானே ப்ரூவ் பண்ணினதாலதான் என்னால இந்த லெவலுக்கே வர முடிஞ்சது.  அது வேற காலக்கட்டம்தான். இருந்தாலும், அப்போ அந்த விமர்சகர்கள் பல விஷயங்களை எனக்கு சுட்டிக் காட்டினாங்க. ரொம்ப constructive வா அதை நான் எடுத்துக்கிட்டு, வளந்து வந்திருக்கேன். அதனால நான் விமர்சகர்களுக்கு எப்பவுமே ஒரு இடம் குடுத்து வச்சிருக்கேன். They play a good role. அதே சமயம், அவங்களுக்கு அந்த இசை ஞானம் இருக்கத்தான் வேணும்.  &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: சபாவுல பாடறப்போ, சில பேரைப் பாத்தாலே பாடறதுல இருக்கற ஈர்ப்பு போயிடும். ரொம்ப அலட்சியமா, எல்லாம் தெரிஞ்சது மாதிரி உக்காந்திருப்பாங்க. தப்புத் தப்பா தாளம் போடுவாங்க. அந்த மாதிரி சூழ்நிலைகள்ல நீங்க எப்படி உணர்வீங்க? &lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: இந்த மாதிரி விஷயங்களையும் நான் கடந்து வந்தவதான். ஆரம்பத்துல பாடறப்போ, நம்ம மனசுல ஒரு பயம் வந்து ஜிவ்வுன்னு உக்காந்துக்கும். அதையெல்லாம் தாண்டித்தான் வந்திருக்கேன். அதெல்லாம் இல்லாம வந்துடல. நம்மளை ரொம்ப எதிர்க்கறவங்க வந்து உக்காந்தா, அந்தக் கச்சேரி முழுக்கவே funk ஆயிடும். அவங்க ஒரு மூஞ்சியப் பாத்துட்டு, நமக்கு வர்றதுகூட வராமப் போயிடும். இதெல்லாம் நடந்திருக்கு. எல்லா சங்கீதக்காரங்க வாழ்க்கையிலயும் இதுமாதிரி நடந்திருக்கும். அந்த ஒரு முகம், நம்ம மனசுல இருக்கற அமைதியை முழுக்கக் கலைச்சி விட்டுடும். அப்படி எனக்கும் நடந்திருக்கு. இது ஏன்னு நான் யோசித்துப் பாத்தேன். நம்ப அதுக்கு முக்கியத்துவம் குடுக்கறதுனாலதான்னு எனக்குப் புரிஞ்சுது. குரு பிருந்தாம்மா ஒரு வார்த்தை சொல்லுவாங்க. அப்போ எனக்கு பத்துப் பதினஞ்சு வயசுதான். ‘மேடைல ஏறாத வரைக்கும் நமக்கு ஒண்ணுமே தெரியாது. கற்றது கை மண்ணளவு. அப்படிங்கறதையெல்லாம் அப்படியே மனசுல வச்சுக்கோ. மேடைல ஏறியாச்சுன்னா, நீ ஆள் வேற. அதை ஃபர்ஸ்ட் நீ புரிஞ்சுக்கோ. உனக்குத் தெரிஞ்சது ரொம்ப கம்மியா இருக்கலாம். ஒண்ணுமே தெரியாமக்கூட இருக்கலாம். மேடையில ஏறியாச்சுன்னா, நீதான் ராஜா, ராணி. உனக்குத் தெரிஞ்சதை தைரியமா நீ பாடிட்டு, கீழ இறங்கிடு. திரும்பப் பழைய படி ஆயிடு. இந்த தைரியம் இல்லன்னா, மேடையில ஏர்றதுக்கு நீ லாயக்கில்ல.’ அப்பிடின்னு சொல்லுவாங்க. அதை நான் ரொம்பக் கஷ்டப்பட்டு வரப் பண்ணிக்கிட்டேன். நான் ராஜா, ராணின்னு இல்லாட்டாகூட, மேடையில ஏறிட்டேன்னா நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? மானசீகமா, கதவெல்லாம் திறந்துவிட்டுக்கிட்டு, எனக்கு வேணுங்கற தெய்வங்கள், எனக்கு வேணுங்கற குருக்கள் எல்லாரையும் உள்ள கூப்பிட்டுவேன். என் மனசுலருந்து இதைச் சொல்றேன். மைக் டெஸ்ட் பண்ணிட்டுதான் நான் கச்சேரி தொடங்குவேன். மைக் டெஸ்ட் பண்றப்பவே, ‘கிருஷ்ணா! ராகவேந்திரசாமி! பாபா! எல்லாரும் வந்து உக்காந்துட்டீங்களா?’ன்னு மானசீகமா கேட்டுப்பேன். அப்புறம் எங்க அப்பா, அம்மா. அப்புறம் என் மாமனார். அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கார். நாம நம்பிக்கை வைக்கற எல்லாருமே நமக்குக் கடவுள்தான். அதனால அவங்களை எல்லாம் கூப்டு முன்னால உக்கார வச்சுடறது. அதுக்கப்புறம் ஏறி உக்காந்துச்சுன்னா, யாரையும் நான் பாக்கறதே கிடையாது. அதைப் பத்தி நான் கவலைப்படறதும் கிடையாது. ‘இதுதான் எனக்குத் தெரியும். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். இதை நான் உங்களுக்குப் பாடறேன்’னு நான் தைரியமா பாடிட்டு வந்துடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இப்போ ‘அபங்’ அதிகமாப் பாடறீங்க. எங்க கத்துக்கிட்டீங்க? எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: அபங் அதிகமா நான் பாடலை. ஒரு கச்சேரிக்கு ஒரு அபங்தான் நான் பாடறேன். பாடறதெல்லாம் கர்நாடகக் கச்சேரி. மும்மூர்த்திகளோட கிருதிகள், ராகம் தானம் பல்லவி, பாபநாசம் சிவனோட பாடல்கள், கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் இதெல்லாம் நான் பாடறேன். எல்லாம் பாடி முடிச்சுட்டு, கடைசியா 20 நிமிஷம் இருக்குல்ல? அதுல ஒரு ‘அபங்’தான் பாடறேன். ஏன் உங்களுக்கு நான் அதிகமா ‘அபங்’ பாடற மாதிரி தோணறதுன்னு நானும் யோசனை பண்ணிப் பாத்தேன். அந்த அபங் வந்து, cyclonic wave ஒண்ணு வரும்ல? வந்தா, அது மத்த எல்லா அலையையும் அடிச்சுட்டுப் போயிடும். அந்த மாதிரி, இந்த ‘அபங்’ எல்லாத்தையும் அடிச்சுட்டுப் போயிடறது. அதைப் பாடின உடனே, ஜனங்களுக்கு மத்ததெல்லாம் மறந்து போயிடறது. அது ‘அபங்’கோட  passion. அவங்களுக்கு ‘அபங்’தான் மனசுல நிக்கறது. நான் அபங்தான் பாடறேன்னு நினைக்கறாங்க. நான் பம்பாய்ல குழந்தையில இருந்து வளந்தவ இல்லையா? அங்க, எங்கயோ ஒரு இடத்துல யாரோ ஒருத்தர் இந்த ‘அபங்’கைப் பாடி, மனசுல அந்த ஆவி போயிடுச்சு. அது நான் விதிச்சதில்ல. சாமி விதிச்சது. அந்த விட்டல், பாண்டுரங்கனைக் குறிச்சுப் பாடறதுதான் ‘அபங்.’ மகாராஷ்ட்ராவுல இருக்கற பகவான். அவர் விஷ்ணு சொரூபம்தான். அந்த விட்டலை நோக்கிப் பாடறது. அந்த விட்டல் மூவ்மெண்ட்டே, பாமர ஜனங்களுக்கு பக்தி வரணுங்கறதுக்காக ஆரம்பிச்ச ஒரு மூவ்மெண்ட். 12-ம் நூற்றாண்டு, 14-ம் நூற்றாண்டுல. முதல்ல வந்தவர் ஞானேஸ்வர்ங்கற ஒரு துறவி. அவர்லருந்து ஆரம்பிச்சு, ஜனாபாய், துக்காராம், நாமதேவர்னு பலப் பல இசை மேதைகள் இருந்தாங்க. இவங்கள்ல ஒருத்தர் சக்கிலியர், ஒருத்தர் விவசாயி, ஒருத்தர் குயவர். இந்த மாதிரி சமூகத்தின் தரை மட்டத்துல இருக்கறவங்கதான் பெரிய துறவிகள் ஆனாங்க. படிப்பறிவே இல்லாத மக்களுக்கு, பக்தியினால அவங்க எப்படி ஒரு மேன்மையான நிலைய அடையலாம், அப்படிங்கறதுக்காக வந்த ஒரு மூவ்மெண்ட் அது. அதனால அதனோட வார்ப்புகள் ரொம்ப சிம்பிளா இருக்கும். ‘தீர்த்த விட்டலா, ஷேத்ர விட்டலா, தேவ விட்டலா, தேவ பூஜா விட்டலா’ இப்பிடி சொன்னா பாஷையே வேண்டமே! அப்படி ஒரு எளிமை. நான் தமிழ், நீ இந்தி, நீ மராத்தி... இது எல்லாத்தையும் தாண்டி அது போயிடறது. அதுனால மக்களுக்கு அது மனசுல நிக்குது. அதுதான் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நீங்க கர்நாடக இசையை யாருக்காவது சொல்லித் தர்றீங்களா? உங்களுக்கு ஸ்டூடண்ட்ஸ் யாராவது இருக்காங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: ஒருத்தருமே கிடையாது. ஏன்னா, என்னோட வாழ்க்கைக் கதை வேற மாதிரி. நான் ரொம்ப வருஷங்களுக்கு ஒரு ஹவுஸ் ஒயிஃபா இருந்துட்டு, ரொம்ப கம்மியா பாடிட்டு, என் குழந்தைகள் எல்லாம் வளந்த பிறகுதான், நான் நிறைய பாட ஆரம்பிச்சேன். அப்புறம்தான் சென்னைக்கு வந்தேன். இப்போ முழு மூச்சா, கடைசி அஞ்சு, ஆறு வருஷமா பாடிக்கிட்டு இருக்கேன். இருந்தது எந்த இடம், இப்போ இருக்கறது எந்த இடம்? அந்த பயணம் இருக்கில்லையா? More than full time ஒர்க் பண்ணலைன்னா இவ்வளவு குறுகிய காலத்துல எல்லாருக்கும் தெரியும்படியா ஆகியிருக்க முடியாது. பகவத் சங்கல்பம் இருந்தாத்தான் அது நடக்கும். அதோட அதுக்கு அப்படி ஒரு உழைப்பைத் தந்தாகணும். அப்படிச் செய்யும்போது, இப்போ சொல்லிக் குடுக்கறதுக்கான சூழலும், மன நிலையும் இல்லை. ஆனா, சீக்கிரமே அது வந்துடும்னுதான் நினைக்கிறேன். யாருக்கும் சொல்லிக் குடுக்காம நான் இந்த உலகத்தைவிட்டுப் போயிடமாட்டேன். நிச்சயமா அது நடக்கும். இப்போதைக்கு இந்த பெர்ஃபார்மன்ஸ் முக்கியமா இருக்கு. அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: கர்நாடக இசைங்கறது கச்சேரிகள்லயும், சீசன் டைம்லயும்தான் அதிகமாப் பேசப்படுது. கர்நாடக இசையை அதிகமா பரவாக்க என்ன செய்யணும்? அல்லது இப்போ இருக்கற நிலைமையே போதும்னு நினைக்கிறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: கர்நாடக இசைங்கறது ஒரு கிளாசிக்கல் ஆர்ட் ஃபார்ம். உலகத்துல எந்த எடமா இருந்தாலும் கிளாசிக்கல், கிளாசிக்கல்தான்.  அதுல ரொம்ப மாஸ் ரீச் கிடைக்கறது கஷ்டம். ஏன்னா, அதோட பர்ப்பஸ், இண்டலக்ச்சுவல் பியூப்பிள்ஸ்க்குதான். அதனால, அதனோட ரீச் ரொம்ப இருக்கணும்னு நாம எதிர்பார்க்கறது தப்பு. அதே சமயத்துல இது கொஞ்ச பேருக்கு மட்டும்தான்னும் நாம நினைக்க வேண்டியதில்ல. ‘அவங்களா வந்துதான் ரசிக்கணும். இல்லன்னா, நாம அதுக்காகக் கவலைப்பட வேண்டியதில்ல.’ அப்படின்னு நினைக்கறதும் தப்பு. ஏற்கெனவே கொஞ்சமாத்தான் போய் சேந்துண்டு இருக்கு. அதனால அதையும் நாம லிமிட் பண்ணினோம்னா, அது நம்மளோட தப்பு. அதனால, என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இதுக்கு என்ன செஞ்சுக்கிட்டு இருக்கேன்னுதான் நான் சொல்ல முடியும். அதோட கோட்பாடுகளை மீறாம இருந்துண்டே, புது ஆடியன்ஸை இதுக்குள்ள எவ்வளவு கொண்டுவரமுடியும் என்னால அப்படின்னு நான் முயற்சிதான் பண்றேன். அந்த முயற்சியில வந்ததுதான் பலப் பல விஷயங்களை நான் பாடறது. ஆனா அதுல அழகு இல்லாம இல்ல; அதுல தொன்மை இல்லாம இல்ல. அதே சமயத்துல இப்போ contemporoary யா இருக்கறதுல... அதைப் பாடி நீங்க கேக்கறப்போ, ‘என்ன இவ்வளவு மாடர்னா இருக்கே!’ அப்பிடின்னுதான் உங்களுக்குத் தோணும். அந்தக் காலத்துலயும் அட்வான்ஸா திங்க் பண்ணி நிறைய விஷயங்கள் பண்ணியிருக்காங்க. இதை நான் இப்போ வெளியில கொண்டு வர்றேன். அது என்னோட முயற்சி. அதுக்கு நல்ல பலன் இருக்கத்தான் செய்யுது. இப்போ சின்னச் சின்ன குழந்தைகள், ஒன்றரை வயசுக் குழந்தைகள், ஆறு மாசக் குழந்தைகள் எல்லாரையும் அவங்க பெற்றோர் தூக்கிட்டு வர்றாங்க. ‘அம்மா! உங்களோட ஃபேன்மா இவ!’ன்னு அவங்க சொல்றப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, அந்தக் குழந்தை ஒரு ‘மாடு மேய்க்கும் கண்ணே!’, ‘ஒரு விஷமக்காரக் கண்ணா!’ ஒரு அபங் பாட்டை கேக்கறதுக்காக ரெண்டு மணி நேரம் மத்ததை எல்லாம் கேக்கறது. ஒரு ராகம் தானம் பல்லவி, ஒரு தீட்சிதர் கிருதி கேக்கறது. நாளாவட்டத்துல அந்தக் குழந்தை தேறிடும். கர்நாடக இசை அதுக்குப் பிடிச்சுப் போயிடும். இல்லையா? என்னைப் பொறுத்தவரைக்கும், we must try to extend the borders, without over stretching the limits of this music. அப்படி செஞ்சா இந்த இசை பரவலாயிடும். முன்ன இருந்ததைவிட இப்போ எவ்வளவோ முன்னேறியிருக்கு கர்நாடக இசை. நிறையா பேர் கேக்கறாங்க இந்த இசையை. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அதுக்குக் காரணம் மீடியா. இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: நிச்சயமா. மீடியாவோட காண்ட்ரிபியூஷனை சும்மா சொல்ல முடியாது. அது ரொம்ப பெரிய பார்ட் வகிச்சிருக்கு. நாம செய்யறதைச் செய்யணும். மீடியா, அது செய்யறதை செய்யணும். சபாக்காரங்களும் அமைப்பாளர்களும் அவங்களோட வேலையைச் செய்யணும். எல்லாருமா சேர்ந்து செய்யும்போது அது பரவும். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நீங்க பாடற ராகம்,தானம், பல்லவி எல்லாமே கிருதிகளை அடிப்படையாக் கொண்டு இருக்கு. ஏன்? அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அருணா சாய்ராம்: இந்த ராகம், தானம், பல்லவிங்கறது இன்னொரு சப்ஜெக்ட். ஒரு காலகட்டத்துல ராகம், தானம், பல்லவிங்கறது ரொம்பப் பெரிய விஷயம். அது ஒரு இண்டலக்சுவல் மியூசிக். அதோட தாளக் கட்டு எல்லாம் ரொம்பக் கஷ்டமா இருக்கும். அதாவது, தாளத்தைப் போட்டுக்கிட்டு, அந்த சங்கதியைப் பாடும்போது, அப்பிடியே கத்தி முனையில நடக்கறா மாதிரி இருக்கணும். அப்போ அந்த ஆடியன்ஸ் எல்லாம், ‘ஆஹா! இவ்வளவு கஷ்டமான வேலையில, இப்போ பாரு இவரு தப்புப் பண்ணிடுவாரு’ ன்னு வெயிட் பண்ணிட்டே இருப்பாங்க. நாம தப்பு பண்ணாம பாடி முடிச்சிட்டாலே, பெரிய வெற்றி அது. அந்த மாதிரியான காலக் கட்டங்கள் இருந்தது. அது ஒரு கஷ்டமான எக்ஸர்சைஸ். ரொம்ப இண்டலக்ச்சுவலா, ரொம்ப மேத்தமேட்டிகலாவும் இருக்கணும். சுவையாவும் இருக்கணும். இத்தனையும் அந்தப் பல்லவியில வரணும். இப்போ அந்த மாதிரியான ஆடியன்ஸ் குறைவு. ஒரு கட்டத்துல ‘ராகம் தானம் பல்லவி’யும் ஒரு டிரை எக்ஸ்பீரியன்ஸா ஆயிடுச்சு.  அதனால நான் இதுல என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிப் பாத்தேன். அப்போ, இந்த ராகம், தானம், பல்லவியையும் இண்டரஸ்டிங்கா பண்ணலாம்னு எனக்குத் தோணிச்சு. இந்த மாதிரி நான் மட்டும் இல்ல. நிறையபேர் பண்ணியிருக்காங்க. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இருக்காரே, அவர் அந்தக் காலத்துலயே, ‘சங்கராபரணனை அழைத்தோடி வாடி! கல்யாணி! தர்பாருக்கு’ அப்படின்னு ஒரு பாட்டுப் பாடியிருக்கார். பல்லவிக்குள்ளயே ‘சங்கராபரணம்’, ‘தோடி’, ‘கல்யாணி’, ‘தர்பார்’னு எல்லா ராகமும் ஒரு வாக்கியத்துக்குள்ள வந்துடும். இது ஒரு பெரிய பியூட்டி. ஜனரஞ்சகம். அதே சமயம் பாண்டித்யம். இந்த மாதிரி ஒவ்வொரு காலக் கட்டத்துல ஒவ்வொருத்தர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நான் ‘ராகம் தானம் பல்லவி’ல ஒரு கதை இருக்கணும்னு நினைச்சேன். இது என்னோட அப்ரோச். அதுல கதையோ, ஒரு தீமோ, ஒ
